Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-13128

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

13128.


أَسْلَمَ نَاسٌ مِنْ عُرَيْنَةَ فَاجْتَوَوْا الْمَدِينَةَ. فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ خَرَجْتُمْ إِلَى ذَوْدٍ لَنَا فَشَرِبْتُمْ مِنْ أَلْبَانِهَا»

قَالَ حُمَيْدٌ: وَقَالَ قَتَادَةُ: عَنْ أَنَسٍ: «وَأَبْوَالِهَا» ،

فَفَعَلُوا، فَلَمَّا صَحُّوا كَفَرُوا بَعْدَ إِسْلَامِهِمْ، وَقَتَلُوا رَاعِيَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مُؤْمِنًا أَوْ مُسْلِمًا، وَسَاقُوا ذَوْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهَرَبُوا مُحَارِبِينَ، فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي آثَارِهِمْ، فَأُخِذُوا فَقَطَّعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسَمَرَ أَعْيُنَهُمْ، وَتَرَكَهُمْ فِي الْحَرَّةِ حَتَّى مَاتُوا


Musnad-Ahmad-18876

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

18876.


قُلْتُ: لَأَنْظُرَنَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي، ” فَقَامَ فَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ، ثُمَّ أَخَذَ شِمَالَهُ بِيَمِينِهِ، ثُمَّ قَالَ: حِينَ أَرَادَ أَنْ يَرْكَعَ، رَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ، ثُمَّ وَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ، ثُمَّ رَفَعَ فَرَفَعَ يَدَيْهِ مِثْلَ ذَلِكَ، ثُمَّ سَجَدَ فَوَضَعَ يَدَيْهِ حِذَاءَ أُذُنَيْهِ، ثُمَّ قَعَدَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى، وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى، فَخِذِهِ فِي صِفَةِ عَاصِمٍ، ثُمَّ وَضَعَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى، وَقَبَضَ ثَلَاثِينَ، وَحَلَّقَ حَلْقَةً. ثُمَّ رَأَيْتُهُ يَقُولُ هَكَذَا، وَأَشَارَ زُهَيْرٌ بِسَبَّابَتِهِ الْأُولَى، وَقَبَضَ إِصْبَعَيْنِ، وَحَلَّقَ الْإِبْهَامَ عَلَى السَّبَّابَةِ الثَّانِيَةِ “،

قَالَ زُهَيْرٌ: قَالَ عَاصِمٌ، وَحَدَّثَنِي عَبْدُ الْجَبَّارِ، عَنْ بَعْضِ أَهْلِهِ، أَنَّ وَائِلًا قَالَ: أَتَيْتُهُ مَرَّةً أُخْرَى وَعَلَى النَّاسِ ثِيَابٌ فِيهَا الْبَرَانِسُ وَفِيهَا الْأَكْسِيَةُ، فَرَأَيْتُهُمْ يَقُولُونَ: هَكَذَا تَحْتَ الثِّيَابِ


Musnad-Ahmad-6168

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6168. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள், (உலகிலும், மறுமை நாளின் நெருக்கத்திலும் ஏற்படும்) குழப்பங்கள் குறித்து அதிகமாக பேசினார்கள். (முதலில்) வீட்டில் நிலைப்பெற்றுவிடும் (அஹ்லாஸ் எனும்) குழப்பம் ஏற்படும் என்று கூறினார்கள். அப்போது ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! அஹ்லாஸ் எனும் குழப்பம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், மக்களிடையில் வெறுப்பும், விரோதமும் ஏற்படும். கொலை, கொள்ளை பெருகிவிடும். அதனால் மக்களிடையே சண்டை ஏற்பட்டு மக்கள் வெருண்டோடுவார்கள் என்று கூறினார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிறகு செல்வ செழிப்பினால் குழப்பம் ஏற்படும். அதனுடைய (ஆரம்பம் எனும்) புகை எனது குடும்பத்தாரைச் சேர்ந்த மனிதரின் காலிலிருந்து உருவாகும். அவர் என்னைச் சேர்ந்தவர் என்று அவர் கருதிக் கொள்வார். ஆனால் அவர் என்னைச் சேர்ந்தவர் அல்ல. என்னுடைய நேசர்கள் யாரெனில் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்களே!

பின்பு மக்கள், விலா எழும்பின் மீதுள்ள … போன்று (உறுதியில்லாத)  ஒரு மனிதரின் தலைமையின் கீழ் ஒன்று சேர்வார்கள். பின்பு (துஹைமா எனும்) இருள்சூழ்ந்த குழப்பம் ஏற்படும். அந்தக் குழப்பம் இந்த சமுதாயத்தில் எவரையும் விட்டுவிடாது. அது

كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُعُودًا، فَذَكَرَ الْفِتَنَ، فَأَكْثَرَ ذِكْرَهَا حَتَّى ذَكَرَ فِتْنَةَ الْأَحْلَاسِ، فَقَالَ قَائِلٌ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا فِتْنَةُ الْأَحْلَاسِ؟ قَالَ: ” هِيَ فِتْنَةُ هَرَبٍ وَحَرَبٍ، ثُمَّ فِتْنَةُ السَّرَّاءِ، دَخَلُهَا أَوْ دَخَنُهَا مِنْ تَحْتِ قَدَمَيْ رَجُلٍ مِنْ أَهْلِ بَيْتِي، يَزْعُمُ أَنَّهُ مِنِّي، وَلَيْسَ مِنِّي، إِنَّمَا وَلِيِّيَ الْمُتَّقُونَ، ثُمَّ يَصْطَلِحُ النَّاسُ عَلَى رَجُلٍ كَوَرِكٍ عَلَى ضِلَعٍ، ثُمَّ فِتْنَةُ الدُّهَيْمَاءِ لَا تَدَعُ أَحَدًا مِنْ هَذِهِ الْأُمَّةِ إِلَّا لَطَمَتْهُ لَطْمَةً، فَإِذَا قِيلَ: انْقَطَعَتْ تَمَادَتْ، يُصْبِحُ الرَّجُلُ فِيهَا مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، حَتَّى يَصِيرَ النَّاسُ إِلَى فُسْطَاطَيْنِ، فُسْطَاطُ إِيمَانٍ لَا نِفَاقَ فِيهِ، وَفُسْطَاطُ نِفَاقٍ لَا إِيمَانَ فِيهِ، إِذَا كَانَ ذَاكُمْ فَانْتَظِرُوا الدَّجَّالَ مِنَ الْيَوْمِ أَوْ غَدٍ


Musnad-Ahmad-22997

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

22997. புரைதா பின் ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸல்மான் (ரலி) அவர்கள் (நபி-ஸல் அவர்களை சந்திக்க) மதீனாவுக்கு வந்தபோது தட்டில் சில பேரித்தம் பழங்களைக் கொண்டு வந்து அவர்களுக்கு முன் வைத்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இது என்ன ஸல்மானே? என்று கேட்டார்கள். அதற்கவர், உங்களுக்கும் உங்கள் தோழர்களுக்கும் இது தர்மம் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இதை எடுத்து விடுங்கள்! நாங்கள் தர்மப் பொருட்களை உண்ண மாட்டோம்” என்று கூறினார்கள். எனவே ஸல்மான் (ரலி) அவர்கள் அதை எடுத்து விட்டார்.

அடுத்த நாளும் இதே போன்று அவர் செய்ய, நபி (ஸல்) அவர்களும் முன்பு கூறியது போன்றே கூறிவிட்டார்கள்.

அதற்கடுத்த நாளும் இதே போன்று ஸல்மான் (ரலி) அவர்கள் சில பேரீத்தம் பழங்களைக் கொண்டு வந்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இது என்ன ஸல்மானே! என்று கூறினார்கள். அதற்கவர், உங்களுக்கு இது அன்பளிப்பு என்று கூறினார். எனவே நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம் உணவு விரிப்பை விரியுங்கள் என்று கூறினார்கள்.

அப்போது (நபி-ஸல் அவர்களின் முதுகை திறந்ததாகக் கண்ட) ஸல்மான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் முதுகில் உள்ள நபித்துவ முத்திரையைப் பார்த்தார். எனவே (அப்போதே) அவர் ஈமான் கொண்டார்.

ஒரு யூதருக்கு சொந்தமான இடத்தை நபி (ஸல்) அவர்கள் ஒரு விலைக்கு வாங்கினார்கள்.

جَاءَ سَلْمَانُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَدِمَ الْمَدِينَةَ بِمَائِدَةٍ عَلَيْهَا رُطَبٌ فَوَضَعَهَا بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا هَذَا يَا سَلْمَانُ؟» قَالَ: صَدَقَةٌ عَلَيْكَ وَعَلَى أَصْحَابِكَ. قَالَ: «ارْفَعْهَا؛ فَإِنَّا لَا نَأْكُلُ الصَّدَقَةَ» . فَرَفَعَهَا،

فَجَاءَ مِنَ الْغَدِ بِمِثْلِهِ، فَوَضَعَهُ بَيْنَ يَدَيْهِ، قَالَ: «مَا هَذَا يَا سَلْمَانُ؟» قَالَ: صَدَقَةٌ عَلَيْكَ وَعَلَى أَصْحَابِكَ. قَالَ: «ارْفَعْهَا؛ فَإِنَّا لَا نَأْكُلُ الصَّدَقَةَ» . فَرَفَعَهَا،

فَجَاءَ مِنَ الْغَدِ بِمِثْلِهِ، فَوَضَعَهُ بَيْنَ يَدَيْهِ يَحْمِلُهُ فَقَالَ: «مَا هَذَا يَا سَلْمَانُ؟» فَقَالَ: هَدِيَّةٌ لَكَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «ابْسُطُوا» .

فَنَظَرَ إِلَى الْخَاتَمِ الَّذِي عَلَى ظَهْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَآمَنَ بِهِ.

وَكَانَ لِلْيَهُوَدِ فَاشْتَرَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَذَا وَكَذَا دِرْهَمًا، وَعَلَى أَنْ يَغْرِسَ نَخْلًا فَيَعْمَلَ سَلْمَانُ فِيهَا حَتَّى تُطْعِمَ. قَالَ: فَغَرَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّخْلَ إِلَّا نَخْلَةً وَاحِدَةً غَرَسَهَا عُمَرُ، فَحَمَلَتِ النَّخْلُ مِنْ عَامِهَا وَلَمْ تَحْمِلِ النَّخْلَةُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا شَأْنُ هَذِهِ؟» قَالَ عُمَرُ: أَنَا غَرَسْتُهَا يَا رَسُولَ اللَّهِ. قَالَ: فَنَزَعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ غَرَسَهَا فَحَمَلَتْ مِنْ عَامِهَا


Musnad-Ahmad-22882

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

22882. அபூஸைத்-அம்ர் பின் அக்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் இரு தோள்புஜங்களுக்கிடையில் நபித்துவ முத்திரையை (ஒரு மனிதர் ஆச்சரியமாக பார்ப்பது போன்று) நான் பார்த்தேன். மேலும் அதை எனது கையால் தொட்டும் பார்த்தேன்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூநஹீக் கூறுகிறார்:

அபூஸைத் (ரலி) அவர்கள் இதைக் கூறும்போது தனது மூன்றாவது விரலால் இவ்வாறு (தொட்டுப்பார்த்தேன்) என்று செய்துக் காட்டினார்கள்.


«رَأَيْتُ الْخَاتَمَ الَّذِي بَيْنَ كَتِفَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَرَجُلٍ، قَالَ بِإِصْبَعِهِ الثَّالِثَةِ هَكَذَا، فَمَسَحْتُهُ بِيَدِي»


Musnad-Ahmad-20732

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அபூஸைத்-அம்ர் பின் அக்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்திகள்.

20732. அபூஸைத்-அம்ர் பின் அக்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை நான் சிறுவயதில் இருக்கும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “அபூஸைதே! என்னிடம் நெருங்கி வா என்று அழைத்தார்கள். நான் அவர்களின் அருகில் சென்றேன். அப்போது அவர்கள், உனது கையால் என் முதுகைத் தொட்டுப்பார்” என்று கூறினார்கள். எனவே அவர்களின் சட்டையில் நான் கையை விட்டு முதுகைத் தொட்டுப் பார்த்தேன். அப்போது நபித்துவ முத்திரை என்னுடைய விரலில் பட்டது.


அபூஸைத் (ரலி) அவர்களிடம் நபித்துவ முத்திரை எப்படி இருந்தது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நபி (ஸல்) அவர்களின் தோள்புஜத்தில் அது திரளான முடி (போன்று கட்டியாக) இருந்தது என்று பதில் கூறினார்கள்.


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْتَرِبْ مِنِّي» ، فَاقْتَرَبْتُ مِنْهُ، فَقَالَ: «أَدْخِلْ يَدَكَ فَامْسَحْ ظَهْرِي» ، قَالَ: فَأَدْخَلْتُ يَدِي فِي قَمِيصِهِ، فَمَسَحْتُ ظَهْرَهُ، فَوَقَعَ خَاتَمُ النُّبُوَّةِ بَيْنَ إِصْبَعَيَّ، قَالَ: فَسُئِلَ عَنْ خَاتَمِ النُّبُوَّةِ، فَقَالَ: «شَعَرَاتٌ بَيْنَ كَتِفَيْهِ»


Musnad-Ahmad-22889

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

22889. அபூஸைத்-அம்ர் பின் அக்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை நான் சிறுவயதில் இருக்கும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “அபூஸைதே! என்னிடம் நெருங்கி வந்து என் முதுகைத் தொட்டுப்பார்” என்று கூறினார்கள். எனவே அவர்கள் முதுகைத் திறக்க நான் அதைத் தொட்டுப் பார்த்தேன். அப்போது நான் (நபித்துவ முத்திரை எனும்) காதமை என்னுடைய விரல்களுக்கிடையில் வைத்து அழுத்திப் பார்த்தேன்.


அபூஸைத் (ரலி) அவர்களிடம் காதம் எப்படி இருந்தது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நபி (ஸல்) அவர்களின் தோள்புஜத்தில் அது திரளான முடி (போன்று கட்டியாக) இருந்தது என்று கூறினார்கள்.


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا زَيْدٍ ادْنُ مِنِّي، وَامْسَحْ ظَهْرِي» . وَكَشَفَ ظَهْرَهُ، فَمَسَحْتُ ظَهْرَهُ، وَجَعَلْتُ الْخَاتَمَ بَيْنَ أَصَابِعِي. قَالَ: فَغَمَزْتُهَا. قَالَ فَقِيلَ: وَمَا الْخَاتَمُ؟ قَالَ: شَعَرٌ مُجْتَمِعٌ عَلَى كَتِفِهِ


Musnad-Ahmad-23074

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

23074. அபூகதாதா (ரஹ்), அபுத்தஹ்மா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

(ஒரு தடவை) நாங்கள் (ஹஜ்ஜுக்கு சென்றபோது) ஒரு கிராமவாசியை சந்தித்தோம். அவரிடம், நீங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ் எதையும் கேட்டுள்ளீர்களா? என்று கேட்டோம். அதற்கவர், ஆம். நபி (ஸல்) அவர்கள், “நீ அல்லாஹ்வுக்காக எந்த ஒன்றை விட்டாலும் அதனைவிடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் உனக்கு வழங்குவான்” எனக் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்.


أَتَيْنَا عَلَى رَجُلٍ مِنْ أَهْلِ الْبَادِيَةِ فَقُلْنَا: هَلْ سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا؟ قَالَ: نَعَمْ، سَمِعْتُهُ يَقُولُ: «إِنَّكَ لَنْ تَدَعَ شَيْئًا لِلَّهِ إِلَّا بَدَّلَكَ اللَّهُ بِهِ مَا هُوَ خَيْرٌ لَكَ مِنْهُ»


Musnad-Ahmad-20746

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஒரு கிராமவாசியின் ஹதீஸ்.

20746. அபூகதாதா (ரஹ்), அபுத்தஹ்மா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

(ஒரு தடவை) நாங்கள் ஒரு கிராமவாசியிடம் சென்றபோது அவர் கூறினார்:

(ஒரு தடவை) நபி (ஸல்) அவர்கள், எனது கையைப் பிடித்து அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்ததிலிருந்து எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அவர்களிடமிருந்து நான் மனனமிட்ட செய்திகளில் ஒன்று, “நீ அல்லாஹ்வுக்கு பயந்து எதையேனும் விட்டுவிட்டால் அதை விடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் உனக்கு வழங்குவான்” என்பதாகும்.


இந்தச் செய்தியை அறிவிக்கும் அஃப்பான் அவர்களின் அறிவிப்பில் அபூகதாதா (ரஹ்), அபுத்தஹ்மா (ரஹ்) ஆகியோர் அதிகம் ஹஜ் செய்பவர்களாக இருந்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது.


 


أَتَيْنَا عَلَى رَجُلٍ مِنْ أَهْلِ الْبَادِيَةِ، فَقَالَ الْبَدَوِيُّ: أَخَذَ بِيَدِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ يُعَلِّمُنِي مِمَّا عَلَّمَهُ اللَّهُ، فَكَانَ فِيمَا حَفِظْتُ عَنْهُ أَنْ قَالَ: «إِنَّكَ لَنْ تَدَعَ شَيْئًا اتِّقَاءً لِلَّهِ، إِلَّا آتَاكَ اللَّهُ خَيْرًا مِنْهُ»


Musnad-Ahmad-20739

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

20739. அபூகதாதா (ரஹ்), அபுத்தஹ்மா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

நாங்கள், கஅபா எனும் இந்த ஆலயத்திற்கு (ஹஜ் செய்வதற்கு) அதிகம் பயணம் செய்துள்ளோம். (ஒரு தடவை) நாங்கள் ஒரு கிராமவாசியிடம் சென்றபோது அவர் கூறினார்:

(ஒரு தடவை) நபி (ஸல்) அவர்கள், எனது கையைப் பிடித்து அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்ததிலிருந்து எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்:

நீ அல்லாஹ்வுக்கு பயந்து எந்த ஒன்றை விட்டாலும் அதைவிடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் உனக்கு வழங்குவான்.

 


كَانَا يُكْثِرَانِ السَّفَرَ نَحْوَ هَذَا الْبَيْتِ، قَالَا: أَتَيْنَا عَلَى رَجُلٍ مِنْ أَهْلِ الْبَادِيَةِ، فَقَالَ الْبَدَوِيُّ: أَخَذَ بِيَدِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ يُعَلِّمُنِي مِمَّا عَلَّمَهُ اللَّهُ وَقَالَ: «إِنَّكَ لَنْ تَدَعَ شَيْئًا اتِّقَاءَ اللَّهِ إِلَّا أَعْطَاكَ اللَّهُ خَيْرًا مِنْهُ»


Next Page » « Previous Page