தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-2618

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு நபி, ஒரு நகரத்தின் மக்களுடன் போரிட்டார். அந்த நகரை அவர் கைப்பற்ற நெருங்கியபோது, சூரியன் மறைந்துவிடுமோ என்று அஞ்சினார். உடனே சூரியனை நோக்கி, “சூரியனே! நீ கட்டளையிடப்பட்டிருக்கிறாய். உனக்கு என் மீது உள்ள கண்ணியத்தின் அடிப்படையில் பகலில் சிறிது நேரம் நீ நின்றுவிடவேண்டும்!” என்று எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது என்று கூறினார். அல்லாஹ்வின் கட்டளையால் சூரியன் நின்றது. அந்த நபி நகரத்தை வெற்றி கொண்டார்.

(இதற்கு முன்) அவர்கள் போரில் கிடைத்த பொருட்களை (கனீமத்) இறைவனுக்காகக் காணிக்கையாகக் கொண்டு வருவார்கள். அப்பொழுது வானிலிருந்து நெருப்பு வந்து அந்தக் காணிக்கையை எரித்துவிடும். இந்த முறை அவர்கள் கனீமத் பொருட்களைக் கொண்டு வந்தபோது, நெருப்பு வந்து அதை எரிக்கவில்லை.

உடனே அவர்கள், “அல்லாஹ்வின் நபியே! எங்கள் காணிக்கை ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை?” என்று கேட்டனர். அதற்கு அந்த நபி, “உங்களில் மோசடி செய்தவன் இருக்கிறான்” என்றார். அவர்கள், “மோசடி செய்தவன் யார் என்று நாங்கள் எப்படி அறிவது?” என்று கேட்டனர்.

அவர்கள் பன்னிரண்டு கோத்திரங்களாக இருந்தனர். அந்த நபி கூறினார்: “உங்கள் ஒவ்வொரு கோத்திரத்தின் தலைவனும் என்னிடம் உறுதிமொழி (பைஅத்) அளிக்கட்டும்.” ஒவ்வொரு கோத்திரத்தின் தலைவனும் அவருக்கு உறுதிமொழி அளித்தான். அப்பொழுது அந்த நபியின் கை அவர்களில் ஒருவருடைய கையில் ஒட்டிக்கொண்டது. நபி அவரிடம், “உன்னிடம்தான் மோசடிப் பொருள் இருக்கிறது” என்றார்.

அதற்கு அவர், “எந்தக் கோத்திரத்தில் அந்தப் பொருள் இருக்கிறது என்று நான் எப்படி அறிவது?” என்று கேட்டார். நபி கூறினார்: “உன் கோத்திரத்தாரை அழைத்து ஒவ்வொருவராக என்னிடம் உறுதிமொழி பெறச் செய். அவ்வாறே அவர் செய்தார். அப்பொழுது அந்த நபியின் கை கனீமத் பொருளை மோசடி செய்தவனின் கையில் ஒட்டிக்கொண்டது. உடனே வானிலிருந்து நெருப்பு வந்து அதை எரித்தது.


அப்போது கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே சொன்னார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது அப்படியே அல்லாஹ்வின் வேதமான தவ்ராத்தில் இருக்கிறது என்று கூறினார்.

பிறகு கஅப் (ரஹ்) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், “அந்த நபி யார் என்று நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு கூறினார்களா?” என்று கேட்டார். அபூஹுரைரா (ரலி) அவர்கள், “இல்லை” என்று கூறினார். கஅப் (ரஹ்) அவர்கள், “அவர் யூஷஉ பின் நூன் ஆவார்” என்றார்.

பிறகு, “அந்த நகரம் எதுவென்று உங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா?” என்று கேட்டார். அபூஹுரைரா (ரலி) அவர்கள், “இல்லை” என்று பதிலளித்தார். கஅப் (ரஹ்) அவர்கள், “அதுதான் (அரீஹா) ஜெரிகோ நகரம்” என்று கூறினார்.

(ஹாகிம்: 2618)

أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ بْنُ إِسْحَاقَ الْخُرَاسَانِيُّ بِبَغْدَادَ، ثنا إِبْرَاهِيمُ بْنُ الْهَيْثَمِ بْنِ جَمِيلٍ، ثنا مُبَارَكُ بْنُ فَضَالَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، وَكُنْتُ جَالِسًا عِنْدَهُ فَقَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

” إِنَّ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ قَاتَلَ أَهْلَ مَدِينَةٍ حَتَّى إِذَا كَادَ أَنْ يَفْتَتِحَهَا، خَشِيَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَالَ لَهَا: أَيَّتُهَا الشَّمْسُ إِنَّكِ مَأْمُورَةٌ وَأَنَا مَأْمُورٌ بِحُرْمَتِي عَلَيْكِ، إِلَّا رَكَدْتِ سَاعَةً مِنَ النَّهَارِ، قَالَ: فَحَبَسَهَا اللَّهُ حَتَّى افْتَتَحَهَا، وَكَانُوا إِذَا أَصَابُوا الْغَنَائِمَ قَرَّبُوهَا فِي الْقُرْبَانِ، فَجَاءَتِ النَّارُ، فَأَكَلَتْهَا، فَلَمَّا أَصَابُوا، وَضَعُوا الْقُرْبَانَ، فَلَمْ تَجِئِ النَّارُ تَأْكُلْهُ، فَقَالُوا: يَا نَبِيَّ اللَّهِ مَا لَنَا لَا يُقْبَلُ قُرْبَانُنَا؟ قَالَ: فِيكُمْ غُلُولٌ قَالُوا: وَكَيْفَ لَنَا أَنْ نَعْلَمَ مَنْ عِنْدَهُ الْغُلُولُ؟ قَالَ: وَهُمُ اثْنَا عَشَرَ سِبْطًا قَالَ: يُبَايِعُنِي رَأْسُ كُلِّ سِبْطٍ مِنْكُمْ فَبَايَعَهُ رَأْسُ كُلِّ سِبْطٍ قَالَ: فَلَزِقَتْ كَفُّ النَّبِيِّ بِكَفِّ رَجُلٍ مِنْهُمْ فَقَالَ لَهُ: عِنْدَكَ الْغُلُولُ فَقَالَ: كَيْفَ لِي أَنْ أَعْلَمَ عِنْدَ أَيِّ سِبْطٍ هُوَ؟ قَالَ: تَدْعُو سِبْطَكَ فَتُبَايِعْهُمْ، رَجُلًا رَجُلًا، قَالَ: فَفَعَلَ فَلَزِقَتْ كَفُّهُ بِكَفِّ رَجُلِ الْغَنَائِمِ، فَجَاءَتِ النَّارُ فَأَكَلَتْهُ، فَقَالَ كَعْبٌ: صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ هَكَذَا وَاللَّهِ فِي كِتَابِ اللَّهِ يَعْنِي فِي التَّوْرَاةِ ثُمَّ قَالَ: يَا أَبَا هُرَيْرَةَ أَحَدَّثَكُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ نَبِيٍّ كَانَ؟ قَالَ: لَا. قَالَ كَعْبٌ: هُوَ يُوشَعُ بْنُ نُونٍ. قَالَ: فَحَدَّثَكُمْ أَيُّ قَرْيَةٍ هِيَ؟ قَالَ: لَا. قَالَ: هِيَ مَدِينَةُ أَرِيحَا

«هَذَا حَدِيثٌ غَرِيبٌ صَحِيحٌ وَلَمْ يُخَرِّجَاهُ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-2618.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-2545.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


மேலும் பார்க்க: புகாரி-3124.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.