Category: நஸாயி

Nasaayi-4719

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4719. அன்ஸாரிகளுள் ஒருவரான சஹ்ல் பின் அபூஹஸ்மா (ரலி) அவர்கள் தமக்கு அறிவித்ததாக புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

தம்முடைய சமுதாயத்திலிருந்து சிலர் கைபருக்குச் சென்றார்கள். அவர்கள் அதில் (பேரீச்சந் தோப்புக்குள்) தனித்தனியே பிரிந்து விட்டனர். பின்னர் அவர்களுள் ஒருவர் கொல்லப்பட்டுவிட்டதைக் கண்டார்கள். பிறகு அவர்களுக்கு அருகில் இருந்தவர்களிடம், “நீங்கள்தாம் எங்களின் தோழரைக் கொன்றுவிட்டீர்கள்” என்று கூறினர். அதற்கு அவர்கள், “நாங்கள் அவரைக் கொல்லவில்லை. கொன்றவரையும் எங்களுக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.

எனவே அவர்கள் அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். “அல்லாஹ்வின் நபியே! நாங்கள் கைபருக்குச் சென்றோம். எங்களுள் ஒருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டோம்” என்று கூறினார்கள். அச்சமயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வயதில் மூத்தவர் முதலில் பேசட்டும்” என்று கூறினார்கள். அதன்பின் அவர்களிடம், “கொன்றவனுக்கு எதிராக ஏதேனும் ஆதாரத்தைக் கொண்டுவருகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறினார்கள்.

(அப்படியானால்) உங்களுக்காக (யூதர்களாகிய) அவர்கள் சத்தியம் செய்யட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “யூதர்களின்

أَنَّ نَفَرًا مِنْ قَوْمِهِ انْطَلَقُوا إِلَى خَيْبَرَ، فَتَفَرَّقُوا فِيهَا فَوَجَدُوا أَحَدَهُمْ قَتِيلًا، فَقَالُوا لِلَّذِينَ وَجَدُوهُ عِنْدَهُمْ: قَتَلْتُمْ صَاحِبَنَا. قَالُوا: مَا قَتَلْنَاهُ، وَلَا عَلِمْنَا قَاتِلًا. فَانْطَلَقُوا إِلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: يَا نَبِيَّ اللَّهِ، انْطَلَقْنَا إِلَى خَيْبَرَ فَوَجَدْنَا أَحَدَنَا قَتِيلًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْكُبْرَ الْكُبْرَ» فَقَالَ لَهُمْ: «تَأْتُونَ بِالْبَيِّنَةِ عَلَى مَنْ قَتَلَ؟». قَالُوا: مَا لَنَا بَيِّنَةٌ. قَالَ: «فَيَحْلِفُونَ لَكُمْ». قَالُوا: لَا نَرْضَى بِأَيْمَانِ الْيَهُودِ، وَكَرِهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَبْطُلَ دَمُهُ فَوَدَاهُ مِائَةً مِنْ إِبِلِ الصَّدَقَةِ

«خَالَفَهُمْ عَمْرُو بْنُ شُعَيْبٍ»


Nasaayi-4720

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4720. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹய்யிஸாவின் இளைய மகன் கைபரின் எல்லையில் கொலை செய்யப்பட்டுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹய்யிஸாவிடம் “கொன்றவனுக்கு எதிராக இரண்டு சாட்சிகளை நிலை நிறுத்துங்கள். நான் உங்களுக்கு அந்தக் கொலையாளியை கயிற்றால் கட்டி இழுத்து வரச் சொல்கிறேன்” என்று கூறினார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! நான் எங்கிருந்து இரண்டு சாட்சிகளைக் கொண்டு வருவேன். அவர் கொலை செய்யப்பட்டதோ (யூதர்களாகிய) அவர்களின் எல்லைப் பகுதியில் அல்லவா?” என்று அவர் கூறினார்.

(அப்படியானால்) உங்களில் உள்ள ஐம்பது பேர் சத்தியம் செய்கின்றீர்களா?” எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், “நான் அறியாதது குறித்து எவ்வாறு சத்தியம் செய்வேன்?” என்று கூறினார்.

அச்சமயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்களுக்காக யூதர்களாகிய) அவர்கள் ஐம்பது பேர் சத்தியம் செய்யட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! (பொய் கூறும்) யூதர்களாகிய அவர்களிடம் நாங்கள் எவ்வாறு சத்தியம் செய்யுமாறு கூறுவோம்?” என்று கூறினார்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருடைய இழப்பீட்டுத் தொகையை பங்குவைத்தார்கள். அதில் பாதியை அவர்களுக்கு கொடுத்து உதவி செய்தார்கள்.


أَنَّ ابْنَ مُحَيِّصَةَ الْأَصْغَرَ أَصْبَحَ قَتِيلًا عَلَى أَبْوَابِ خَيْبَرَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقِمْ شَاهِدَيْنِ عَلَى مَنْ قَتَلَهُ، أَدْفَعْهُ إِلَيْكُمْ بِرُمَّتِهِ» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، وَمِنْ أَيْنَ أُصِيبُ شَاهِدَيْنِ، وَإِنَّمَا أَصْبَحَ قَتِيلًا عَلَى أَبْوَابِهِمْ؟ قَالَ: «فَتَحْلِفُ خَمْسِينَ قَسَامَةً» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ أَحْلِفُ عَلَى مَا لَا أَعْلَمُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَنَسْتَحْلِفُ مِنْهُمْ خَمْسِينَ قَسَامَةً» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ نَسْتَحْلِفُهُمْ وَهُمُ الْيَهُودُ؟ فَقَسَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دِيَتَهُ عَلَيْهِمْ وَأَعَانَهُمْ بِنِصْفِهَا


Nasaayi-74

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

74.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” تَوَضَّأَ فَأُتِيَ بِمَاءٍ فِي إِنَاءٍ قَدْرَ ثُلُثَيِ الْمُدِّ – قَالَ شُعْبَةُ: فَأَحْفَظُ أَنَّهُ – غَسَلٍ ذِرَاعَيْهِ، وَجَعَلَ يَدْلُكُهُمَا، وَيَمْسَحُ أُذُنَيْهِ بَاطِنَهُمَا وَلَا أَحْفَظُ أَنَّهُ مَسَحَ ظَاهِرَهُمَا


Nasaayi-4668

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4668.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ، وَالسِّنَّوْرِ، إِلَّا كَلْبِ صَيْدٍ»،


Nasaayi-4295

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4295.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ السِّنَّوْرِ، وَالْكَلْبِ إِلَّا كَلْبَ صَيْدٍ»


Nasaayi-4666

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4666.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ثَمَنِ الْكَلْبِ، وَمَهْرِ الْبَغِيِّ، وَحُلْوَانِ الْكَاهِنِ»


Nasaayi-4292

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4292.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ثَمَنِ الْكَلْبِ، وَمَهْرِ الْبَغِيِّ، وَحُلْوَانِ الْكَاهِنِ»


Nasaayi-1829

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1829. புரைதா பின் ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இறைநம்பிக்கையாளர் நெற்றி வியர்க்கும் நிலையிலேயே மரணிப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.


«الْمُؤْمِنُ يَمُوتُ بِعَرَقِ الْجَبِينِ»


Nasaayi-3578

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஒருவர் தனது குதிரைக்குப் பயிற்சியளித்தல்.

3578. காலித் பின் யஸீத் அல்ஜுஹனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், “காலித்! நம்மோடு புறப்படுங்கள். நாம் அம்பெறி(ந்து பயிற்சி செய்)வோம்” என்று கூறினார்கள். (இவ்வாறு நாங்கள் செய்துகொண்டி ருந்தபோது) ஒரு நாள் நான் தாமதித்துவிட்டேன்.

அப்போது அவர்கள், “காலித்! வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை உமக்குத் தெரிவிக்கிறேன்” என்று சொன்னார்கள். எனவே நான் அவர்களிடம் சென்றேன்.

அச்சமயத்தில் அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னதாவது:

(திண்ணமாக அல்லாஹ் ஓர் அம்பின் மூலம் மூன்று பேரைச் சொர்க்கத்தில் நுழையச் செய்கிறான்:

1 . செய்கின்றபோது நன்மையை நாடி அதைச் செய்பவர்.
2 . அதை எறிபவர்.
3 . அம்பெறிவதற்காக (மீண்டும் பயன்படுத்த எடுத்துக் கொடுத்தோ பொருளாதார ரீதியாகவோ) உதவி செய்பவர்.

(எனவே) அம்பெறி(ந்து பயிற்சி செய்)யுங்கள். (குதிரை) சவாரி செய்யுங்கள். நீங்கள் (குதிரை) சவாரி செய்வதைவிட அம்பெறி(ந்து பயிற்சி செய்)வது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.)

மூன்று விஷயங்களில் வீண் என்பது கிடையாது.

1 . ஒருவர் தனது குதிரைக்குப் பயிற்சியளிப்பது.
2 . ஒருவர் தனது மனைவியுடன்

كَانَ عُقْبَةُ بْنُ عَامِرٍ، يَمُرُّ بِي فَيَقُولُ: يَا خَالِدُ، اخْرُجْ بِنَا نَرْمِي، فَلَمَّا كَانَ ذَاتَ يَوْمٍ أَبْطَأْتُ عَنْهُ، فَقَالَ: يَا خَالِدُ، تَعَالَ أُخْبِرْكَ بِمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَأَتَيْتُهُ، فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ وَلَيْسَ اللَّهْوُ إِلَّا فِي ثَلَاثَةٍ: تَأْدِيبِ الرَّجُلِ فَرَسَهُ، وَمُلَاعَبَتِهِ امْرَأَتَهُ، وَرَمْيِهِ بِقَوْسِهِ، وَنَبْلِهِ، وَمَنْ تَرَكَ الرَّمْيَ بَعْدَ مَا عَلِمَهُ رَغْبَةً عَنْهُ، فَإِنَّهَا نِعْمَةٌ كَفَرَهَا ” أَوْ قَالَ: «كَفَرَ بِهَا»


Next Page » « Previous Page