பாடம்:
நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் பிரார்த்தனைகளின் தொகுப்பு.
3475. புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர், “அல்லாஹ்ஹும்ம இன்னீ அஸ்அலுக பிஅன்னீ அஷ்ஹது அன்னக அன்தல்லாஹு லா இலாஹ இல்லா அன்தல் அஹதுஸ் ஸமத், அல்லதீ லம் யலித், வலம் யூலத், வலம் யகுல்லஹூ குஃபுவன் அஹத்”
(பொருள்: அல்லாஹ்வே! நீயே அல்லாஹ், உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை, நீயே தனித்தவன், தேவையற்றவன், நீ யாரையும் பெறவில்லை, யாராலும் பெறப்படவும் இல்லை, உனக்கு நிகராக எவருமில்லை என்று நான் சாட்சியம் அளிப்பதைக் கொண்டு நான் உன்னிடம் கேட்கிறேன்.)
என்று பிரார்த்திப்பதைக் கேட்டார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நிச்சயமாக இவர் அல்லாஹ்விடம் அவனது (‘இஸ்முல் அஃளம்’ எனும்) மிகப்பெரிய திருநாமத்தைக் கொண்டு கேட்டார். அந்தப் பெயரால் அழைக்கப்பட்டால் அல்லாஹ் பதிலளிக்கிறான்; அந்தப் பெயரால் கேட்கப்பட்டால் அவன் வழங்குகிறான்” என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பல ஆண்டுகளுக்குப் பிறகு இதை நான் ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள், “அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் இதை மாலிக்
سَمِعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو وَهُوَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ»، قَالَ: فَقَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ سَأَلَ اللَّهَ بِاسْمِهِ الأَعْظَمِ الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ، وَإِذَا سُئِلَ بِهِ أَعْطَى»
قَالَ زَيْدٌ، فَذَكَرْتُهُ لِزُهَيْرِ بْنِ مُعَاوِيَةَ، بَعْدَ ذَلِكَ بِسِنِينَ فَقَالَ: حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، قَالَ زَيْدٌ: ثُمَّ ذَكَرْتُهُ لِسُفْيَانَ، فَحَدَّثَنِي عَنْ مَالِكٍ،
சமீப விமர்சனங்கள்