ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
2082. காஸிம் பின் முஹம்மது (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் வேதத்திற்கு (என்னுடைய) சுயஅறிவைக்கொண்டு நான் (விளக்கமாக) கூறிவிட்டால், எந்த வானம் எனக்கு நிழல் தரும்? எந்த பூமி என்னை சுமந்து கொள்ளும்? என்று அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை இப்னு அபூமுலைகா (ரஹ்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார். அதில், “அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு வசனத்திற்கு தூயோனும் உயர்ந்தோனுமான; அல்லாஹ் நாடாத ஒன்றை நான் (விளக்கமாக) கூறிவிட்டால்” என்று இடம்பெற்றுள்ளது.
இதுவும் (மேற்கண்டசெய்தி) போன்றே முர்ஸலாகும். (அதாவது முன்கதிஃ ஆகும்)
أَيُّ سَمَاءٍ تُظِلُّنِي، وَأَيُّ أَرْضٍ تُقِلُّنِي إِذَا قُلْتُ فِي كِتَابِ اللهِ بِرَأْيٍ “
وَرَوَاهُ ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ أَبِي بَكْرٍ، كَذَلِكَ مُرْسَلًا، وَقَالَ فِي مَتْنِهِ: ” إِذَا أَنَا قُلْتُ فِي آيَةٍ مِنْ كِتَابِ اللهِ بِغَيْرِ مَا أَرَادَ اللهُ سُبْحَانَهُ وَتَعَالَى بِهَا “
சமீப விமர்சனங்கள்