Category: திர்மிதீ

Tirmidhi-3540

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

3540. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறுகிறான்:

ஆதமின் மகனே! நீ எதுவரை என்மீது ஆதரவு வைத்து, என்னிடம் கோரிக்கை வைத்துக் கொண்டு இருப்பாயோ அதுவரை நீ எந்த நிலையில் இருந்தாலும் நான் உன்னை மன்னித்துக் கொண்டேயிருப்பேன். அதை நான் ஒரு பாரமாகக் கருதுவதில்லை.

ஆதமின் மகனே! உன்னுடைய பாவங்கள் வானத்தை எட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டாலும் பின்னரும், நீ என்னிடம் மீண்டு மன்னிப்புக் கேட்டால், நான் உன்னை மன்னிக்கவே செய்வேன். அதை நான் ஒரு பாரமாகக் கருதுவதில்லை.

ஆதமின் மகனே! நீ பூமியை நிரப்பும் அளவுக்கு பாவங்கள் செய்து விட்ட பிறகும் கூட, எனக்கு இணை வைக்காத நிலையில் என்னிடம் மீண்டுவந்தால் அப்போதும் உன்னுடைய அந்த அளவிற்கான பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கவே செய்வேன்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இந்தச் செய்தியை இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே நாம் அறிகிறோம்.


قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: يَا ابْنَ آدَمَ إِنَّكَ مَا دَعَوْتَنِي وَرَجَوْتَنِي غَفَرْتُ لَكَ عَلَى مَا كَانَ فِيكَ وَلَا أُبَالِي، يَا ابْنَ آدَمَ لَوْ بَلَغَتْ ذُنُوبُكَ عَنَانَ السَّمَاءِ ثُمَّ اسْتَغْفَرْتَنِي غَفَرْتُ لَكَ، وَلَا أُبَالِي، يَا ابْنَ آدَمَ إِنَّكَ لَوْ أَتَيْتَنِي بِقُرَابِ الأَرْضِ خَطَايَا ثُمَّ لَقِيتَنِي لَا تُشْرِكُ بِي شَيْئًا لَأَتَيْتُكَ بِقُرَابِهَا مَغْفِرَةً


Tirmidhi-1932

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1932.


«لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثٍ، يَلْتَقِيَانِ فَيَصُدُّ هَذَا وَيَصُدُّ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ»


Tirmidhi-2318

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2318. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனக்கு அவசியமில்லாத வீணானவற்றை விட்டுவிடுவது அவர் இஸ்லாத்தை அழகாக கடைப்பிடிக்கிறார் என்பதற்கான அடையாளமாகும்.

அறிவிப்பவர்: அலீ பின் ஹுஸைன் (ரஹ்)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவரின் பல மாணவர்கள் இவ்வாறே ஸுஹ்ரீ —> அலீ பின் ஹுஸைன் பின் அலீ பின் அபூதாலிப் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக அறிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியே நம்முடைய பார்வையில் (ஹதீஸ் எண்-2317 இல் இடம்பெற்றுள்ள) அபூஸலமா (ரஹ்) —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வரும் செய்தியை விட மிகச் சரியானதாகும்.

அலீ பின் ஹுஸைன் (ரஹ்) அவர்கள், அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்களின் காலத்தை அடையவில்லை.


«إِنَّ مِنْ حُسْنِ إِسْلَامِ المَرْءِ تَرْكَهُ مَا لَا يَعْنِيهِ»


Tirmidhi-2317

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2317. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனக்கு அவசியமில்லாத வீணானவற்றை விட்டுவிடுவது அவர் இஸ்லாத்தை அழகாக கடைப்பிடிக்கிறார் என்பதற்கான அடையாளமாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்திலுள்ள செய்தியாகும். இந்தச் செய்தி அபூஸலமா (ரஹ்) அவர்கள் வழியாக இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.


«مِنْ حُسْنِ إِسْلَامِ المَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ»


Tirmidhi-1500

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1500.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَاهُ غَنَمًا يَقْسِمُهَا عَلَى أَصْحَابِهِ ضَحَايَا، فَبَقِيَ عَتُودٌ أَوْ جَدْيٌ، فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ضَحِّ بِهِ أَنْتَ»


Tirmidhi-1499

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

குர்பானி (தியாக)ப் பிராணிகளில், (ஜதஉ எனும் ஆறு மாதத்திற்கு மேல்-ஒரு வயதுக்குட்பட்ட) செம்மறி ஆட்டுக்குட்டியைப் பற்றி வந்துள்ளவை.

1499. அபூகிபாஷ் என்பவர் கூறியதாவது:

நான், (ஜதஉ எனும் பருவத்திலுள்ள) செம்மறிஆடுகளை (சந்தையில் விற்பதற்காக) மதீனாவுக்கு ஓட்டிக் கொண்டு வந்தேன். அவை விற்பனையாகாமல் என்னிடமே இருந்தன. நான் அபூஹுரைரா (ரலி) அவர்களைச் சந்தித்து இதுபற்றி கேட்டேன். அதற்கவர்கள், “ஜதஉ எனும் பருவத்திலுள்ள செம்மறி ஆடுகளை குர்பானி கொடுப்பது நல்லது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

(இது மக்களுக்குத் தெரிந்த பிறகு, கொள்ளையடிப்பது போன்று) மக்கள் என்னிடமிருந்து அந்த செம்மறி ஆடுகளை (விரைவாக) வாங்கிச் சென்றனர்.


جَلَبْتُ غَنَمًا جُذْعَانًا إِلَى المَدِينَةِ فَكَسَدَتْ عَلَيَّ، فَلَقِيتُ أَبَا هُرَيْرَةَ فَسَأَلْتُهُ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «نِعْمَ الْأُضْحِيَّةُ الجَذَعُ مِنَ الضَّأْنِ»، قَالَ: فَانْتَهَبَهُ النَّاسُ


Tirmidhi-3177

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

“அந்நூர்-அந்த ஒளி” எனும் அத்தியாயத்தின் வசனங்கள்.

3177. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவில்) மர்ஸத் பின் அபூமர்ஸத் (ரலி) எனும் ஒரு மனிதர் இருந்தார். அவர் மக்காவிலிருந்து மதீனாவிற்குக் கைதிகளை (இரவோடு இரவாக) தூக்கி வந்து சேர்ப்பவராகவும் இருந்தார்.

(அவர் கூறுகிறார்):

மக்காவில் அனாக் எனும் (பெயரில்) விபச்சாரி ஒருத்தி இருந்தாள். அவள் (நான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்பு) என்னுடைய காதலியாக இருந்தாள். நான் ஒரு மனிதரை இவ்வாறு அழைத்து செல்வதாக வாக்குறிதி அளித்திருந்தேன்.

(எனவே அவரை அழைப்பதற்காக நான் சென்றேன். அது இரவு நேரம் என்பதால்) இரவில் நிலவின் வெளிச்சம் இருக்கும்போது மக்காவின் சுவர் ஒன்றின் நிழலில் ஒதுங்கினேன். அப்போது அனாக் என்பவள் சுவரின் ஓரத்தில் என் நிழல் தெரியவே என்னை நெருங்கி வந்து என்னை அடையாளம் கண்டுவிட்டாள். அவள், மர்ஸதா? என்று கேட்க, நான், ஆம் என்று கூறினேன். உடனே அவள், மர்ஸதே! வருக, வருக! இவ்விரவில் என்னிடம் தங்கிவிட்டுச் செல்வீராக!” என்று கூறினாள். (அப்போது நான் அவளிடம்) “அனாக்! திண்ணமாக அல்லாஹ் விபச்சாரத்தைத் தடை செய்துவிட்டான்” என்று கூறினேன். உடனே அவள், “கூடாரங்களில் இருப்போரே! (மக்களே) இவர் உங்களுடைய கைதிகளை மக்காவிலிருந்து மதீனாவிற்குக் கொண்டுசெல்பவர்”

كَانَ رَجُلٌ يُقَالُ لَهُ: مَرْثَدُ بْنُ أَبِي مَرْثَدٍ، وَكَانَ رَجُلًا يَحْمِلُ الأَسْرَى مِنْ مَكَّةَ حَتَّى يَأْتِيَ بِهِمُ المَدِينَةَ، قَالَ: وَكَانَتْ امْرَأَةٌ بَغِيٌّ بِمَكَّةَ يُقَالُ لَهَا: عَنَاقٌ وَكَانَتْ صَدِيقَةً لَهُ، وَإِنَّهُ كَانَ وَعَدَ رَجُلًا مِنْ أُسَارَى مَكَّةَ يَحْمِلُهُ، قَالَ: فَجِئْتُ حَتَّى انْتَهَيْتُ إِلَى ظِلِّ حَائِطٍ مِنْ حَوَائِطِ مَكَّةَ فِي لَيْلَةٍ مُقْمِرَةٍ، قَالَ: فَجَاءَتْ عَنَاقٌ فَأَبْصَرَتْ سَوَادَ ظِلِّي بِجَنْبِ الحَائِطِ فَلَمَّا انْتَهَتْ إِلَيَّ عَرَفَتْ، فَقَالَتْ: مَرْثَدٌ؟ فَقُلْتُ: مَرْثَدٌ. فَقَالَتْ: مَرْحَبًا وَأَهْلًا هَلُمَّ فَبِتْ عِنْدَنَا اللَّيْلَةَ. قَالَ: قُلْتُ: يَا عَنَاقُ حَرَّمَ اللَّهُ الزِّنَا، قَالَتْ: يَا أَهْلَ الخِيَامِ، هَذَا الرَّجُلُ يَحْمِلُ أُسَرَاءَكُمْ، قَالَ: فَتَبِعَنِي ثَمَانِيَةٌ وَسَلَكْتُ الخَنْدَمَةَ فَانْتَهَيْتُ إِلَى كَهْفٍ أَوْ غَارٍ فَدَخَلْتُ، فَجَاءُوا حَتَّى قَامُوا عَلَى رَأْسِي فَبَالُوا فَظَلَّ بَوْلُهُمْ عَلَى رَأْسِي وَعَمَّاهُمُ اللَّهُ عَنِّي، قَالَ: ثُمَّ رَجَعُوا وَرَجَعْتُ إِلَى صَاحِبِي فَحَمَلْتُهُ وَكَانَ رَجُلًا ثَقِيلًا حَتَّى انْتَهَيْتُ إِلَى الإِذْخِرِ، فَفَكَكْتُ عَنْهُ أَكْبُلَهُ فَجَعَلْتُ أَحْمِلُهُ وَيُعْيِينِي حَتَّى قَدِمْتُ المَدِينَةَ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَنْكِحُ عَنَاقًا؟ فَأَمْسَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَرُدَّ عَلَيَّ شَيْئًا حَتَّى نَزَلَتْ الزَّانِي لَا يَنْكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مَرْثَدُ الزَّانِي لَا يَنْكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ، فَلَا تَنْكِحْهَا»


Tirmidhi-653

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

653.


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي حَجَّةِ الوَدَاعِ وَهُوَ وَاقِفٌ بِعَرَفَةَ، أَتَاهُ أَعْرَابِيٌّ، فَأَخَذَ بِطَرَفِ رِدَائِهِ، فَسَأَلَهُ إِيَّاهُ، فَأَعْطَاهُ وَذَهَبَ، فَعِنْدَ ذَلِكَ حَرُمَتِ المَسْأَلَةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ المَسْأَلَةَ لَا تَحِلُّ لِغَنِيٍّ، وَلَا لِذِي مِرَّةٍ سَوِيٍّ، إِلَّا لِذِي فَقْرٍ مُدْقِعٍ، أَوْ غُرْمٍ مُفْظِعٍ، وَمَنْ سَأَلَ النَّاسَ لِيُثْرِيَ بِهِ مَالَهُ، كَانَ خُمُوشًا فِي وَجْهِهِ يَوْمَ القِيَامَةِ، وَرَضْفًا يَأْكُلُهُ مِنْ جَهَنَّمَ، وَمَنْ شَاءَ فَلْيُقِلَّ، وَمَنْ شَاءَ فَلْيُكْثِرْ»


Tirmidhi-2486

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2486. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உணவு உண்ட பின் நன்றி செலுத்தக் கூடியவர் பொறுமையுள்ள நோன்பாளியைப் போலாவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«الطَّاعِمُ الشَّاكِرُ بِمَنْزِلَةِ الصَّائِمِ الصَّابِرِ»


Next Page » « Previous Page