ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
34936. (தவ்பா அத்தியாயத்தின்) “அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறுதான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன். (அல்குர்ஆன் 9:31)
எனும் வசனத்தின் விளக்கம்பற்றி, “யூத, கிருத்துவர்கள் தங்கள் மதபோதகர்கள், (அல்லாஹ்வால் ஹலால் என்று) அனுமதிக்கப்பட்டதை தடைசெய்தபோதும்; (அல்லாஹ்வால் ஹராம் என்று) தடுக்கப்பட்டதை அனுமதித்தபோதும் அவர்களுக்கு கட்டுப்பட்டனர். எனவே இது அவர்களை வணங்கியதாக ஆனது என்று அபுல்பக்தரீ (ஸயீத் பின் ஃபைரூஸ்-ரஹ்) அவர்கள் கூறினார்.
அறிவிப்பவர்: அதாஉ பின் ஸாயிப் (ரஹ்)
{اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ} [التوبة: 31] قَالَ: أَطَاعُوهُمْ فِيمَا أَمَرُوهُمْ بِهِ مِنْ تَحْرِيمِ حَلَالٍ وَتَحْلِيلِ حَرَامٍ , فَعَبَدُوهُمْ بِذَلِكَ
சமீப விமர்சனங்கள்