Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-12006

ஹதீஸின் தரம்: Pending

12006. தமீம் பின் ஸலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எங்களில் ஒரு மனிதர் திடீரென இறந்துவிட்டார். உடனே நபித்தோழர்களில் சிலர் இது அல்லாஹ்வின் கோபப்பிடியாகும் என்று கூறினர். நான் இதுப்பற்றி இப்ராஹீம் அன்னகயீ அவர்களிடம் கூறினேன். (இப்ராஹீம் அவர்களிடம் நாங்கள் எந்த ஹதீஸைப் பற்றி கூறி விளக்கம் கேட்டாலும் அதைப்பற்றி அவர் தெரிந்திருப்பார்)

அதற்கு அவர்கள், ஆம், திடீர் மரணம் இறைகோபத்தின் தண்டனை போன்றது தான் என்று நபித்தோழர்கள் வெறுப்பார்கள் என்று கூறினார்.


مَاتَ مِنَّا رَجُلٌ بَغْتَةً، فَقَالَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَخْذَةَ غَضَبٍ فَذَكَرْتُهُ لِإِبْرَاهِيمَ وَقَلَّ مَا كُنَّا نَذْكُرُ لِإِبْرَاهِيمَ حَدِيثًا، إِلَّا وَجَدْنَا عِنْدَهُ فِيهِ فَقَالَ: «كَانُوا يَكْرَهُونَ أَخْذَةً كَأَخْذَةِ الْأَسَفِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12009

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12009. இப்ராஹீம் அன்னகயீ அவர்கள் திடீர் மரணத்தை வெறுத்தார்கள்.


«أَنَّهُ كَرِهَ مَوْتُ الْفُجَاءَةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12010

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12010. திடீர் மரணம், இறைகோபத்தினால் பிடிக்கப்படுவதாகும் என்று நபித்தோழர்களில் ஒருவர் கூறினார்.

அறிவிப்பவர்: உபைத் பின் காலித் (ரலி)


فِي مَوْتِ الْفُجَاءَةِ قَالَ: «أَخْذَةُ أَسَفٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12007

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

12007. திடீர் மரணம் இறைநம்பிக்கையாளருக்கு (இறை) அருளாகும். பாவிக்கு தண்டனையாகும் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களும், ஆயிஷா (ரலி) அவர்களும் கூறினர்.

அறிவிப்பவர்: அபுல் அஹ்வஸ் (ரஹ்)


«مَوْتُ الْفُجَاءَةِ رَأْفَةٌ بِالْمُؤْمِنِ، وَأَسَفٌ عَلَى الْفَاجِرِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-37553

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

37553. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மாதத்தின்) முதல் நாளில் பிறைப் பார்க்கப்படும் போது இது இரண்டாம் நாளின் பிறை என்று கூறப்படுவது மறுமைநாள் நெருங்கிவிட்டதின் அடையாளமாகும்.

அறிவிப்பவர்: ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபி (ரஹ்)

 


مِنَ اقْتِرَابِ السَّاعَةِ أَنْ يُرَى الْهِلَالُ قَبْلًا فَيُقَالُ: ابْنُ لَيْلَتَيْنِ


Musannaf-Ibn-Abi-Shaybah-23945

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23945.


«كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ هَذِهِ الْأَوْعِيَةِ فَاشْرَبُوا فِيهَا، وَاجْتَنِبُوا كُلَّ مَا أَسْكَرَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-23942

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23942.


«نَهَيْتُكُمْ عَنِ النَّبِيذِ إِلَّا فِي سِقَاءٍ فَاشْرَبُوا فِي الْأَسْقِيَةِ كُلِّهَا، وَلَا تَشْرَبُوا مُسْكِرًا»


Musannaf-Ibn-Abi-Shaybah-23747

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23747.


«كُنْتُ نَهَيْتُكُمْ عَنِ الْأَشْرِبَةِ فِي ظُرُوفِ الْأُدْمِ، فَاشْرَبُوا فِي كُلِّ وِعَاءٍ غَيْرَ أَنْ لَا تَشْرَبُوا مُسْكِرًا»


Next Page » « Previous Page