Category: திர்மிதீ

Tirmidhi-3971

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

3971. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தான் விரும்புவது என்ன என்பது குறித்து நன்கு சிந்திக்கவும்.  ஏனெனில் அவருடைய விருப்பத்திலிருந்து அவருக்காகப் பதிவு செய்யப்படுவது பற்றி அவருக்குத் தெரியாது.

அறிவிப்பவர்: அபூஸலமா (ரஹ்)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.


«لِيَنْظُرَنَّ أَحَدُكُمْ مَا الَّذِي يَتَمَنَّى فَإِنَّهُ لَا يَدْرِي مَا يُكْتَبُ لَهُ مِنْ أُمْنِيَّتِهِ»


Tirmidhi-2152

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

2152. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “இன்ன மனிதர் தங்களுக்கு முகமன் (ஸலாம்) கூறச் சொன்னார்” என்றார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், “அந்த மனிதர் (விதியை மறுத்து மார்க்க அடிப்படையற்ற) நூதனமான கருத்தைக் கூறியுள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு அவர் நூதனமான கருத்தை வெளியிட்டிருந்தால், அவருக்கு என்னுடைய (பதில்) ஸலாமைத் தெரிவிக்காதீர்!

ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்தச் சமுதாயத்தில் (அல்லது) என்னுடைய சமுதாயத்தில் விதி தொடர்பாக (எதிர்மறையாக)ப் பேசுவோரிடையே பூமியில் புதைதல், உருமாற்றப்படுதல், கல்மழை பொழிதல் ஆகியவற்றில் ஒன்று ஏற்படும்” என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்” என்றார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

(இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான) அபூஸக்ர் என்பவரின் இயற்பெயர் ஹுமைத் பின் ஸியாத் என்பதாகும்.


أَنَّ ابْنَ عُمَرَ جَاءَهُ رَجُلٌ فَقَالَ: إِنَّ فُلَانًا يَقْرَأُ عَلَيْكَ السَّلَامَ، فَقَالَ لَهُ: إِنَّهُ بَلَغَنِي أَنَّهُ قَدْ أَحْدَثَ، فَإِنْ كَانَ قَدْ أَحْدَثَ فَلَا تُقْرِئْهُ مِنِّي السَّلَامَ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يَكُونُ فِي هَذِهِ الأُمَّةِ أَوْ فِي أُمَّتِي – الشَّكُّ مِنْهُ – خَسْفٌ أَوْ مَسْخٌ أَوْ قَذْفٌ فِي أَهْلِ القَدَرِ»


Tirmidhi-2322

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2322. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நிச்சயமாக, இந்த உலகம் பழிப்புக்குரியவை. அதிலுள்ள அனைத்தும் பழிப்புக்குரியவை. அல்லாஹ்வை நினைப்பது, அல்லாஹ்வுக்கு பிடித்தமானவை, கல்வியை கற்றுத் தருபவர், அல்லது கல்வியை கற்பவர் ஆகிய இவர்களைத் தவிர” என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.


«أَلَا إِنَّ الدُّنْيَا مَلْعُونَةٌ مَلْعُونٌ مَا فِيهَا إِلَّا ذِكْرُ اللَّهِ وَمَا وَالَاهُ وَعَالِمٌ أَوْ مُتَعَلِّمٌ»


Tirmidhi-182

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

182. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நடுத்தொழுகை என்பது அஸர் தொழுகையாகும்.

அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்தப் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அலீ (ரலி), ஆயிஷா (ரலி), ஹஃப்ஸா (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூஹாஷிம் பின் உத்பா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரி இமாம் கூறினார்:

ஹஸன் பஸரீ, ஸமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ் சரியானதே. ஏனெனில் ஹஸன் பஸரீ ஸமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக ஹதீஸை செவியுற்றுள்ளார் என்று அலீ பின் அப்துல்லாஹ் (இப்னுல் மதீனீ) அவர்கள் கூறினார்.


“நடுத்தொழுகை என்பது அஸர் தொழுகையாகும்” என்ற மேற்கண்ட ஸமுரா (ரலி) அவர்களின் ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

நபித்தோழர்கள் மற்றும் பிற அறிஞர்களில் அதிகமானோர், இந்த ஹதீஸின் படி “நடுத்தொழுகை அஸர் தொழுகையே” என்ற கருத்தில் உள்ளனர்.

ஆனால், ஸைத் பின் ஸாபித் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் “நடுத்தொழுகை என்பது லுஹர் தொழுகை” என்று கூறுகின்றனர்.

இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் “நடுத்தொழுகை என்பது ஃபஜ்ர் தொழுகை” என்று கூறுகின்றனர்.


ஹபீப் பின் ஷஹீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் முஹம்மத் பின் ஸீரீன் அவர்கள்,

«صَلَاةُ الوُسْطَى صَلَاةُ العَصْرِ»


Tirmidhi-2367

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

2367. முஹம்மத் பின் ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் சிவப்புக் களிமண் சாயம் இடப்பட்ட இரண்டு சணல் ஆடைகளை அணிந்திருந்தார்கள். அப்போது அவர்கள் அதில் ஒரு ஆடையினால் மூக்குச் சிந்திவிட்டு “அடடா! அபூஹுரைரா! சணல் துணியிலேயே மூக்குச் சிந்துகிறாயே! (ஒரு காலத்தில்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் ஆயிஷா (ரலி) அவர்களது அறைக்குமிடையே (பசியால்) மயக்கமடைந்து விழுந்துக் கிடப்பேன்.

அங்கு வருபவர் எவரேனும் வந்து நான் பைத்தியக்காரன் என்று நினைத்து என் கழுத்தின் மீது கால் வைப்பார். ஆனால், எனக்குப் பசிதான் (மேலிட்டு) இருக்கும்; பைத்தியம் எதுவும் இருக்காது (அந்த அளவுக்கு வறுமையில் இருந்தேன்.)” என்று சொன்னார்கள்.


كُنَّا عِنْدَ أَبِي هُرَيْرَةَ، وَعَلَيْهِ ثَوْبَانِ مُمَشَّقَانِ مِنْ كَتَّانٍ فَتَمَخَّطَ فِي أَحَدِهِمَا ثُمَّ قَالَ: «بَخٍ بَخٍ يَتَمَخَّطُ أَبُو هُرَيْرَةَ فِي الكَتَّانِ، لَقَدْ رَأَيْتُنِي وَإِنِّي لَأَخِرُّ فِيمَا بَيْنَ مِنْبَرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحُجْرَةِ عَائِشَةَ مِنَ الجُوعِ مَغْشِيًّا عَلَيَّ، فَيَجِيءُ الجَائِي فَيَضَعُ رِجْلَهُ عَلَى عُنُقِي يَرَى أَنَّ بِيَ الجُنُونَ، وَمَا بِي جُنُونٌ وَمَا هُوَ إِلَّا الجُوعُ»


Tirmidhi-3839

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3839. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் சில பேரீத்தம் பழங்களைக் கொண்டு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இவற்றில் (பரக்கத் எனும்) அபிவிருத்தி உண்டாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்தப் பழங்களை ஒன்று சேர்த்து, அதற்காக பரக்கத் உண்டாகும்படி துஆ செய்தார்கள். பிறகு என்னிடம், “இந்தப் பழங்களை உமது பையில் போட்டுக்கொள். அதில் இருந்து எதையாவது எடுக்க நினைக்கும்போது, பையினுள் உனது கையை விட்டு எடுத்துக்கொள். அவற்றை கீழே சிதறிவிடாதே” என்று கூறினார்கள்.

அந்தப் பழங்களில் இருந்து அல்லாஹ்வின் பாதையில் இத்தனை இத்தனை வஸக்குகள் என நான் எடுத்துச் சென்றேன். நாங்கள் அதில் இருந்து சாப்பிட்டோம். பிறருக்கும் உண்ணக் கொடுத்தோம். உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை நடந்த நாள் வரை அந்தப் பை என்னுடைய இடுப்பை விட்டு பிரியாமல் இருந்தது. அவர்கள் கொல்லப்பட்ட அந்த நாளில்தான் அது இல்லாமல் போனது.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியின் இந்த வகை அறிவிப்பாளர்தொடர் “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் உள்ளதாகும். மேலும், அபூஹுரைரா (ரலி) வழியாக இந்த ஹதீஸ் வேறொரு வகை அறிவிப்பாளர்தொடரிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.


أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمَرَاتٍ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ فِيهِنَّ بِالبَرَكَةِ فَضَمَّهُنَّ ثُمَّ دَعَا لِي فِيهِنَّ بِالبَرَكَةِ. فَقَالَ لِي: ” خُذْهُنَّ وَاجْعَلْهُنَّ فِي مِزْوَدِكَ هَذَا، أَوْ فِي هَذَا المِزْوَدِ، كُلَّمَا أَرَدْتَ أَنْ تَأْخُذَ مِنْهُ شَيْئًا فَأَدْخِلْ يَدَكَ فِيهِ فَخُذْهُ وَلَا تَنْثُرْهُ نَثْرًا، فَقَدْ حَمَلْتُ مِنْ ذَلِكَ التَّمْرِ كَذَا وَكَذَا مِنْ وَسْقٍ فِي سَبِيلِ اللَّهِ، فَكُنَّا نَأْكُلُ مِنْهُ وَنُطْعِمُ، وَكَانَ لَا يُفَارِقُ حِقْوِي حَتَّى كَانَ يَوْمُ قَتْلِ عُثْمَانَ فَإِنَّهُ انْقَطَعَ


Tirmidhi-3234

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3234. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் இறைவன் மிக அழகான தோற்றத்தில் என்னிடம் வந்து ‘முஹம்மதே!’ என்று என்னை அழைத்தான். நான் ‘லப்பைக் ரப்பீ வ ஸஃதைக்’ (இறைவனே! உன் கட்டளைக்கு நான் மிகவும் கட்டுப்பட்டவன்) என்று கூறினேன்.

அவன் கூறினான்: ‘முஹம்மதே! (வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினர் எதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீர் அறிவீரா?’ என்று கேட்டான். நான், ‘எனக்குத் தெரியாது!’ என்று கூறினேன்.

அப்போது அவன் தன்னுடைய கையை என் இரு தோள்களுக்கு இடையில் வைத்தான். அதன் குளிர்ச்சியை என் மார்பில் நான் உணர்ந்தேன். அதன் பிறகு, கிழக்குக்கும் மேற்குக்கும் இடையில் உள்ள அனைத்தும் எனக்குத் தெரிந்தது.

பிறகு அவன் மீண்டும், ‘‘முஹம்மதே! என்று என்னை அழைத்தான். நான் ‘லப்பைக் ரப்பீ வ ஸஃதைக்’ (இறைவனே! உன் கட்டளைக்கு நான் மிகவும் கட்டுப்பட்டவன்) என்று கூறினேன். (வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினர் எதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீர் (இப்போது) அறிவீரா?’ என்று அவன் கேட்டான்.

நான் ‘சொர்க்கத்தின் உயர் பதவிகளைப் பற்றியும், பாவங்களை அழிக்கும் செயல்களைப் பற்றியும் விவாதிக்கிறார்கள்’ என்று கூறினேன்.

அந்த உயர் பதவிகளும், பாவங்களை அழிக்கும் செயல்களும்:

ஜமாஅத் தொழுகைக்காக

” أَتَانِي رَبِّي فِي أَحْسَنِ صُورَةٍ، فَقَالَ: يَا مُحَمَّدُ، قُلْتُ: لَبَّيْكَ رَبِّي وَسَعْدَيْكَ، قَالَ: فِيمَ يَخْتَصِمُ المَلَأُ الأَعْلَى؟ قُلْتُ: رَبِّ لَا أَدْرِي، فَوَضَعَ يَدَهُ بَيْنَ كَتِفَيَّ فَوَجَدْتُ بَرْدَهَا بَيْنَ ثَدْيَيَّ فَعَلِمْتُ مَا بَيْنَ المَشْرِقِ وَالمَغْرِبِ، فَقَالَ: يَا مُحَمَّدُ، فَقُلْتُ: لَبَّيْكَ وَسَعْدَيْكَ، قَالَ: فِيمَ يَخْتَصِمُ المَلَأُ الأَعْلَى؟ قُلْتُ: فِي الدَّرَجَاتِ وَالكَفَّارَاتِ، وَفِي نَقْلِ الأَقْدَامِ إِلَى الجَمَاعَاتِ، وَإِسْبَاغِ الوُضُوءِ فِي المَكْرُوهَاتِ، وَانْتِظَارِ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ، وَمَنْ يُحَافِظْ عَلَيْهِنَّ عَاشَ بِخَيْرٍ وَمَاتَ بِخَيْرٍ، وَكَانَ مِنْ ذُنُوبِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ “


Tirmidhi-3233

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3233. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“இன்று இரவு என் இறைவன் மிக அழகிய தோற்றத்தில் என்னிடம் வந்தான். – இது கனவில் நிகழ்ந்தது என்று நான் எண்ணுகிறேன் –

அவன் கூறினான்: ‘முஹம்மதே! (வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினர் எதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீர் அறிவீரா?’ என்று கேட்டான். நான், ‘எனக்குத் தெரியாது!’ என்று கூறினேன்.

பிறகு, அவன் தன்னுடைய கையை என் இரு தோள்களுக்கிடையே வைத்தான். அதன் குளிர்ச்சியை என் மார்பு அல்லது என் கழுத்தின் மீது நான் உணர்ந்தேன். அதன் மூலம் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தையும் நான் அறிந்துகொண்டேன்.

பிறகு அவன் மீண்டும், ‘‘முஹம்மதே! (வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினர் எதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீர் (இப்போது) அறிவீரா?’ என்று கேட்டான். நான் ‘ஆம், அவர்கள் பாவங்களை அழிக்கும் செயல்களைப் பற்றி விவாதிக்கிறார்கள் என்று கூறினேன்.

அந்தப் பாவங்களை அழிக்கும் செயல்கள்:

தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலில் (சிறிது) நேரம் இருத்தல்.
ஜமாஅத் தொழுகைக்காக கால்நடையாக நடந்து செல்லுதல்.
சிரமமான நேரங்களிலும் முழுமையாக உளூ செய்தல்.

யார் இவற்றைச் செய்கிறாரோ, அவர் நல்ல முறையில் வாழ்வார். நல்ல முறையில் மரணிப்பார். மேலும், அவரது

” أَتَانِي اللَّيْلَةَ رَبِّي تَبَارَكَ وَتَعَالَى فِي أَحْسَنِ صُورَةٍ، – قَالَ أَحْسَبُهُ فِي الْمَنَامِ – فَقَالَ: يَا مُحَمَّدُ هَلْ تَدْرِي فِيمَ يَخْتَصِمُ المَلَأُ الأَعْلَى؟ ” قَالَ: ” قُلْتُ: لَا “، قَالَ: «فَوَضَعَ يَدَهُ بَيْنَ كَتِفَيَّ حَتَّى وَجَدْتُ بَرْدَهَا بَيْنَ ثَدْيَيَّ» أَوْ قَالَ: ” فِي نَحْرِي، فَعَلِمْتُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ، قَالَ: يَا مُحَمَّدُ، هَلْ تَدْرِي فِيمَ يَخْتَصِمُ المَلَأُ الأَعْلَى؟ قُلْتُ: نَعَمْ، فِي الكَفَّارَاتِ، وَالكَفَّارَاتُ المُكْثُ فِي المَسَاجِدِ بَعْدَ الصَّلَاةِ، وَالْمَشْيُ عَلَى الْأَقْدَامِ إِلَى الْجَمَاعَاتِ، وَإِسْبَاغُ الوُضُوءِ فِي المَكَارِهِ، وَمَنْ فَعَلَ ذَلِكَ عَاشَ بِخَيْرٍ وَمَاتَ بِخَيْرٍ، وَكَانَ مِنْ خَطِيئَتِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ، وَقَالَ: يَا مُحَمَّدُ، إِذَا صَلَّيْتَ فَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الخَيْرَاتِ، وَتَرْكَ المُنْكَرَاتِ، وَحُبَّ المَسَاكِينِ، وَإِذَا أَرَدْتَ بِعِبَادِكَ فِتْنَةً فَاقْبِضْنِي إِلَيْكَ غَيْرَ مَفْتُونٍ، قَالَ: وَالدَّرَجَاتُ إِفْشَاءُ السَّلَامِ، وَإِطْعَامُ الطَّعَامِ، وَالصَّلَاةُ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ “


Tirmidhi-1781

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் நுழைதல்.

1781. உம்மு ஹானி (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது, அவர்களுக்கு நான்கு சடை(பின்னல்)கள் இருந்தன.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ‘கரீப்’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.

முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ (ரஹ்) அவர்கள், “முஜாஹித் (ரஹ்) அவர்கள் உம்மு ஹானி (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டதாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள்.


மேற்கண்ட செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது…

இதில் இடம்பெறும் (அப்துல்லாஹ் அவர்களின் தந்தையான) அபூநஜீஹ் அவர்களின் இயற்பெயர் யஸார் ஆகும்.

மேற்கண்ட ஹதீஸ் ‘ஹஸன்’ தரத்தில் அமைந்தது. அப்துல்லாஹ் பின் அபூநஜீஹ் மக்காவைச் சேர்ந்தவர் ஆவார்.


«قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ وَلَهُ أَرْبَعُ غَدَائِرَ»


Tirmidhi-591

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

591.


«إِذَا أَتَى أَحَدُكُمُ الصَّلَاةَ وَالإِمَامُ عَلَى حَالٍ فَلْيَصْنَعْ كَمَا يَصْنَعُ الإِمَامُ»


Next Page » « Previous Page