3. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் கைகளில் பேரீச்சம்பழங்களை சேகரித்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இதில் பரக்கத் உண்டாகும்படி அல்லாஹ்விடம் எனக்காக பிரார்த்தியுங்கள்” என்று கூறினேன். அப்போது அவர்கள் எனக்காக பரக்கத் உண்டாகும்படி பிரார்த்தித்தார்கள். பிறகு, “நீ ஏதாவது எடுக்க விரும்பினால், உன் கையை உள்ளே விட்டு எடுத்துக்கொள்; அதை சிதறவிடாதே” என்று கூறினார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “அந்த பேரீச்சம்பழங்களிலிருந்து நான் அல்லாஹ்வுடைய பாதையில் இத்தனை இத்தனை வஸ்க் அளவு (சுமார் 120 கிலோ) சுமைகளை (பயன்படுத்தியிருக்கிறேன்). நாங்கள் அதிலிருந்து உண்போம்; மற்றவர்களுக்கும் உணவளிப்போம். அது உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சி கால இரவுகளில் என்னிடமிருந்து துண்டிக்கப்படும்வரை என் இடுப்பில் இருந்தது.
أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمَرَاتٍ قَدْ صَفَّيْتُهُنَّ فِي يَدِي، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ لِي فِيهِنَّ بِالْبَرَكَةِ، فَدَعَا لِي فِيهِنَّ بِالْبَرَكَةِ، فَقَالَ: «إِذَا أَرَدْتَ أَنْ تَأْخُذَ شَيْئًا فَأَدْخِلْ يَدَكَ وَلَا تَنْثُرْهُ نَثْرًا» ، قَالَ: أَبُو هُرَيْرَةَ: فَحَمَلْتُ مِنْ ذَلِكَ التَّمْرِ كَذَا وَكَذَا وَسْقًا فِي سَبِيلِ اللَّهِ، قَالَ: فَكُنَّا نَأْكُلُ مِنْهُ وَنُطْعِمُ، وَكَانَ فِي حِقْوِي حَتَّى انْقَطَعَ مِنِّي لَيَالِيَ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ
சமீப விமர்சனங்கள்