Category: நஸயீ குப்ரா

As-Sunan al-Kubra

Kubra-Nasaayi-10648

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

10648. லைலத்துல் கத்ர் இரவு எந்த இரவு என்பதை நான் அறிந்தால் அதில் அல்லாஹ்விடம் அதிகமாக மன்னிப்பையும், உடல் ஆரோக்கியத்தை தான் நான் கேட்பேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)


«لَوْ عَلِمْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ لَكَانَ أَكْثَرَ دُعَائِي فِيهَا أَنْ أَسْأَلَ اللهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ»


Kubra-Nasaayi-10647

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10647.


قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَرَأَيْتَ إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ، مَا أَقُولُ فِيهَا؟ قَالَ: ” قَوْلِي: اللهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي


Kubra-Nasaayi-10646

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10646. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! நான் லைலத்துல் கத்ர் இரவை அடைந்துக் கொண்டால் அதில் அல்லாஹ்விடம் என்ன கேட்க வேண்டும்?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ’ என்று சொல்! என்று கூறினார்கள்.

(பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)


قُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ، فَمَا أَسْأَلُ اللهَ فِيهَا؟ قَالَ: ” قُولِي: اللهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي


Kubra-Nasaayi-10645

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10645. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! நான் லைலத்துல் கத்ர் இரவை தெரிந்துக் கொண்டால் அதில் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ’ என்று சொல்! என்று கூறினார்கள்.

(பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)


أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللهِ، أَرَأَيْتَ إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ، مَاذَا أَدْعُو بِهِ؟ قَالَ: ” قَوْلِي: اللهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَافِيَةَ فَاعْفُ عَنِّي


Kubra-Nasaayi-10644

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10644. ஹதீஸ் எண்-10643 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.


أَنَّ عَائِشَةَ، قَالَتْ: يَا نَبِيَّ اللهِ


Kubra-Nasaayi-10643

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10643. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம், (அல்லாஹ்வின் தூதரே!) நான் லைலத்துல் கத்ர் இரவை அடைந்துக் கொண்டால் அதில் என்ன கூற வேண்டும்?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ’ என்று சொல்! என்று கூறினார்கள்.

(பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)


قُلْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ، مَا أَقُولُ؟ قَالَ: ” تَقُولِينَ: اللهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي


Kubra-Nasaayi-10642

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10642. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! நான் லைலத்துல் கத்ர் இரவை தெரிந்துக் கொண்டால் அதில் என்ன கூற வேண்டும்?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ’ என்று சொல்! என்று கூறினார்கள்.

(பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)


قُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنَّ عَلِمْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ، مَا أَقُولُ فِيهَا؟ قَالَ قَوْلِي: «اللهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي»


Kubra-Nasaayi-7665

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7665. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம், (அல்லாஹ்வின் தூதரே!) நான் லைலத்துல் கத்ர் இரவை தெரிந்துக் கொண்டால் அதில் என்ன கூற வேண்டும்?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ’ என்று சொல்! என்று கூறினார்கள்.

(பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)


قُلْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ لَيْلَةَ الْقَدْرِ مَا أَقُولُ؟ قَالَ: ” قَوْلِي: اللهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي


Kubra-Bayhaqi-13047

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13047. மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய தோளில் அடித்து, “மிக்தாமே! நீ தலைவராகவோ, பொருளாளராகவோ, செயலாளராகவோ இல்லாத நிலையில் மரணமடைந்தால் நீ (மறுமையில்) வெற்றி பெற்றுவிடுவாய்” என்று கூறினார்கள்.


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَرَبَ عَلَى مَنْكِبِهِ ثُمَّ قَالَ: ” أَفْلَحْتَ يَا قَدِيمُ إِنْ مِتَّ وَلَمْ تَكُنْ أَمِيرًا أَوْ كَاتِبًا أَوْ عَرِيفًا


Kubra-Nasaayi-10575

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10575. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் முறையாக உளூ (அங்கத் தூய்மை) செய்யும்போது (அவர் செய்திருந்த அவருடைய சிறு பாவங்கள்) அவருடைய செவி, பார்வை , கைகள், கால்கள் போன்றவற்றிலிருந்து வெளியேறிவிடுகின்றன.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

அபூளப்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மேற்கண்ட செய்தியை, அம்ர் பின் அபஸா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்ததையும் நான் செவியேற்றுள்ளேன்.

மேலும், “யார் இரவில் உளூ செய்து அல்லாஹ்வின் நினைவுடன் தூங்குகிறாரோ அவர் இரவில் (படுக்கையில்) புரளும் நேரமெல்லாம், அவர் அல்லாஹ்விடத்தில் கேட்கும் இம்மை மறுமையின் தேவைகளை அல்லாஹ் கொடுத்துவிடுகிறான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என அம்ர் பின் அபஸா (ரலி) அவர்கள் அறிவித்ததையும் நான் செவியேற்றுள்ளேன்.


«مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ذَهَبَ الْإِثْمُ مِنْ سَمْعِهِ، وَبَصَرِهِ، وَيَدَيْهِ، وَرِجْلَيْهِ»

قَالَ أَبُو ظَبْيَةَ الْحِمْصِيُّ: وَأَنَا سَمِعْتُ عَمْرَو بْنَ عَبَسَةَ يُحَدِّثُ بِهَذَا، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: وَسَمِعْتُهُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ بَاتَ طَاهِرًا عَلَى ذِكْرِ اللهِ لَمْ يَتَعَارَّ سَاعَةً مِنَ اللَّيْلِ يَسْأَلُ اللهَ فِيهَا شَيْئًا مِنْ أَمْرِ الدُّنْيَا وَالْآخِرَةِ إِلَّا آتَاهُ إِيَّاهُ»

خَالَفَهُمَا شَمِرُ بْنُ عَطِيَّةَ


Next Page » « Previous Page