Category: ஷுஅபுல் ஈமான்

Shuabul-Iman

Shuabul-Iman-3800

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3800. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக சொர்க்கத்தில் ரஜப் என்ற ஒரு ஆறு உள்ளது. அதன் தண்ணீர் பாலை விட வென்மையாது; அதன் சுவை தேனை விட இனிமையானது. எவர் ரஜப் மாதத்தில் ஒரு நோன்பு நோற்கிறாரோ அவருக்கு அந்த ஆற்றிலிருந்து அல்லாஹ் நீர் புகட்டுவான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

 


إن في الجنة نهرا يقال له رجب أشد بياضا من اللبن و أحلى من العسل من صام من رجب يوما سقاه الله من ذلك النهر


Shuabul-Iman-7342

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7342. நபி (ஸல் அவர்கள் கூறினார்கள்:

ஆண்களை விட 99 மடங்கு பெண்களுக்கு ஆசை (காமம்) அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. என்றாலும், (ஆசையை அடக்கிக் கொள்ள) அல்லாஹ் அவர்கள் மீது வெட்கத்தைப் போட்டுவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


فُضِّلَتِ الْمَرْأَةُ عَلَى الرَّجُلِ بِتِسْعَةٍ وَتِسْعِينَ جُزْءًا مِنَ اللَّذَّةِ، وَلَكِنَّ اللهَ عَزَّ وَجَلَّ أَلْقَى عَلَيْهِنَّ الْحَيَاءَ


Shuabul-Iman-8940

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8940.


اجْتَنِبُوا أَعْدَاءَ اللهِ الْيَهُودَ , وَالنَّصَارَى فِي عِيدِهِمْ يَوْمَ جَمْعِهِمْ , فَإِنَّ السَّخَطُ يَنْزِلُ عَلَيْهِمْ , فَأَخْشَى أَنْ يُصِيبَكُمْ , وَلَا تَعْلَمُوا بِطَانَتَهُمْ فَتَخَلَّقُوا بِخُلُقِهِمْ


Shuabul-Iman-7941

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7941. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கற்றாழை தேனைக் கெடுத்துவிடுவது போன்று கோபம் ஈமானைக் கெடுத்துவிடும்.

அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி)

(இந்தச் செய்தியை அறிவிக்கும் பைஹகீ அவர்களின் ஆசிரியர்களில் ஒருவரான) அபூஹாஸிம்-அம்ர் பின் அஹ்மத் அவர்கள் கூறியதாவது:

இந்தச் செய்தியை முகய்யிஸ் பின் தமீம் என்பவரிடமிருந்து ஹிஷாம் பின் அம்மார் அவர்கள் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.


إِنَّ الْغَضَبَ لَيُفْسِدُ الْإِيمَانَ كَمَا يُفْسِدُ الصَّبْرُ الْعَسَلَ


Shuabul-Iman-2171

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2171.


سُورَةُ الْبَقَرَةِ فِيهَا آيَةٌ سَيِّدةُ آيِ الْقُرْآنِ لَا تُقْرَأُ فِي بَيْتٍ، فِيهِ شَيْطَانٌ إِلَّا خَرَجَ مِنْهُ آيَةُ الْكُرْسِيِّ


Shuabul-Iman-9423

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9423.


إِذَا كَانَ أَجَلُ أَحَدِكُمْ بِأَرْضٍ أَتَتْ لَهُ إِلَيْهَا حَاجَةٌ , فَإِذَا بَلَغَ أَقْصَى أَثَرِهِ فَتَوَفَّاهُ فَتَقُولُ الْأَرْضُ يَوْمَ الْقِيَامَةِ: يَا رَبِّ هَذَا مَا اسْتَوْدَعْتَنِي


Shuabul-Iman-2082

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2082. காஸிம் பின் முஹம்மது (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் வேதத்திற்கு (என்னுடைய) சுயஅறிவைக்கொண்டு நான் (விளக்கமாக) கூறிவிட்டால், எந்த வானம் எனக்கு நிழல் தரும்? எந்த பூமி என்னை சுமந்து கொள்ளும்? என்று அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை இப்னு அபூமுலைகா (ரஹ்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார். அதில், “அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு வசனத்திற்கு தூயோனும் உயர்ந்தோனுமான; அல்லாஹ் நாடாத ஒன்றை நான் (விளக்கமாக) கூறிவிட்டால்” என்று இடம்பெற்றுள்ளது.

இதுவும் (மேற்கண்டசெய்தி) போன்றே முர்ஸலாகும். (அதாவது முன்கதிஃ ஆகும்)


أَيُّ سَمَاءٍ تُظِلُّنِي، وَأَيُّ أَرْضٍ تُقِلُّنِي إِذَا قُلْتُ فِي كِتَابِ اللهِ بِرَأْيٍ “

وَرَوَاهُ ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ أَبِي بَكْرٍ، كَذَلِكَ مُرْسَلًا، وَقَالَ فِي مَتْنِهِ: ” إِذَا أَنَا قُلْتُ فِي آيَةٍ مِنْ كِتَابِ اللهِ بِغَيْرِ مَا أَرَادَ اللهُ سُبْحَانَهُ وَتَعَالَى بِهَا “


Next Page » « Previous Page