அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆஹா! ஆஹா! இந்த ஐந்து விஷயங்கள் (மறுமை நாளில் நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசைக் கனக்க வைக்கும் அதிசயம் தான் என்ன!
1 . லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை).
2 . ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்).
3 . அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே).
4 . அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்).
5 . ஒரு முஸ்லிம் தனது குழந்தை மரணிக்கும்போது, நன்மையை நாடி அதைப் பொறுத்துக் கொள்வது.
அறிவிப்பவர்: நபி (ஸல்) அவர்களின் (ஒட்டக) மேய்ப்பாளரான அபூஸல்மா-ஹுரைஸ் (ரலி)
(குப்ரா-நஸாயி: 9923)أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، وَعِيسَى بْنُ مُسَاوِرٍ قَالَا: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْعَلَاءِ، وَابْنِ جَابِرٍ قَالَا: حَدَّثَنَا أَبُو سَلَامٍ، عَنْ أَبِي سَلْمَى، رَاعِي رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
” بَخٍ بَخٍ، مَا أَثْقَلَهُنَّ فِي الْمِيزَانِ: لَا إِلَهَ إِلَّا اللهُ، وَسُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَاللهُ أَكْبَرُ، وَالْعَبْدُ الصَّالِحُ يُتَوَفَّى لِلْمُسْلِمِ فَيَحْتَسِبُهُ “
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-9923.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-.
ஆய்வின் சுருக்கம்:
இந்தச் செய்தி வேறு சில நபித்தோழர்களின் வழியாக வந்திருந்தாலும் இது ஹுரைஸ் (ரலி) அவர்களின் செய்தி என்பது தான் மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இந்தக் கருத்தில் ஹுரைஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
வலீத் பின் முஸ்லிம்
பார்க்க: …, குப்ரா நஸாயீ-9923, இப்னு ஹிப்பான்-833, அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-,
யஹ்யா பின் அபூகஸீர்
பார்க்க: அஹ்மத்-18076, 23100,
…அஹ்மத்-15662, …
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்