தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-1632

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(வித்ருத் தொழுகையின்) குனூத் துஆ.

அபுல் ஹவ்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) அவர்களின் பேரரான) ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் நினைவுகூரும் (முக்கிய) செய்திகள் என்ன?” என்று கேட்டேன்,

அதற்கவர்கள், (ஒரு தடவை) அவர்கள் என்னை தன் தோளில் ஏற்றி வைத்திருந்தார்கள். அப்போது நான் தர்மப் பொருளாக வந்த பேரித்தம் பழத்தை எடுத்து என் வாயில் போட்டுவிட்டேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதை தர்மப்பொருளில் போட்டுவிடு! தர்மப் பொருள்கள் நமக்கு ஆகுமானதல்ல என்பது உமக்கு தெரியாதா? என்று என்னிடம் கூறினார்கள். (இதை நினைவுகூருகிறேன்) என்று கூறினார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹும்மஹ்தினீ ஃபீமன் ஹதைத்த வ ஆஃபினீ பீமன் ஆஃபைத்த. வதவல்லனீ பீமன் தவல்லைத்த. வபாரிக்லீ ஃபீமா அஃதைத வகினீ ஷர்ர மா களைத்த. இன்னக்க தக்லீ வலா யுக்லா அலைக்க. இன்னஹு லா யதிள்ளு மவ்வாலைத்த, தபாரக்த ரப்பனா வதஆலைத்த என்ற பிரார்த்தனையை கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். (இதையும் நினைவுகூருகிறேன்) என்று கூறினார்கள்.

(துஆவின் பொருள்: இறைவா நீ நேர்வழி காட்டியவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக. நீ யாருக்கு ஆரோக்கியத்தை வழங்கினாயோ அவர்களுடன் எனக்கும் ஆரோக்கியத்தை வழங்குவாயாக. யாருக்கு நீ பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக் கொள். நீ எனக்குக் கொடுத்தவற்றில் அருள் புரி. நீ தீர்ப்பாக்கிய விஷயங்களில் கெட்டதை விட்டு என்னைக் காப்பாற்று. ஏனென்றால் நீயே முடிவு செய்வாய். உனக்கு எதிராக முடிவு செய்யப்படாது. நீ யாருக்குப் பொறுப்பேற்றாயோ அவர்கள் இழிவடைய மாட்டார்கள். எங்களின் இறைவா! நீயே பாக்கியசாலி. நீயே உயர்ந்தவன்.)

(ஸுனன் தாரிமீ: 1632)

بَابُ الدُّعَاءِ فِي الْقُنُوتِ

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِي الْحَوْرَاءِ السَّعْدِيِّ قَالَ:

قُلْتُ لِلْحَسَنِ بْنِ عَلِيٍّ مَا تَذْكُرُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: حَمَلَنِي عَلَى عَاتِقِهِ، فَأَخَذْتُ تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ، فَأَدْخَلْتُهَا فِي فَمِي، فَقَالَ لِي: «أَلْقِهَا، أَمَا شَعَرْتَ أَنَّا لَا تَحِلُّ لَنَا الصَّدَقَةُ»

قَالَ: وَكَانَ يَدْعُو بِهَذَا الدُّعَاءِ «اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1632.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1559,
1560.




மேலும் பார்க்க: திர்மிதீ-464 .

2 comments on Darimi-1632

  1. இந்த செய்தியில் துஆவாக மட்டும்தான் இடம்பெற்றுள்ளது நீங்கள் பாடத்தின் தலைப்பு குனூத் துஆ என்று போட்டிருப்பது தவறு

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      தலைப்பு நாம் போடவில்லை சகோதரரே! நூலாசிரியர் தாரமீ அவர்கள் போட்டுள்ளதை நாம் பதிவு செய்துள்ளோம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.