Category: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்

Musannaf-Abdur-Razzaq
Musannaf Abd al-Razzaq

Musannaf-Abdur-Razzaq-6046

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6046.


«لَقِّنُونِي لَا إِلَهَ إِلَّا اللَّهُ عِنْدَ مَوْتِي، وَأَسْرِعُوا بِي إِلَى حُفْرَتِي، وَلَا تَنْعُونِي، فَإِنِّي أَخَافُ أَنْ أَكُونَ كَنَعْيِ الْجَاهِلِيَّةِ، فَإِذَا خَرَجَ الرِّجَالُ بِجِنَازَتِي فَأَغْلِقُوا الْبَابَ فَإِنَّهُ لَا أَرَبَ لِي بِالنِّسَاءَ»


Musannaf-Abdur-Razzaq-6056

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6056. ஒரு மனிதர் இறந்துவிட்டால் அவரின் இறப்புச் செய்தியை அவரின் நண்பருக்கு அறிவிப்பதில் தவறில்லை. இறப்புச் செய்தியை அறிவிக்கக்கூடாது என்று வந்த தடை, அறியாமைக்காலத்தில் உள்ள துக்கம் அனுஷ்டிக்கும் வழிமுறைகளை கண்டித்து தான் என்று இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) கூறினார்.

அறிவிப்பவர் : ஹம்மாத் பின் அபூ ஸுலைமான் (ரஹ்)


«لَا بَأْسَ إِذَا مَاتَ الرَّجُلُ أَنْ يُؤْذَنَ صَدِيقُهُ، إِنَّمَا كَانُوا يَكْرَهُونَ أَنْ يُطَافَ بِهِ فِي الْمَجَالِسِ، أَنْعِي فُلَانًا كَفِعْلِ الْجَاهِلِيَّةِ»


Musannaf-Abdur-Razzaq-5596

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5596. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் வெள்ளிக்கிழமை பகலிலோ அல்லது இரவிலோ மரணிக்கிறாரோ அவர் கப்ரின் சோதனையிலிருந்து நீங்கிவிடுவார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«بَرِئَ مِنْ فِتْنَةِ الْقَبْرِ»


Musannaf-Abdur-Razzaq-5595

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம் :

வெள்ளிக்கிழமை மரணித்தவர் பற்றி.

5595. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யார் வெள்ளிக்கிழமை இரவிலோ அல்லது பகலிலோ  மரணிக்கிறாரோ அவர், கப்ரின் சோதனையிலிருந்து நீங்கி விடுவார் என்றோ,

அல்லது  கப்ரின் சோதனையிலிருந்து காப்பாற்றப்பட்டு அவர் ஷஹீத் என்று எழுதப்படுவார் என்றோ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«مَنْ مَاتَ لَيْلَةَ الْجُمُعَةِ – أَوْ يَوْمَ الْجُمُعَةِ – بَرِئَ مِنْ فِتْنَةِ الْقَبْرِ»

أَوْ قَالَ: «وُقِيَ فِتْنَةَ الْقَبْرِ، وَكُتِبَ شَهِيَدًا»


Musannaf-Abdur-Razzaq-17166

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17166. ஃகாலிப் பின் உபைதுல்லாஹ் கூறியதாவது:

யார் மதீனாவிற்கு வந்து என்னை ஸியாரத் செய்கிறாரோ அவர் எனக்கருகில் இருப்பவர் போன்றவராவார். மேலும், (மக்கா, மதீனா ஆகிய) இரண்டு புனிதத் தலங்களில் யார் மரணிக்கிறாரோ அவர் கியாமத் நாளில் அச்சமற்றவர்களில் (ஒருவராக) எழுப்பப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«مَنْ زَارَنِي يَعْنِي مَنْ أَتَى الْمَدِينَةَ كَانَ فِي جِوَارِي، وَمَنْ مَاتَ يَعْنِي بِوَاحِدٍ مِنَ الْحَرَمَيْنِ بُعِثَ مِنَ الْآمِنِينَ يَوْمَ الْقِيَامَةِ»


Musannaf-Abdur-Razzaq-6731

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6731. யஹ்யா பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மக்கா, மதீனா ஆகிய) இரண்டு புனிதத் தலங்களில் யார் மரணித்து அங்கு அடக்கம் செய்யப்படுவரோ அவர் கியாமத் நாளில் அச்சமற்றவர்களில் (ஒருவராக) எழுப்பப்படுவார் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன்.


«يُبْعَثُ مَنْ مَاتَ وَدُفِنَ فِي تِلْكَ الْمَقْبَرَةِ آمِنًا يَوْمَ الْقِيَامَةِ» قَالَ: «وَكُنْتُ أَسْمَعُ قَبْلَ ذَلِكَ أَنَّهُ مَنْ مَاتَ فِي الْحَرَمِ فَإِنَّ ذَلِكَ لَهُ»


Musannaf-Abdur-Razzaq-4633

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4633. “வித்ரு தொழுகை முஸ்லிமான அனைவரின் மீதும் கடமையாகும். ஐந்து ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; மூன்று ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் மூன்று ரக்அத் வித்ர் தொழட்டும்; ஒரு ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் ஒரு ரக்அத் வித்ர் தொழட்டும்; முடியாதவர் சைகை செய்து (தொழுது) கொள்ளட்டும்” என அபூ அய்யூப் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அதாஉ பின் யஸீத் (ரஹ்)

 


«الْوِتْرُ حَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ، فَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِخَمْسِ رَكَعَاتٍ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِثَلَاثٍ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِوَاحِدَةٍ فَلْيَفْعَلْ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ إِلَّا أَنْ يُومِئَ إِيمَاءً فَلْيَفْعَلْ»،


Musannaf-Abdur-Razzaq-2004

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2004.

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு சுபுஹ் தொழுகை நடத்திய பின், “இன்னார் தொழ வந்தாரா? என்று நபித்தோழர்களிடம் விசாரித்தார்கள். அவர்கள் இல்லை என பதிலளித்தனர். பிறகு, (வேறொருவரை பற்றி) இன்னார் தொழ வந்தாரா? என்று கேட்டார்கள். அவர்கள் இல்லை என பதிலளித்தனர். அதற்கு, நபி (ஸல்) அவர்கள் (சுபுஹ், இஷா ஆகிய) இந்த இரண்டு தொழுகைகளும் முனாஃபிகீன்களுக்கு மிகவும் பாரமான தொழுகைகளாகும். இந்த இரண்டில் உள்ள (நன்மைகளை) அவர்கள் அறிந்தால் முட்டுக்கால்களில் தவழ்ந்தாவது அதற்கு வந்து விடுவார்கள்.

(இறை நெருக்கத்தைப் பெறுவதில்) முதல் வரிசையாகிறது மலக்குமார்களின் வரிசை போன்றதாகும். நீங்கள் அதன் சிறப்புகளை அறிந்தால் அதற்காக ஒருவருக்கொருவர் போட்டி போடுவீர்கள்.

ஒருவர் மற்றொருவரோடு சேர்ந்து தொழுவது அவர் தனியாகத் தொழுவதை விட மிக பரிசுத்தமானதாகும். ஒருவர் இருவரோடு சேர்ந்து தொழுவது ஒருவரோடு சேர்ந்து தொழுவதை விட மிகப் பரிசுத்தமானதாகும். எண்ணிக்கை அதிகரிப்பது தான் உயர்ந்தோனாகிய அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்குரியதாகும்” என்று கூறினார்கள்.


صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفَجْرَ، فَلَمَّا سَلَّمَ قَالَ: «أَشَاهَدَ فُلَانٌ؟» قَالُوا: نَعَمْ، وَلَمْ يَحْضُرْ، قَالَهَا ثَلَاثًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَثْقَلَ الصَّلَوَاتِ عَلَى الْمُنَافِقِينَ صَلَاةُ الْعِشَاءِ، وَالْفَجْرِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا، أَتَوْهُمَا وَلَوْ حَبْوًا، وَإِنَّ الصَّفَّ الْأَوَّلَ عَلَى مِثْلِ صَفِّ الْمَلَائِكَةِ، وَلَوْ عَلِمْتُمْ مَا فَضِيلَتُهُ ابْتَدَرْتُمُوهُ، وَصَلَاتُكَ مَعَ الرَّجُلِ أَزْكَى مِنْ صَلَاتِكَ وَحْدَكَ، وَصَلَاتُكَ مَعَ الرَّجُلَيْنِ أَزْكَى مِنْ صَلَاتِكَ مَعَ الرَّجُلِ، وَمَا أَكْثَرُ فَهُوَ أَحَبُّ إِلَى اللَّهِ»


Musannaf-Abdur-Razzaq-6022

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6022. யார் சூரத்துல் கஹ்ஃபின் ஆரம்ப பத்து வசனங்களை ஓதுகிறாரோ அவர் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து விடுபட்டு விடுவார். யார் அதன் இறுதி (பத்து) வசனங்களை அல்லது இறுதி வரை (முழுவதையும்) ஓதுகிறாரோ அவருக்குக் காலில் இருந்து தலை வரை ஒளி உண்டாகும் என கதாதா (ரஹ்) கூறினார்.

அறிவிப்பவர் : மஃமர் (ரஹ்)


مَنْ قَرَأَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ الْكَهْفِ عُصِمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ، وَمَنْ قَرَأَ آخِرَهَا – أَوْ قَالَ: قَرَأَهَا إِلَى آخِرِهَا – كَانَتْ لَهُ نُورًا مِنْ قَرْنِهِ إِلَى قَدَمِهِ


Next Page » « Previous Page