Category: திர்மிதீ

Tirmidhi-3461

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3461. அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு போரில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் திரும்பி வந்து மதீனாவை நெருங்கியபோது, மக்கள் தக்பீர் கூறத் தொடங்கினர், அவர்களின் குரல்களை உயர்த்தினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நிச்சயமாக உங்கள் இறைவன் செவிடன் அல்ல. அவன் உங்களைவிட்டுத் தொலைவிலும் இல்லை. அவன் உங்களுக்கு இடையிலும் உங்கள் பயணப் பெட்டிகளின் தலைப்பக்கத்திலும் உள்ளான்” என்று கூறினார்கள்.

பின்னர் அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ் இப்னு கைஸே! சொர்க்கத்தின் புதையல்களில் இருந்து ஒரு புதையலை நான் உங்களுக்குக் கற்றுத்தரட்டுமா?” என்று கேட்டுவிட்டு, அது “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என்று கூறினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.

இதில் இடம்பெறும் அபூஉஸ்மான் அன்னஹ்தீ என்பவரின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் முல் ஆகும். அபூநஆமா என்பவரின் பெயர் அம்ர் பின் ஈஸா ஆகும்.

உங்களுக்கு இடையிலும் உங்கள் பயணப் பெட்டிகளின் தலைப்பக்கத்திலும் உள்ளான் என்பதன் கருத்து, அவனது அறிவும் ஆற்றலும் ஆகும்.


كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ، فَلَمَّا قَفَلْنَا أَشْرَفْنَا عَلَى المَدِينَةِ فَكَبَّرَ النَّاسُ تَكْبِيرَةً وَرَفَعُوا بِهَا أَصْوَاتَهُمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَصَمَّ وَلَا غَائِبٍ، هُوَ بَيْنَكُمْ وَبَيْنَ رُءُوسِ رِحَالِكُمْ»، ثُمَّ قَالَ: ” يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ، أَلَا أُعَلِّمُكَ كَنْزًا مِنْ كُنُوزِ الجَنَّةِ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ “.


Tirmidhi-211

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

211.


مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ: اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ القَائِمَةِ، آتِ مُحَمَّدًا الوَسِيلَةَ وَالفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، إِلَّا حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ يَوْمَ القِيَامَةِ


Tirmidhi-3614

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3614. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள்.

பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான்.

பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ இமாம் கூறினார்:

இதில் இடம்பெறும் அப்துர்ரஹ்மான் பின் ஜுபைர் என்பவர் குறைஷி கிளையைச் சேர்ந்தவர். மேலும் இவர் மிஸ்ர் (எனும் எகிப்து) நாட்டைச் சேர்ந்தவர்.

அப்துர்ரஹ்மான் பின் ஜுபைர் பின் நுஃபைர் என்ற மற்றொருவர் ஷாம் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.


«إِذَا سَمِعْتُمُ المُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ، ثُمَّ صَلُّوا عَلَيَّ، فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا، ثُمَّ سَلُوا لِيَ الوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، وَمَنْ سَأَلَ لِيَ الوَسِيلَةَ حَلَّتْ عَلَيْهِ الشَّفَاعَةُ»


Tirmidhi-208

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

பாங்கு சொல்வதைக் கேட்டால் கூற வேண்டியவை.

208. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் அபூராஃபிஉ (ரலி), அபூஹுரைரா (ரலி), உம்முஹபீபா (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அப்துல்லாஹ் பின் ரபீஆ (ரலி), ஆயிஷா (ரலி), முஆத் பின் அனஸ் (ரலி), முஆவியா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

அபூஸயீத் (ரலி) அவர்களின் இந்த ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” என்ற தரத்தில் அமைந்ததாகும்.

மஃமர் (ரஹ்) அவர்களும், இன்னும் பலரும் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து மேற்கண்ட மாலிக் (ரஹ்) அவர்களின் ஹதீஸைப் போன்றே அறிவித்துள்ளனர்.

அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள், ஸுஹ்ரீ —> ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் இந்த ஹதீஸை அறிவித்துள்ளார். மாலிக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பே மிகவும் சரியானதாகும்.


«إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ المُؤَذِّنُ»


Tirmidhi-3469

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3469.


مَنْ قَالَ حِينَ يُصْبِحُ وَحِينَ يُمْسِي: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ لَمْ يَأْتِ أَحَدٌ يَوْمَ القِيَامَةِ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلَّا أَحَدٌ قَالَ مِثْلَ مَا قَالَ أَوْ زَادَ عَلَيْهِ


Tirmidhi-2905

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2905. எவர் குர்ஆனை ஓதி, அதை மனனமிட்டு, அதில் அனுமதிக்கப்பட்டதை அனுமதிக்கப்பட்டதாகவே கருதி, அதில் தடுக்கப்பட்டதை தடுக்கப்பட்டதாகவே கருதி செயல்படுகிறாரோ, அவரை அல்லாஹ் அதன் மூலம் சொர்க்கத்தில் நுழையச் செய்வான்.

மேலும், அவரது குடும்பத்தில் நரகம் கட்டாயமான பத்து பேருக்கு அவர் பரிந்துரை செய்ய அனுமதிப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் ‘கரீப்-அரிதானது’ எனும் வகையைச் சேர்ந்தது. இந்த ஒரு வகை அறிவிப்பாளர்தொடர் தவிர வேறு வழியில் இதை நாங்கள் அறியவில்லை. மேலும், இதற்கு (வேறு) சரியான அறிவிப்பாளர் தொடர் இல்லை. இதில் இடம்பெறும் ஹஃப்ஸ் பின் ஸுலைமான்-அபூஉமர் பஸ்ஸாஸ் கூஃபீ என்பவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று கருதப்படுகிறார்.


«مَنْ قَرَأَ الْقُرْآنَ وَاسْتَظْهَرَهُ، فَأَحَلَّ حَلَالَهُ، وَحَرَّمَ حَرَامَهُ أَدْخَلَهُ اللَّهُ بِهِ الجَنَّةَ وَشَفَّعَهُ فِي عَشَرَةٍ مِنْ أَهْلِ بَيْتِهِ كُلُّهُمْ قَدْ وَجَبَتْ لَهُ النَّارُ»


Tirmidhi-3388

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

காலை, மாலை ஓத வேண்டிய பிரார்த்தனைகள் குறித்து வந்துள்ளவை.

3388. ஒரு அடியார் ஒவ்வொரு காலையிலும் மாலையிலும், “பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹீ ஷைஉன் ஃபில்அர்ளி, வலா ஃபிஸ்ஸமாஇ, வஹுவஸ் ஸமீஉல் அலீம்” என்று மூன்று முறை கூறினால் அவருக்கு எந்த ஒன்றும், தீங்கு செய்யாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இதன் பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பிக்கிறேன்). அவனுடைய பெயருடன் இருக்கும்போது வானத்திலோ, பூமியிலோ எந்தப் பொருளும் தீங்கு செய்யாது. மேலும், அவன் யாவற்றையும் செவியுறுபவன்; நன்கறிபவன்.)

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)


இந்த ஹதீஸை அறிவித்த அபான் (ரஹ்) அவர்களுக்குப் பக்கவாதம் ஏற்பட்டிருந்தது. அப்போது ஒருவர் அபான் (ரஹ்) அவர்களைப் பார்த்தபோது, அபான் (ரஹ்) அவர்கள், “என்னைப் பார்க்கிறீர்களா? நான் உங்களுக்கு அறிவித்த ஹதீஸ் உண்மையானதே. ஆனால், அல்லாஹ் தன் விதியை என்மீது நிறைவேற்றுவதற்காகவோ (என்னவோ) அன்று நான் அந்த துஆவைக் கூறவில்லை” என்று கூறினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.


مَا مِنْ عَبْدٍ يَقُولُ فِي صَبَاحِ كُلِّ يَوْمٍ وَمَسَاءِ كُلِّ لَيْلَةٍ: بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ العَلِيمُ ثَلَاثَ مَرَّاتٍ، فَيَضُرَّهُ شَيْءٌ “

وَكَانَ أَبَانُ، قَدْ أَصَابَهُ طَرَفُ فَالِجٍ، فَجَعَلَ الرَّجُلُ يَنْظُرُ إِلَيْهِ، فَقَالَ لَهُ أَبَانُ: «مَا تَنْظُرُ؟ أَمَا إِنَّ الحَدِيثَ كَمَا حَدَّثْتُكَ، وَلَكِنِّي لَمْ أَقُلْهُ يَوْمَئِذٍ لِيُمْضِيَ اللَّهُ عَلَيَّ قَدَرَهُ»


Tirmidhi-3340

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3340.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى العَصْرَ هَمَسَ – وَالهَمْسُ فِي قَوْلِ بَعْضِهِمْ تَحَرُّكُ شَفَتَيْهِ كَأَنَّهُ يَتَكَلَّمُ – فَقِيلَ لَهُ: إِنَّكَ يَا رَسُولَ اللَّهِ إِذَا صَلَّيْتَ العَصْرَ هَمَسْتَ؟ قَالَ: ” إِنَّ نَبِيًّا مِنَ الأَنْبِيَاءِ كَانَ أُعْجِبَ بِأُمَّتِهِ فَقَالَ: مَنْ يَقُومُ لِهَؤُلَاءِ؟ فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ أَنْ خَيِّرْهُمْ بَيْنَ أَنْ أَنْتَقِمَ مِنْهُمْ وَبَيْنَ أَنْ أُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوَّهُمْ، فَاخْتَارُوا النِّقْمَةَ، فَسَلَّطَ عَلَيْهِمُ المَوْتَ، فَمَاتَ مِنْهُمْ فِي يَوْمٍ سَبْعُونَ أَلْفًا

قَالَ: وَكَانَ إِذَا حَدَّثَ بِهَذَا الحَدِيثِ حَدَّثَ بِهَذَا الحَدِيثِ الآخَرِ قَالَ: ” كَانَ مَلِكٌ مِنَ المُلُوكِ وَكَانَ لِذَلِكَ المَلِكِ كَاهِنٌ يَكْهَنُ لَهُ، فَقَالَ الكَاهِنُ: انْظُرُوا لِي غُلَامًا فَهِمًا – أَوْ قَالَ: فَطِنًا – لَقِنًا فَأُعَلِّمَهُ عِلْمِي هَذَا، فَإِنِّي أَخَافُ أَنْ أَمُوتَ فَيَنْقَطِعَ مِنْكُمْ هَذَا العِلْمُ، وَلَا يَكُونَ فِيكُمْ مَنْ يَعْلَمُهُ. قَالَ: فَنَظَرُوا لَهُ عَلَى مَا وَصَفَ، فَأَمَرُوهُ أَنْ يَحْضُرَ ذَلِكَ الكَاهِنَ وَأَنْ يَخْتَلِفَ إِلَيْهِ، فَجَعَلَ يَخْتَلِفُ، إِلَيْهِ وَكَانَ عَلَى طَرِيقِ الغُلَامِ رَاهِبٌ فِي صَوْمَعَةٍ – قَالَ مَعْمَرٌ: أَحْسِبُ أَنَّ أَصْحَابَ الصَّوَامِعِ كَانُوا يَوْمَئِذٍ مُسْلِمِينَ – قَالَ: فَجَعَلَ الغُلَامُ يَسْأَلُ ذَلِكَ الرَّاهِبَ كُلَّمَا مَرَّ بِهِ، فَلَمْ يَزَلْ بِهِ حَتَّى أَخْبَرَهُ، فَقَالَ: إِنَّمَا أَعْبُدُ اللَّهَ. قَالَ: فَجَعَلَ الغُلَامُ يَمْكُثُ عِنْدَ الرَّاهِبِ وَيُبْطِئُ عَنِ الكَاهِنِ، فَأَرْسَلَ الكَاهِنُ إِلَى أَهْلِ الغُلَامِ إِنَّهُ لَا يَكَادُ يَحْضُرُنِي، فَأَخْبَرَ الغُلَامُ الرَّاهِبَ بِذَلِكَ، فَقَالَ لَهُ الرَّاهِبُ: إِذَا قَالَ لَكَ الكَاهِنُ: أَيْنَ كُنْتَ؟ فَقُلْ: عِنْدَ أَهْلِي، [ص:438] وَإِذَا قَالَ لَكَ أَهْلُكَ: أَيْنَ كُنْتَ؟ فَأَخْبِرْهُمْ أَنَّكَ كُنْتَ عِنْدَ الكَاهِنِ. قَالَ: فَبَيْنَمَا الغُلَامُ عَلَى ذَلِكَ إِذْ مَرَّ بِجَمَاعَةٍ مِنَ النَّاسِ كَثِيرٍ قَدْ حَبَسَتْهُمْ دَابَّةٌ، فَقَالَ بَعْضُهُمْ: إِنَّ تِلْكَ الدَّابَّةَ كَانَتْ أَسَدًا. قَالَ: فَأَخَذَ الغُلَامُ حَجَرًا فَقَالَ: اللَّهُمَّ إِنْ كَانَ مَا يَقُولُ الرَّاهِبُ حَقًّا فَأَسْأَلُكَ أَنْ أَقْتُلَهَا. قَالَ: ثُمَّ رَمَى فَقَتَلَ الدَّابَّةَ. فَقَالَ النَّاسُ: مَنْ قَتَلَهَا؟ قَالُوا: الغُلَامُ، فَفَزِعَ النَّاسُ وَقَالُوا: لَقَدْ عَلِمَ هَذَا الغُلَامُ عِلْمًا لَمْ يَعْلَمْهُ أَحَدٌ. قَالَ: فَسَمِعَ بِهِ أَعْمَى، فَقَالَ لَهُ: إِنْ أَنْتَ رَدَدْتَ بَصَرِي فَلَكَ كَذَا وَكَذَا. قَالَ: لَا أُرِيدُ مِنْكَ هَذَا، وَلَكِنْ أَرَأَيْتَ إِنْ رَجَعَ إِلَيْكَ بَصَرُكَ، أَتُؤْمِنُ بِالَّذِي رَدَّهُ عَلَيْكَ؟ قَالَ: نَعَمْ. قَالَ: فَدَعَا اللَّهَ فَرَدَّ عَلَيْهِ بَصَرَهُ، فَآمَنَ الأَعْمَى، فَبَلَغَ المَلِكَ أَمْرُهُمْ، فَبَعَثَ إِلَيْهِمْ، فَأُتِيَ بِهِمْ، فَقَالَ: لَأَقْتُلَنَّ كُلَّ وَاحِدٍ مِنْكُمْ قِتْلَةً لَا أَقْتُلُ بِهَا صَاحِبَهُ، فَأَمَرَ بِالرَّاهِبِ وَالرَّجُلِ الَّذِي كَانَ أَعْمَى فَوَضَعَ المِنْشَارَ عَلَى مَفْرِقِ أَحَدِهِمَا فَقَتَلَهُ، وَقَتَلَ الآخَرَ


Tirmidhi-737

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

737. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் நோன்பு நோற்ற அளவுக்கு வேறு எந்த மாதத்திலும் அதிகமாக நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை.

அவர்கள் குறிப்பிட்ட சில நாட்களைத் தவிர்த்து ஷஅபான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பார்கள்; இல்லை மாறாக முழுமையாகவும் நோன்பு நோற்பார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அபூஸலமா (ரஹ்) அவர்களிடமிருந்து முஹம்மத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

இது பற்றி இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்களின் விளக்கம்:

இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள – بَلْ كَانَ يَصُومُهُ كُلَّهُ – “முழுமையாக நோன்பு நோற்பார்கள்” என்ற கருத்தைப் பற்றி கூறுகையில், ‘அரபி மொழியில் அதிகம் என்பதைக் குறிப்பிட இவ்வாறு கூறுவது வழமைதான். ஒருவர் ஒரு மாதத்தின் பெரும்பகுதியில் நோன்பு நோற்றால், “அவர் முழு மாதமும் நோன்பு நோற்றார்” என்று சொல்வது வழக்கம். அதுபோல, “ஒருவர் இரவு முழுவதும் தொழுதார்” என்று சொல்வதும் உண்டு. ஆனால் அவர் சிறிது நேரம் உணவு உட்கொண்டோ அல்லது வேறு சில காரியங்களில் ஈடுபட்டோ இருந்திருக்கலாம்.

எனவே இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்கள் இரு ஹதீஸ்களையும் இணைத்து (ஒத்துப்போகிறவாறு) புரிந்துள்ளார்கள். அவர்களின் கருத்துப்படி, ‘இந்த ஹதீஸின் பொருள்—நபி (ஸல்) அவர்கள்

«مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَهْرٍ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ كَانَ يَصُومُهُ إِلَّا قَلِيلًا بَلْ كَانَ يَصُومُهُ كُلَّهُ»،

حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ،


Tirmidhi-736

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ரமளானுடன் ஷஅபானை இணைத்து நோன்பு வைப்பது குறித்து வந்துள்ளவை.

736. உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஷஅபான், ரமளான் ஆகிய இரண்டு மாதங்களைத் தவிர, வேறு எந்த இரு மாதங்களிலும் தொடர்ந்து நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உம்மு ஸலமா (ரலி) அவர்கள் வழியாக வரும் மேற்கண்ட செய்தி “ஹஸன்” தரத்தில் அமைந்ததாகும்.


«مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ إِلَّا شَعْبَانَ وَرَمَضَانَ»


Next Page » « Previous Page