Category: முஅத்தா மாலிக்

Muwatta-Malik-142

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

142. தயம்மும் செய்வது எப்படி? அதை எதில் செய்வது? என மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”தன் முகத்துக்காக ஒரு முறையும், கைகளுக்காக ஒரு முறையும் (மண்ணில்) அடித்து முழங்கை உட்பட அவ்விரண்டையும் மஸஹு செய்வது என பதில் கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ كَيْفَ التَّيَمُّمُ وَأَيْنَ يَبْلُغُ بِهِ؟ فَقَالَ: يَضْرِبُ ضَرْبَةً لِلْوَجْهِ، وَضَرْبَةً لِلْيَدَيْنِ، وَيَمْسَحُهُمَا إِلَى الْمِرْفَقَيْنِ.


Muwatta-Malik-144

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

144. பயணத்தில் உள்ள ஒருவர் கனவில் விந்து வெளியாகிறது. ஒளுவிற்குரிய அளவுக்கே தவிர தண்ணீர் அவரிடம் இல்லை. வேறு தண்ணீர் கிடைக்கும் வரை அவன் தாகித்தும் இருக்க முடியாது. (இப்போது அவர் என்ன செய்வது?) என்று கேட்டதற்கு, ”அந்த தண்ணீர் மூலம் தன் மறைவுறுப்பையும், அதில் உள்ள அசுத்தத்தையும் கழுவுவார். பின்பு அல்லாஹ் கட்டளையிட்டது போல் தூய்மையான மண்ணால் தயம்மும் செய்வார்”” என்று மாலிக் (ரஹ்) கூறினார்கள்.


قَالَ مَالِكٌ: فِيمَنِ احْتَلَمَ وَهُوَ فِي سَفَرٍ وَلاَ يَقْدِرُ عَلَى الْمَاءِ، إِلاَّ قَدْرَ الْوُضُوءِ وَهُوَ لاَ يَعْطَشُ حَتَّى يَأْتِيَ الْمَاءَ، قَالَ: يَغْسِلُ بِذَلِكَ فَرْجَهُ وَمَا أَصَابَهُ مِنْ ذَلِكَ الأَذَى، ثُمَّ يَتَيَمَّمُ صَعِيدًا طَيِّبًا كَمَا أَمَرَهُ اللهُ.


Muwatta-Malik-145

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

145. குளிப்புக்கடமையான ஒருவர் தயம்மும் செய்ய விரும்புகிறார். உப்பு மண்ணைத் தவிர வேறு மண்ணை அவர் பெற்றுக் கொள்ளவில்லை. இவர் உப்பு மண் மூலம் தயம்மும் செய்யலாமா? உப்பு மணலில் தொழுவது வெறுக்கத்தக்க செயலா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”உப்பு மண்ணில் தொழுவதோ, அதில் தயம்மும் செய்வதோ குற்றமில்லை, ஏனெனில், தூய்மையான மண்ணால் தயம்மும் செய்யுங்கள்”” என்று தான் அல்லாஹ் கூறியுள்ளான். உப்பு மண்ணாயினும், அது அல்லாததாயினும் தூய்மையான அனைத்திலும் அவன் தயம்மும் செய்யலாம்”” என்று பதில் கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ جُنُبٍ، أَرَادَ أَنْ يَتَيَمَّمَ فَلَمْ يَجِدْ تُرَابًا إِلاَّ تُرَابَ سَبَخَةٍ، هَلْ يَتَيَمَّمُ بِالسِّبَاخِ؟ وَهَلْ تُكْرَهُ الصَّلاَةُ فِي السِّبَاخِ؟.
قَالَ مَالِكٌ: لاَ بَأْسَ بِالصَّلاَةِ فِي السِّبَاخِ وَالتَّيَمُّمِ مِنْهَا، لأَنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَى قَالَ: {فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا} فَكُلُّ مَا كَانَ صَعِيدًا فَهُوَ يُتَيَمَّمُ بِهِ سِبَاخًا كَانَ أَوْ غَيْرَهُ.


Muwatta-Malik-152

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

152. மாதவிடாய்க் காரி சுத்தமாகின்றாள். தண்ணீரை அவள் பெறவில்லை. தயம்மும் செய்யலாமா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஆம்! அவள் தயம்மும் செய்யலாம். அவள், தண்ணீர் கிடைக்காமல் தயம்மும் செய்யும் குளிப்புக் கடமையானவன் போலாவாள் என்று பதில் கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ: عَنِ الْحَائِضِ تَطْهُرُ فَلاَ تَجِدُ مَاءً، هَلْ تَتَيَمَّمُ؟ قَالَ: نَعَمْ لِتَتَيَمَّمْ، فَإِنَّ مِثْلَهَا مِثْلُ الْجُنُبِ إِذَا لَمْ يَجِدْ مَاءً تَيَمَّمَ.


Muwatta-Malik-162

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

162. தொடர் இரத்தப் போக்கு உள்ள பெண் தொழுது விட்டால், அவளின் கணவனுக்கு அவளிடம் உடலுறவு கொள்வது கூடும். இவ்வாறே, குழந்தை பெற்ற பெண்கள், அவளுக்கு வெளிப்படும் இரத்தம் முடியும் நாள் அடைந்ததும், அதன் பின்னும் ரத்தத்தை அவள் பார்த்தால், அவளை அவளது கணவன் உடலுறவு கொள்ளலாம். அவள், இரத்தப் போக்குடையவளின் நிலையில் உள்ளவள் ஆவாள். இதுவே எம்மிடம் உள்ள சட்டமாகும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாக யஹ்யா கூறுகின்றார்கள்.


قَالَ يَحيَى: قَالَ مَالِكٌ: الأَمْرُ عِنْدَنَا، أَنَّ الْمُسْتَحَاضَةَ إِذَا صَلَّتْ، أَنَّ لِزَوْجِهَا أَنْ يُصِيبَهَا، وَكَذَلِكَ النُّفَسَاءُ إِذَا بَلَغَتْ أَقْصَى مَا يُمْسِكُ النِّسَاءَ الدَّمُ، فَإِنْ رَأَتِ الدَّمَ بَعْدَ ذَلِكَ، فَإِنَّهُ يُصِيبُهَا زَوْجُهَا، وَإِنَّمَا هِيَ بِمَنْزِلَةِ الْمُسْتَحَاضَةِ.


Muwatta-Malik-163

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

163. ஹிஸாம் இப்னு உர்வா என்பவர் தன் தந்தை உர்வா வழியாக அறிவிக்கும் இந்த ஹதீஸே, நான் கேட்டதில் எனக்கு மிக விருப்பமானது. இரத்தப் போக்குடையவள் விஷயமாக நம்மிடமும் இதுவே சட்டமாகும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


قَالَ يَحيَى: قَالَ مَالِكٌ: الأَمْرُ عِنْدَنَا فِي الْمُسْتَحَاضَةِ عَلَى حَدِيثِ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَن أَبِيهِ، وَهُوَ أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ فِي ذَلِكَ.


Muwatta-Malik-168

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

168. சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் காரணமாக மறைவுறுப்பை கழுவியும், அதிலே ஏதேனும் சிறிதளவு இருந்தால் என்ன செய்வது? என்பது பற்றி மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. முன் சென்றோரில் சிலர், மலம் கழித்தல் காரணமாக ஒளுச் செய்தார்கள். நான் சிறுநீர் காரணமாக மறைவுறுப்பைக் கழுவுவதையே விரும்புகின்றேன் என்று மாலிக் (ரஹ்) அவர்கள் பதில் கூறியதாக யஹ்யா கூறுகிறார்கள்.


قَالَ يَحيَى: وَسُئِلَ مَالِكٌ، عَن غَسْلِ الْفَرْجِ مِنَ الْبَوْلِ وَالْغَائِطِ، هَلْ جَاءَ فِيهِ أَثَرٌ؟ فَقَالَ: بَلَغَنِي أَنَّ بَعْضَ مَنْ مَضَى كَانُوا يَتَوَضَّؤُونَ مِنَ الْغَائِطِ، وَأَنَا أُحِبُّ أَنْ أَغْسِلَ الْفَرْجَ مِنَ الْبَوْلِ.


Muwatta-Malik-179

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

179. ஜும்ஆ நாளில், நேரம் வரும் முன்னர் பாங்கு கூறுவது கூடுமா? என மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, சூரியன் உச்சிக்கு வந்தப் பின்னாலேயே தவிர கூடாது என்று கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَنِ النِّدَاءِ يَوْمَ الْجُمُعَةِ، هَلْ يَكُونُ قَبْلَ أَنْ يَحِلَّ الْوَقْتُ؟ فَقَالَ: لاَ يَكُونُ إِلاَّ بَعْدَ أَنْ تَزُولَ الشَّمْسُ.


Muwatta-Malik-180

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

180. பாங்கு இகாமத்தில் இரண்டிரண்டு வாசகங்களாக கூறுவது பற்றி கேட்கப்பட்டதற்கு, மதீனாவாசிகள் பாங்கு – இகாமத் விஷயத்தில் கடைபிடிப்பதே எனக்கு செய்தியாகக் கிடைத்தது. இகாமத்தின் வாசகம் இரண்டிரண்டாகக் கூறப்படக் கூடாது. இது தான் நம் ஊர் அறிஞர்களின் நிலையாகும்.

தொழுகைக்காக இகாமத் கூறப்படும் போது மக்கள் எழுவது என்பது. இது விஷயமாக இதற்கான அளவு எதையும் நான் கேட்கவில்லை. எனினும் இதில் மக்களுக்கு இயலும் நிலை தான் நேரம் என்றே கருதுகின்றேன். காரணம் அவர்களில் வலிமையானவரும், பலவீனரும் உள்ளனர். ஒரே மனிதன் போல் எல்லோரும் இருக்க இயல மாட்டார்கள் என்று மாலிக் (ரஹ்) கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَن تَثْنِيَةِ الأَذَانِ وَالإِقَامَةِ، وَمَتَى يَجِبُ الْقِيَامُ عَلَى النَّاسِ حِينَ تُقَامُ الصَّلاَةُ؟ فَقَالَ: لَمْ يَبْلُغْنِي فِي النِّدَاءِ وَالإِقَامَةِ إِلاَّ مَا أَدْرَكْتُ النَّاسَ عَلَيْهِ، فَأَمَّا الإِقَامَةُ، فَإِنَّهَا لاَ تُثَنَّى، وَذَلِكَ الَّذِي لَمْ يَزَلْ عَلَيْهِ أَهْلُ الْعِلْمِ بِبَلَدِنَا،

وَأَمَّا قِيَامُ النَّاسِ حِينَ تُقَامُ الصَّلاَةُ، فَإِنِّي لَمْ أَسْمَعْ فِي ذَلِكَ بِحَدٍّ يُقَامُ لَهُ، إِلاَّ أَنِّي أَرَى ذَلِكَ عَلَى قَدْرِ طَاقَةِ النَّاسِ، فَإِنَّ مِنْهُمُ الثَّقِيلَ وَالْخَفِيفَ، وَلاَ يَسْتَطِيعُونَ أَنْ يَكُونُوا كَرَجُلٍ وَاحِدٍ.


Muwatta-Malik-181

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

181. பர்ளான தொழுகையை நிறைவேற்ற தயாராகும் சிலர் பாங்கு கூறாமல், இகாமத் மட்டும் கூறுவதை விரும்புகிறார்கள் (சரியா) என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதுவே அவர்களுக்கு போதும். தொழுகைக்காக ஒன்று கூடப்படும் பள்ளிவாசல்களில் தான் பாங்கு கூறுவது கடமையாகும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَن قَوْمٍ حُضُورٍ أَرَادُوا أَنْ يَجْمَعُوا الْمَكْتُوبَةَ، فَأَرَادُوا أَنْ يُقِيمُوا وَلاَ يُؤَذِّنُوا؟ قَالَ مَالِكٌ: ذَلِكَ مُجْزِئٌ عَنهُمْ، وَإِنَّمَا يَجِبُ النِّدَاءُ فِي مَسَاجِدِ الْجَمَاعَاتِ الَّتِي تُجْمَعُ فِيهَا الصَّلاَةُ.


Next Page » « Previous Page