Category: அல்அதபுல் முஃப்ரத்

Al-Adab al-Mufrad

Al-Adabul-Mufrad-94

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

தந்தை தன் பிள்ளைக்கு நன்மை செய்வது பற்றிய பாடம்.

 

அவர்கள் தங்கள் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு நன்மை செய்ததால் அல்லாஹ் அவர்களை ‘நல்லோர்கள்’ (அப்ரார்) என்று அழைக்கின்றான். அதேபோல் உங்கள் பெற்றோர்கள் மீது உங்களுக்கு கடமைகள் உள்ளது. அதேபோல உங்கள் பிள்ளைகள் மீதும் உங்களுக்கு கடமைகள் உள்ளது.

அறிவிப்பவர் : இப்னு உமர்


إِنَّمَا سَمَّاهُمُ اللَّهُ أَبْرَارًا، لِأَنَّهُمْ بَرُّوا الْآبَاءَ وَالْأَبْنَاءَ، كَمَا أَنَّ لِوَالِدِكَ عَلَيْكَ حَقًّا، كَذَلِكَ لِوَلَدِكَ عَلَيْكَ حَقٌّ


Al-Adabul-Mufrad-92

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

தந்தையின் நற்பண்புகள் மற்றும் அவர் தன் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய நன்மைகள் பற்றிய பாடம்.

நல்லறங்கள் என்பது அல்லாஹுவிடமிருந்து வருவதாகும். நற்பண்புகள் என்பது தன் பெற்றோரிடமிருந்து வருவதாகும் என்று அவர்கள் (மக்கள்) கூறுவார்கள். என்று தன் தந்தை கூறியதை கேட்டார்.

அறிவிப்பவர்: நுமைர் இப்னு அவ்ஸ்.


الصَّلاَحُ مِنَ اللَّهِ ، وَالأَدَبُ مِنَ الآبَاءِ


Al-Adabul-Mufrad-83

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

தன் பெண் பிள்ளைகள் மரணிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதை வெறுப்பவர் பற்றிய பாடம்.

இப்னு உமர் (ரலி) அவர்களுடன் ஒரு மனிதர் இருந்தார். அவருக்கு பெண் குழந்தைகள் இருந்தார்கள். அவர் அந்த பெண் பிள்ளைகள் மரணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எனவே இப்னு உமர் (ரலி) அவர்கள் அவரிடம் கோபம் கொண்டு: “நீயா அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குகிறாய்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


أَنَّ رَجُلًا كَانَ عِنْدَهُ، وَلَهُ بَنَاتٌ فَتَمَنَّى مَوْتَهُنَّ، فَغَضِبَ ابْنُ عُمَرَ فَقَالَ: أَنْتَ تَرْزُقُهُنَّ؟


Al-Adabul-Mufrad-80

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட தன் பெண் பிள்ளையை பராமரிப்பவரின் சிறப்பு.

80. மாபெரும் தர்மம் எதுவென்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா ?” என்று நபி (ஸல்) அவர்கள் ஷுராகா பின் ஜுஃஷும் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர், “ஆம்” (அறிவியுங்கள்) அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்களே வாழ்வாதாரத்திற்கு ஒரே வழி என இருக்கும் நிலையில் உங்கள் பெண் பிள்ளை உங்களிடம் திருப்பி அனுப்பப்படும் போது அவளுக்கு செலவு செய்வதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷுராகா பின் மாலிக் பின் ஜுஃஷும் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِسُرَاقَةَ بْنِ جُعْشُمٍ أَلَا أَدُلُّكَ عَلَى أَعْظَمِ الصَّدَقَةِ، أَوْ مِنْ أَعْظَمِ الصَّدَقَةِ؟» قَالَ: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «ابْنَتُكَ مَرْدُودَةٌ إِلَيْكَ، لَيْسَ لَهَا كَاسِبٌ غَيْرُكَ


Al-Adabul-Mufrad-74

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

74.


قَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: «مِمَّنْ أَنْتَ؟» قُلْتُ: مِنْ تَيْمِ تَمِيمٍ، قَالَ: مِنْ أَنْفُسِهِمْ أَوْ مِنْ مَوَالِيهِمْ؟ قُلْتُ: مِنْ مَوَالِيهِمْ، قَالَ: فَهَلَّا قُلْتَ: مِنْ مَوَالِيهِمْ إِذًا؟


Al-Adabul-Mufrad-62

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

62. ஒரு மனிதன் தனக்கோ அல்லது தனது குடும்பத்தாருக்கோ செலவு செய்தால் அதற்கு அல்லாஹ் கூலி வழங்காமல் இருப்பதில்லை. உங்களை சார்ந்து இருப்பவரிடமிருந்து துவங்குங்கள். பிறகு எஞ்சியதை உங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் பின்னர் அதற்கு அடுத்த நிலை உறவினர்களுக்கும் செலவு செய்யுங்கள்.

என இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.


مَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى نَفْسِهِ وَأَهْلِهِ يَحْتَسِبُهَا إِلَّا آجَرَهُ اللَّهُ تَعَالَى فِيهَا، وَابْدَأْ بِمَنْ تَعُولُ، فَإِنْ كَانَ فَضْلًا فَالْأَقْرَبَ الْأَقْرَبَ، وَإِنْ كَانَ فَضْلًا فَنَاوِلْ


Al-Adabul-Mufrad-47

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

உறவுகளை இணைத்து வாழ்வது மற்றும் அதன் அவசியம் பற்றிய பாடம்.

தன் பாட்டனார் கூறியதாக குலைப் இப்னு மன்ஃபா என்பவர் அறிவிக்கிறார்: அல்லாஹுவின் தூதரே நான் யாருக்கு நன்மை செய்ய வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் : உன் தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் பிறகு உனது கட்டுப்பாட்டில் இருக்கும் உனக்கு உரிமை உடையவருக்கும் (நன்மை செய்ய வேண்டும்). மேலும் உறவுகள் என்பது இணைக்கப்பட வேண்டியவைகள் ஆகும் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : குலைப் இப்னு மன்ஃபா


قَالَ جَدِّي : يَا رَسُولَ اللَّهِ ، مَنْ أَبَرُّ ؟ قَالَ : أُمَّكَ وَأَبَاكَ ، وَأُخْتَكَ وَأَخَاكَ ، وَمَوْلاَكَ الَّذِي يَلِي ذَاكَ ، حَقٌّ وَاجِبٌ ، وَرَحِمٌ مَوْصُولَةٌ .


Al-Adabul-Mufrad-45

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஒரு மனிதர் தனது தந்தையை பெயர் சொல்லி அழைக்கக் கூடாது அவருக்கு முன்னால் அமரவோ நடக்கவோ கூடாது என்பது பற்றிய பாடம்.

நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் வெளியே சென்றோம் அப்போது அவருக்கு ஸாலிம் என்பவர் ” அப்துர் ரஹ்மானுடைய தந்தையே உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்று முகமன் கூறினார்.
அறிவிப்பவர் : ஷஹர் இப்னு ஹவ்ஷப்


قَالَ : خَرَجْنَا مَعَ ابْنِ عُمَرَ ، فَقَال لَهُ سَالِمٌ : الصَّلاَةَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ.


Al-Adabul-Mufrad-43

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நேசம் என்பது அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டியது என்பது பற்றிய பாடம்.

நான் கூறுவதே உனக்கு போதுமானதாகும்
“நிச்சயமாக நேசம் என்பது அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டியதாகும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர்களில் ஒருவர் கூறினார்.
அறிவிப்பவர் : அபூபக்கர் இப்னு ஹஸம்


قَالَ : كَفَيْتُكَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ : إِنَّ الْوُدَّ يُتَوَارَثُ


Al-Adabul-Mufrad-42

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

தனது தந்தை இணைத்து வாழ்ந்த உறவினருக்கு நன்மை செய்தல்.

42 .

…நான் அம்ர் இப்னு உஸ்மான் என்பவருடன் மதினா பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். அப்போது தனது சகோரனின் மகனின் மீது சாய்ந்த நிலையில் அப்துல்லாஹ் இப்னு ஸல்லாம் எங்களை கடந்து சென்றார். பின்னர் அவையை விட்டு வெளியேறினார். அவர் மீது அக்கறையுடன் அவர்களின் பக்கம் திரும்பி. அம்ர் இப்னு உஸ்மான் அவர்களே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று இரண்டு அல்லது மூன்று முறை கேட்டுவிட்டு. எவன் முஹம்மது நபி (ஸல்) அவர்களை உண்மையை கொண்டு அனுப்பினானோ அவன் மீது ஆணையாக அவனுடைய வேதத்தில் உள்ளது (என்று இரண்டு அல்லது மூன்று முறை கூறிவிட்டு): “உன் தந்தை இணைத்து வாழ்ந்த உறவுகளை நீ துண்டிக்க வேண்டாம் அது உனது ஒளியை அணைத்து விடும்” என்று தனது தந்தை உபாதா அவர்கள் கூறியதாக ஸஃத் பின் உபாதா அறிவித்தார்.


كُنْتُ جَالِسًا فِي مَسْجِدِ الْمَدِينَةِ مَعَ عَمْرِو بْنِ عُثْمَانَ ، فَمَرَّ بِنَا عَبْدُ اللَّهِ بْنُ سَلاَّمٍ مُتَّكِئًا عَلَى ابْنِ أَخِيهِ ، فَنَفَذَ عَنِ الْمَجْلِسِ ، ثُمَّ عَطَفَ عَلَيْهِ ، فَرَجَعَ عَلَيْهِمْ فَقَالَ : مَا شِئْتَ عَمْرَو بْنَ عُثْمَانَ ؟ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا ، فَوَالَّذِي بَعَثَ مُحَمَّدًا صلى الله عليه وسلم بِالْحَقِّ ، إِنَّهُ لَفِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ ، مَرَّتَيْنِ : لاَ تَقْطَعْ مَنْ كَانَ يَصِلُ أَبَاكَ فَيُطْفَأَ بِذَلِكَ نُورُكَ


Next Page » « Previous Page