…
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் நபியாகிய அய்யூப் (அலை) அவர்கள் தனக்கு ஏற்பட்ட துன்பத்தில் பதினைந்து ஆண்டுகள் அல்லது பதினெட்டு ஆண்டுகள் மிகுந்த சிரமப்பட்டு வாழ்ந்தார். அய்யூப் (அலை) அவர்களின் இரண்டு சகோதரர்களைத் தவிர ஏனைய அவர்களின் நெருங்கிய உறவினர்களும், தூரமான உறவினர்களும் (அவரது நோயின் காரணமாக) அவரை ஒதுக்கித் தள்ளினார்கள். அவ்விரண்டு சகோதரர்களும், அய்யூப் (அலை) அவர்களுக்கு மிகவும் நெருக்கத்திற்குரியவர்களாக இருந்தார்கள். அந்த இரண்டு சகோதரர்களும் காலையிலும், மாலையிலும் அய்யூப் (அலை) அவர்களை சந்தித்து (ஆறுதல்) சொல்பவர்களாக இருந்தனர்.
அந்த இருவரில் ஒருவர் தன்னுடைய சகோதரனிடம்.
“அல்லாஹ்வின் மீது சத்தியமாக. அய்யூப் (அலை) அவர்கள் உலகத்தில் எவரும் செய்திராத, பெரும் பாவத்தை செய்திருப்பார் என்பதை நீ அறிவாயா?” என்று கேட்டார். அதற்கு, மற்றொரு சகோதரர், ”(பெரும் பாவம்) செய்திருப்பார் என்பது உனக்கு எப்படித் தெரியும்” என்று கேட்டார்.
அதற்கு (குறை சொன்ன) அந்த சகோதரன், “அய்யூப் (அலை) அவர்கள் பதினெட்டு ஆண்டுகள் நோய்வாய்ப்பட்டுள்ளார். அல்லாஹ், அய்யூப் (அலை) மீது கருணை புரிந்து, அவருடைய நோயின் துன்பத்தைப் போக்கவில்லை” என்று கூறினார்.
அய்யூப் (அலை) அவர்கள் குறித்து, (உடன் இருந்த) சகோதரன் சொன்னதை மற்றொரு சகோதரன் மறுநாள் அவர்களிடம் எடுத்து சொன்னார். (இந்த விஷயத்தை) அய்யூப் (அலை) அவர்களிடம் சொல்லாமல் இருப்பதிலிருந்து (அவரால்) பொறுமை காக்க இயலவில்லை.
(அலை) அதற்கு அய்யூப் அவர்கள். ”என்னவென்று நான் அறிய மாட்டேன். மாறாக, அல்லாஹ் அறிந்ததற்கு மாற்றமாகத்தான் நீர் கூறுகின்றாய் என்றே எனக்குத் தோன்றுகின்றது” என்று கூறிவிட்டு,
அய்யூப் (அலை) கூறினார்கள்:
அல்லாஹ் விஷயத்தில் இரண்டு மனிதர்கள் தர்க்கம் செய்து கொண்டே இருந்தார்கள். நான் என்னுடைய வீட்டிற்கு வந்ததும், அல்லாஹ் விஷயத்தில் தர்க்கம் செய்து கொண்டிருந்த அந்த இரண்டு மனிதர்களுக்காக (உண்மையை அறிந்து கொள்ள இறைவனிடம்) பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தேன் (இவ்வாறுதான் நான் செய்தேன்)” என்று கூறினார்கள்.
அய்யூப் (அலை) அவர்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காக வெளியேறிச் செல்பவர்களாக இருந்தார்கள். அப்போது. அவருடைய மனைவி அய்யூப் (அலை) அவர்களின் கரங்களைப் பிடித்து அழைத்துச் செல்பவர்களாக இருந்தார்கள். ஒருநாள் இயற்கைத் தேவையை நிறைவேற்ற சென்ற அய்யூப் (அலை) அவர்கள் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை.
(அந்த நேரத்தில்) அய்யூப் (அலை) அவர்களுக்கு, அவர் நின்ற இடத்திலேயே அல்லாஹ் வஹிச் செய்தியை அருளினான். ‘அய்யூபோ உனது காலால் தரையில் மிதிப்பீராக! (அந்த இடத்திலிருந்து) தண்ணீர் ஊற்று பீறிட்டது இது அருந்துகின்ற குளிர்ந்த தண்ணீர் ஊற்றாகும், அருந்துவதற்குரிய பானமாகும்” என்று கூறினான்.
(நீண்ட நேரத்திற்குப் பிறகு) அய்யூப் (அலை) வெளியேறி, தன்னுடைய மனைவியைச் சந்தித்த போது, அய்யூப் (அலை) அவர்கள் (பாதிக்கப்பட்டிருந்த) முழுமையான நோய்க்கு அல்லாஹ் நிவாரணம் வழங்கி விட்டான் என்பதை அறிந்து கொண்டார். (ஆனால் இவர் தன்னுடைய கணவர் தான் என்பது அவருக்கு தெரியவில்லை) மேலும் அய்யூப் (அலை) மிகவும்: அழகிய தோற்றத்தில் மாறியிருப்பதை (மனைவி) உணர்ந்து கொண்டார்!
மேலும் அய்யூப் (அலை) அவர்களை பார்த்து அவருடைய மனைவி கூறினார்கள்:
“அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! இன்னின்ன சோதனையால் பாதிக்கப்பட்டிருந்த அல்லாஹ்வின் நபியை நீர் கண்டீரா? ஒருவேளை அவர் ஆரோக்கியமுள்ளவராக இருந்திருந்தால் உங்களைப் போன்று தான் இருந்திருப்பார்” என்று இவர் தான் தன்னுடைய கணவர் அய்யூப் (அலை) அவர்கள் என்பதை அறியாத மனைவி (அந்த அழகிய மனிதரிடத்தில்) கேட்டார். அதற்கு, அய்யூப் (அலை) அவர்கள், நான் தான் உன்னுடைய கணவர் என்று பதிலளித்தார்கள்.
மேலும், அல்லாஹ் அய்யூப் (அலை) அவர்களுக்கு இரண்டு பாத்திரங்களை வழங்கினான். அதில் ஒன்றில் (வாற்)கோதுமையும் மற்றொன்றில் (மணற்) கோதுமையும் இருந்தது. மேலும், இரண்டு மேகங்களை அல்லாஹ் அனுப்பினான்.
அந்த மேகங்களில் ஒன்று (வாற்)கோதுமை (களத்தை) அடைந்ததும், அது நிரம்புகின்ற வரை, பொன் மழை பொழிந்தது. மேகங்களில் மற்றொன்று (மணற்) கோதுமை (களத்தை) அடைந்ததும், அது நிரம்புகின்ற வரை, பொன் மழை பொழிந்தது.
…
(இப்னு ஹிப்பான்: 2898)ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى مَنِ امْتُحِنَ بِمِحْنَةٍ فِي الدُّنْيَا فَيَلْقَاهَا بِالصَّبِرِ وَالشُّكْرِ يُرْجَى لَهُ زَوَالُهَا عَنْهُ فِي الدُّنْيَا مَعَ مَا يُدَّخَرُ لَهُ مِنَ الثَّوَابِ فِي الْعُقْبَى
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا نَافِعُ بْنُ يَزِيدَ، عَنْ عَقِيلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ أَيُّوبَ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبِثَ فِي بَلَائِهِ ثَمَانَ عَشْرَةَ سَنَةً، فَرَفَضَهُ الْقَرِيبُ وَالْبَعِيدُ إِلَّا رَجُلَيْنِ مِنْ إِخْوَانِهِ كَانَا مِنْ أَخَصِّ إِخْوَانِهِ، كَانَا يَغْدُوَانِ إِلَيْهِ وَيَرُوحَانِ، فَقَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ: تَعْلَمُ وَاللَّهِ لَقَدْ أَذْنَبَ أَيُّوبُ ذَنْبًا مَا أَذْنَبَهُ أَحَدٌ مِنَ الْعَالَمِينَ قَالَ لَهُ صَاحِبُهُ: وَمَا ذَاكَ؟ قَالَ: مُنْذُ ثَمَانَ عَشْرَةَ سَنَةً لَمْ يَرْحَمْهُ اللَّهُ، فَيَكْشِفُ مَا بِهِ، فَلَمَّا رَاحَ إِلَيْهِ لَمْ يَصْبِرِ الرَّجُلُ حَتَّى ذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ أَيُّوبُ: لَا أَدْرِي مَا تَقُولُ غَيْرَ أَنَّ اللَّهَ يَعْلَمُ أَنِّي كُنْتُ أَمُرُّ عَلَى الرَّجُلَيْنِ يَتَنَازَعَانِ فَيَذْكُرَانِ اللَّهَ، فَأَرْجِعُ إِلَى بَيْتِي فَأُكَفِّرُ عَنْهُمَا كَرَاهِيَةَ أَنْ يُذْكَرَ اللَّهُ إِلَّا فِي حَقٍّ قَالَ: وَكَانَ يَخْرُجُ إِلَى حَاجَتِهِ، فَإِذَا قَضَى حَاجَتَهُ أَمْسَكَتِ امْرَأَتُهُ بِيَدِهِ فَلَمَّا كَانَ ذَاتَ يَوْمٍ، أَبْطَأَ عَلَيْهَا، فَأَوْحَى اللَّهُ إِلَى أَيُّوبَ فِي مَكَانِهِ {ارْكُضْ بِرِجْلِكَ هَذَا مُغْتَسَلٌ بَارِدٌ وَشَرَابٌ} [ص: 42] فَاسْتَبْطَأَتْهُ فَبَلَغَتْهُ، فَأَقْبَلَ عَلَيْهَا قَدْ أَذْهِبِ اللَّهُ مَا بِهِ مِنَ الْبَلَاءِ فَهُوَ أَحْسَنُ مَا كَانَ، فَلَمَّا رَأَتْهُ قَالَتْ: أَيْ بَارِكَ اللَّهُ، فِيكَ هَلْ رَأَيْتَ نَبِيَّ اللَّهِ هَذَا الْمُبْتَلَى، وَاللَّهِ عَلَى ذَلِكَ مَا رَأَيْتُ أَحَدًا كَانَ أَشْبَهَ بِهِ مِنْكَ إِذْ كَانَ صَحِيحًا قَالَ: فَإِنِّي أَنَا هُوَ، وَكَانَ لَهُ أَنْدَرَانِ: أَنْدَرُ الْقَمْحِ، وَأَنْدَرُ الشَّعِيرِ، فَبَعَثَ اللَّهُ سَحَابَتَيْنِ، فَلَمَّا كَانَتْ إِحْدَاهُمَا عَلَى أَنْدَرِ الْقَمْحِ، أَفْرَغَتْ فِيهِ الذَّهَبَ حَتَّى فَاضَتْ، وَأَفْرَغَتِ الْأُخْرَى عَلَى أَنْدَرِ الشَّعِيرِ الْوَرِقَ حَتَّى فَاضَتْ»
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-2898.
Ibn-Hibban-Shamila-2898.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்