Category: திர்மிதீ

Tirmidhi-692

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

இரு பெருநாள்களுக்குரிய இரண்டு மாதங்கள் குறையாது என்பது குறித்து வந்துள்ளவை.

692. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு பெருநாட்களின் மாதங்கள் குறையாது.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அபூபக்ரா (ரலி) அவர்கள் வழியாக வரும் இந்த ஹதீஸ் ‘ஹஸன்’ எனும் தரத்தில் அமைந்ததாகும். மேலும், இந்தச் செய்தி அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ரா அவர்கள் வழியாக முர்ஸலாக-நபித்தோழரைக் குறிப்பிடாமலும் வந்துள்ளது.

“பெருநாட்களைக் கொண்ட இரு மாதங்கள் குறையாது” என்ற இந்த ஹதீஸின் கருத்து “ஒரே வருடத்தில் ரமலான், துல்ஹிஜ்ஜாவின் மாதங்கள் நாட்களின் எண்ணிக்கையில் ஒன்றாகக் குறைந்துவிடுவதில்லை. அவற்றில் ஒன்று குறைந்தால், மற்றொன்று முழுமையாக (முப்பது நாட்களாக) இருக்கும்” என்று அஹ்மத் இமாம் கூறியுள்ளார்.

இந்த ஹதீஸின் கருத்து, “இந்த மாதங்கள் நாட்களின் எண்ணிக்கையில் இருபத்தொன்பது நாட்களாக இருந்தாலும், இவை நன்மையிலும் சிறப்பிலும் குறைவில்லாத முழுமையான மாதங்களே ஆகும்” என்று இஸ்ஹாக் பின் ராஹவைஹி அவர்கள் கூறியுள்ளார். இஸ்ஹாக் அவர்களின் இந்த நிலைப்பாட்டின்படி, ஒரே வருடத்தில் இவ்விரு மாதங்களும் ஒரே நேரத்தில் இருபத்தொன்பது நாட்களாகக் குறைவதற்கும் வாய்ப்புண்டு.


” شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ: رَمَضَانُ، وَذُو الحِجَّةِ “


Tirmidhi-261

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் தஸ்பீஹ் (இறைத் துதிச் சொற்களை) கூறுவது குறித்து வந்துள்ளவை.

261. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ருகூஉ செய்யும் போது, தனது ருகூஃவில் ‘ஸுப்ஹான ரப்பியல் அளீம்’ என்று மூன்று முறை கூறினால், அவரது ருகூஉ முழுமையடைந்து விடுகிறது. இதுவே அதன் குறைந்தபட்ச அளவாகும். அவர் ஸஜ்தாச் செய்யும் போது, தனது ஸஜ்தாவில் ‘ஸுப்ஹான ரப்பியல் அஃலா’ என்று மூன்று முறை கூறினால், அவரது ஸஜ்தா முழுமையடைந்து விடுகிறது. இதுவே அதன் குறைந்தபட்ச அளவாகும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் ஹுதைஃபா (ரலி), உக்பா பின் ஆமிர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் வழியாக வரும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் முத்தஸில் அல்ல. (இது முன்கதிஃ ஆகும்). ஏனெனில், அவ்ன் பின் அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை.

இருப்பினும், அறிஞர்களிடம் நடைமுறை இதன்படியே உள்ளது. ஒரு மனிதர் ருகூஉ, ஸஜ்தாவில் மூன்று தஸ்பீஹ்களை விடக் குறைப்பதைத் தவிர்க்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.

இமாம் இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னால் தொழுபவர்கள் மூன்று தஸ்பீஹ்களைப்

” إِذَا رَكَعَ أَحَدُكُمْ، فَقَالَ فِي رُكُوعِهِ: سُبْحَانَ رَبِّيَ العَظِيمِ ثَلَاثَ مَرَّاتٍ، فَقَدْ تَمَّ رُكُوعُهُ، وَذَلِكَ أَدْنَاهُ، وَإِذَا سَجَدَ، فَقَالَ فِي سُجُودِهِ: سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى ثَلَاثَ مَرَّاتٍ، فَقَدْ تَمَّ سُجُودُهُ، وَذَلِكَ أَدْنَاهُ “.


Tirmidhi-283

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

இரு ஸஜ்தாக்களுக்கு இடையே குத்துக்காலிட்டு அமர்வதற்கு அனுமதி.

283. தாஊஸ் பின் கைஸான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், (தொழுகையில் இரு ஸஜ்தாக்களுக்கிடையில்) குதிகால்களின் மீது குந்தி அமர்வதைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள், ‘அது நபிவழியாகும்’ என்று கூறினார்கள். நாங்கள், ‘அது ஒரு மனிதனுக்கு (சிரமமான அல்லது) கடினமானதாக நாங்கள் கருதுகிறோம்’ என்று கூறினோம். அதற்கு அவர்கள், ‘மாறாக, அது உங்கள் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்’ என்று கூறினார்கள்.


 


قُلْنَا لِابْنِ عَبَّاسٍ فِي الإِقْعَاءِ عَلَى القَدَمَيْنِ، قَالَ: «هِيَ السُّنَّةُ»، فَقُلْنَا: إِنَّا لَنَرَاهُ جَفَاءً بِالرَّجُلِ، قَالَ: «بَلْ هِيَ سُنَّةُ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»،


Tirmidhi-282

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

இரு ஸஜ்தாக்களுக்கு இடையே குத்துக்காலிட்டு அமர்வது வெறுப்புக்குரிய செயல்.

282. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீயே! எனக்கு எதை நான் விரும்புகின்றேனோ அதையே உமக்கும் விரும்புகின்றேன். எனக்கு எதை நான் வெறுக்கின்றேனோ அதையே உமக்கும் வெறுக்கின்றேன். நீர் இரு ஸஜ்தாக்களுக்கு இடையில் (கால்களை நட்டி வைத்து, பிட்டத்தை தரையில் வைத்து) குத்துக்காலிட்டு அமர வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அலீ (ரலி) வழியாக வரும் இந்தச் செய்தியை அபூஇஸ்ஹாக் —> ஹாரிஸ் அல்அஃவர் —> அலீ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் தான் நாம் அறிகிறோம்.

இதில் இடம்பெறும் ஹாரிஸ் அல்அஃவர் என்பவர் பலவீனமானவர் என அறிஞர்களில் சிலர் குறிப்பிட்டுள்ளனர். எனினும், பெரும்பாலான அறிஞர்கள் இந்தச் செய்தியின் அடிப்படையில் (குந்தியமர்ந்து-குத்துக்காலிட்டு) தொழுவதை வெறுக்கத்தக்கது (மக்ரூஹ்) எனக் கருதுகின்றனர்.

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் ஆயிஷா (ரலி), அனஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَلِيُّ، أُحِبُّ لَكَ مَا أُحِبُّ لِنَفْسِي، وَأَكْرَهُ لَكَ مَا أَكْرَهُ لِنَفْسِي، لَا تُقْعِ بَيْنَ السَّجْدَتَيْنِ»،


Tirmidhi-3896

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3896. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய தோழர்களில் எவரும் மற்றவரைப் பற்றிய (குறைபாடுகள் எதனையும்) என்னிடம் தெரிவிக்க வேண்டாம். ஏனெனில், நான் உங்களிடம் வரும்போது உங்கள் எவர் மீதும் எத்தகைய மனக்கசப்பும் இல்லாத (தூய்மையான) உள்ளத்துடனேயே வர விரும்புகிறேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


«لَا يُبَلِّغُنِي أَحَدٌ عَنْ أَحَدٍ مِنْ أَصْحَابِي شَيْئًا؛ فَإِنِّي أُحِبُّ أَنْ أَخْرُجَ إِلَيْهِمْ وَأَنَا سَلِيمُ الصَّدْرِ»


Tirmidhi-251

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

251.


سَكْتَتَانِ حَفِظْتُهُمَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَنْكَرَ ذَلِكَ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ، وَقَالَ: حَفِظْنَا سَكْتَةً، فَكَتَبْنَا إِلَى أُبَيِّ بْنِ كَعْبٍ بِالمَدِينَةِ، فَكَتَبَ أُبَيٌّ: أَنْ حَفِظَ سَمُرَةُ، قَالَ سَعِيدٌ، فَقُلْنَا لِقَتَادَةَ: مَا هَاتَانِ السَّكْتَتَانِ؟ قَالَ: «إِذَا دَخَلَ فِي صَلَاتِهِ، وَإِذَا فَرَغَ مِنَ القِرَاءَةِ»، ثُمَّ قَالَ بَعْدَ ذَلِكَ: ” وَإِذَا قَرَأَ: {وَلَا الضَّالِّينَ} [الفاتحة: ٧] “، قَالَ: «وَكَانَ يُعْجِبُهُ إِذَا فَرَغَ مِنَ القِرَاءَةِ أَنْ يَسْكُتَ حَتَّى يَتَرَادَّ إِلَيْهِ نَفَسُهُ»،


Tirmidhi-250

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

250.


«إِذَا أَمَّنَ الإِمَامُ فَأَمِّنُوا، فَإِنَّهُ مَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ المَلَائِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ».


Tirmidhi-244

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

244.


سَمِعَنِي أَبِي وَأَنَا فِي الصَّلَاةِ، أَقُولُ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، فَقَالَ لِي: أَيْ بُنَيَّ مُحْدَثٌ إِيَّاكَ وَالحَدَثَ، قَالَ: وَلَمْ أَرَ أَحَدًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَبْغَضَ إِلَيْهِ الحَدَثُ فِي الإِسْلَامِ – يَعْنِي مِنْهُ – قَالَ: ” وَقَدْ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَعَ أَبِي بَكْرٍ، وَمَعَ عُمَرَ، وَمَعَ عُثْمَانَ، فَلَمْ أَسْمَعْ أَحَدًا مِنْهُمْ يَقُولُهَا، فَلَا تَقُلْهَا، إِذَا أَنْتَ صَلَّيْتَ فَقُلْ: {الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ} [الفاتحة: ٢] «.»


Tirmidhi-239

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

239.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَبَّرَ لِلصَّلَاةِ نَشَرَ أَصَابِعَهُ»


Next Page » « Previous Page