Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-2815

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2815. ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் இரண்டு நல்ல குணங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்று (மனனமிட்டு)ள்ளேன். (அவை)

அல்லாஹ் எல்லாவற்றிலும் எளிய முறையை விதியாக்கியுள்ளான். எனவே,கொல்லும்போதும் எளிய முறையில் கொல்லுங்கள். அறுக்கும்போதும் எளிய முறையில் அறுங்கள். உங்களில் ஒருவர் அறுப்பதற்கு முன் கத்தியைத் தீட்டிக்கொள்ளட்டும். அறுக்கப்படும் பிராணியை ஆசுவாசப்படுத்தட்டும்.


خَصْلَتَانِ سَمِعْتُهُمَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللَّهَ كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ، فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا – قَالَ غَيْرُ مُسْلِمٍ يَقُولُ: «فَأَحْسِنُوا الْقِتْلَةَ» – وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ، وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ، وَلْيُرِحْ ذَبِيحَتَهُ


Abu-Dawood-2811

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2811. இப்னு உமர் (ரலி) கூறினார்:

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள்) தொழும் திடலிலேயே குர்பானிப் பிராணிகளை அறுப்பவர்களாக இருந்தார்கள்…


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَذْبَحُ أُضْحِيَّتَهُ بِالْمُصَلَّى»

وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُهُ


Abu-Dawood-2117

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2117. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு மனிதருக்கு திருமணம் நடத்திவைக்கும் போது அவரிடம், நான் இந்த பெண்ணை உனக்கு திருமணம் முடித்துவைப்பதை நீர் பொருந்திக்கொள்கிறீரா? என்று (சம்மதம்) கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார். அந்த பெண்ணிடமும் நான் இந்த மனிதரை உனக்கு திருமணம் முடித்துவைப்பதை நீர் பொருந்திக்கொள்கிறீரா? என்று (சம்மதம்) கேட்டார்கள். அதற்கு அந்த பெண்ணும் ஆம் என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மஹர் எதையும் நிர்ணயிக்காமலேயே அவ்விருவருக்கும் திருமணம் முடித்துவைத்தார்கள். அந்த மனிதர் இல்லறவாழ்கையில் ஈடுபட்ட பின்பும் மஹர் தரவில்லை.

அவர் ஹுதைபியா உடன்படிக்கையில் கலந்துக்கொண்டவர். ஹுதைபியா உடன்படிக்கையில் கலந்துக்கொண்டவர்களுக்கு கைபர் போரில் பங்குண்டு என்ற வகையில் அவருக்கு ஒரு பங்கு கிடைத்தது.

அவரின் மரணத்தருவாயில், தன் அருகில் இருந்தவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் மஹர் எதுவும் நிர்ணயிக்காமலேயே எனக்கு இந்த பெண்ணை திருமணம் முடித்து வைத்தார்கள். நானும் இதுவரை மஹர் எதுவும் தரவில்லை. இப்போது கைபர் போரில் எனக்கு கிடைத்த பங்கை அந்தப்பெண்ணுக்கு மஹராக தருகிறேன், நீங்களே இதற்கு சாட்சி என்று கூறினார். அந்தபெண் கைபரின் பங்கை அவரிடம் மஹராக வாங்கி, அதை விற்று ஒரு

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: «أَتَرْضَى أَنْ أُزَوِّجَكَ فُلَانَةَ؟»، قَالَ: نَعَمْ، وَقَالَ لِلْمَرْأَةِ: «أَتَرْضَيْنَ أَنْ أُزَوِّجَكِ فُلَانًا؟»، قَالَتْ: نَعَمْ، فَزَوَّجَ أَحَدَهُمَا صَاحِبَهُ فَدَخَلَ بِهَا الرَّجُلُ وَلَمْ يَفْرِضْ لَهَا صَدَاقًا، وَلَمْ يُعْطِهَا شَيْئًا وَكَانَ مِمَّنْ شَهِدَ الْحُدَيْبِيَةَ وَكَانَ مَنْ شَهِدَ الْحُدَيْبِيَةَ لَهُ سَهْمٌ بِخَيْبَرَ فَلَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَوَّجَنِي فُلَانَةَ، وَلَمْ أَفْرِضْ لَهَا صَدَاقًا، وَلَمْ أُعْطِهَا شَيْئًا، وَإِنِّي أُشْهِدُكُمْ أَنِّي أَعْطَيْتُهَا مِنْ صَدَاقِهَا سَهْمِي بِخَيْبَرَ، فَأَخَذَتْ سَهْمًا فَبَاعَتْهُ بِمِائَةِ أَلْفٍ.


Abu-Dawood-2051

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

2051. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(மதீனாவில்) மர்ஸத் பின் அபூமர்ஸத் (ரலி) எனும் ஒரு மனிதர் இருந்தார். அவர் மக்காவிலிருந்து மதீனாவிற்குக் கைதிகளை (இரவோடு இரவாக) தூக்கி வந்து சேர்ப்பவராகவும் இருந்தார். (இவர் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்பு) மக்காவில் அனாக் என்று கூறப்படும் ஒரு விபச்சாரி இவருடைய காதலியாக இருந்தாள்.

மர்ஸத் பின் அபூமர்ஸத் அல்ஃகனவீ (ரலி) கூறுகிறார்:

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே!  நான் அனாக்கை  திருமணம் செய்துக் கொள்ளலாமா? என்று கேட்டேன். (அதற்கு பதலளிக்காமல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது (தான்),

விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள்

எனும் (அல்குர்ஆன்: 24:3) வசனம் இறங்கியது. உடனே அவர்கள் என்னை அழைத்து அதை என்னிடம் ஓதிக்காட்டி அவளை மண முடிக்காதே! என்று கூறினார்கள்.


أَنَّ مَرْثَدَ بْنَ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيَّ كَانَ يَحْمِلُ الْأَسَارَى بِمَكَّةَ، وَكَانَ بِمَكَّةَ بَغِيٌّ يُقَالُ لَهَا: عَنَاقُ وَكَانَتْ صَدِيقَتَهُ، قَالَ: جِئْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَنْكِحُ عَنَاقَ؟ قَالَ : فَسَكَتَ عَنِّي، فَنَزَلَتْ: {وَالزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ} [النور: 3] فَدَعَانِي فَقَرَأَهَا عَلَيَّ وَقَالَ: «لَا تَنْكِحْهَا»


Abu-Dawood-640

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

640. உம்மு ஸல்மா (ரலி­) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் கீழங்கி இல்லாத போது நீளமான சட்டையுடனும் ஒரு முக்காடு உடனும் தொழலாமா என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீளமான சட்டை (பெண்ணுடைய) பாதங்களை மறைக்கக் கூடிய அளவிற்கு இருந்தால் தொழுது கொள்ளலாம் என்று பதிலளித்தார்கள்.


أَنَّهَا سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَتُصَلِّي الْمَرْأَةُ فِي دِرْعٍ وَخِمَارٍ لَيْسَ عَلَيْهَا إِزَارٌ؟، قَالَ: «إِذَا كَانَ الدِّرْعُ سَابِغًا يُغَطِّي ظُهُورَ قَدَمَيْهَا»


Abu-Dawood-1413

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1413. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர்.

அவர்கள் ஸஜ்தா வசனத்தைக் கடக்கும் போது, “தக்பீர் சொல்லி ஸஜ்தா செய்வார்கள்”. அவர்களுடன் நாங்களும் செய்வோம்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

ஸுப்யான் ஸவ்ரீ அவர்கள் இந்த ஹதீஸின் காரணமாக மகிழ்ச்சியடைந்தார்கள் என அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் கூறியதாக அஹ்மத் பின் ஃபுராத் கூறினார்.

ஸுப்யான் ஸவ்ரீ அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம், அவர்கள் ஸஜ்தா வசனத்தை ஓதினால் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறி ஸஜ்தா செய்வார் என்பதினாலாகும் என்று அபூதாவூத் இமாம் கூறுகிறார்.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عَلَيْنَا الْقُرْآنَ، فَإِذَا مَرَّ بِالسَّجْدَةِ كَبَّرَ، وَسَجَدَ وَسَجَدْنَا مَعَهُ»


Abu-Dawood-555

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

555. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் இஷா தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவர் இரவின் நடுப் பகுதி வரை நின்று தொழுதவர் போலாவார். யார் சுப்ஹு தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவர் இரவு முழுவதும் நின்று தொழுதவர் போலாவார்.

அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)


«مَنْ صَلَّى الْعِشَاءَ فِي جَمَاعَةٍ كَانَ كَقِيَامِ نِصْفِ لَيْلَةٍ، وَمَنْ صَلَّى الْعِشَاءَ وَالْفَجْرَ فِي جَمَاعَةٍ كَانَ كَقِيَامِ لَيْلَةٍ»


Abu-Dawood-547

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 190

ஜமாஅத்தை விடுவதின் கடுமை.

547. “ஒரு நகரத்திலோ கிராமத்திலோ மூன்று பேர் இருந்து அவர்களுக்கு மத்தியில் தொழுகை நிலை நாட்டப் படவில்லையாயின் அத்தகையவர்களிடம் ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தாமல் விட மாட்டான். எனவே நீங்கள் ஜமாஅத்தை வலுவாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக ஓநாய் அடித்துத் தின்னுவது தனித்த ஆட்டைத் தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி)

ஜமாஅத்தை கடைபிடித்து கொள்க! என்றால் கூட்டுத் தொழுகையை கடைபிடித்துக் கொள்க! என்று விளக்கம் ஆகும் என ஸாயிப் கூறியதாக ஸாயிதா தெரிவிக்கின்றார்.


«مَا مِنْ ثَلَاثَةٍ فِي قَرْيَةٍ وَلَا بَدْوٍ لَا تُقَامُ فِيهِمُ الصَّلَاةُ إِلَّا قَدِ اسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ، فَعَلَيْكَ بِالْجَمَاعَةِ فَإِنَّمَا يَأْكُلُ الذِّئْبُ الْقَاصِيَةَ»


Abu-Dawood-3904

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3904. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் குறிகாரனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதுகிறானோ அவனும், மனைவியிடம் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவனும், மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவனும் இந்த முஹம்மது  (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) விட்டு நீங்கிவிட்டனர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«مَنْ أَتَى كَاهِنًا» قَالَ مُوسَى فِي حَدِيثِهِ «فَصَدَّقَهُ بِمَا يَقُولُ» ثُمَّ اتَّفَقَا «أَوْ أَتَى امْرَأَةً» قَالَ مُسَدَّدٌ: «امْرَأَتَهُ حَائِضًا أَوْ أَتَى امْرَأَةً» قَالَ مُسَدَّدٌ: «امْرَأَتَهُ فِي دُبُرِهَا فَقَدْ بَرِئَ مِمَّا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ»


Abu-Dawood-1894

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1894. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்து மனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«لَا تَمْنَعُوا أَحَدًا يَطُوفُ بِهَذَا الْبَيْتِ وَيُصَلِّي أَيَّ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ»


Next Page » « Previous Page