தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-520

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாதவருக்கு அவரின் தொழுகை செல்லுபடியாகாது. உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறாதவருக்கு அவரின் உளூ செல்லுபடியாகாது.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

(ஹாகிம்: 520)

حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ عَفَّانَ، ثنا زَيْدُ بْنُ الْحُبَابِ، ثنا كَثِيرُ بْنُ زَيْدٍ، عَنْ رُبَيْحِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ»

فَأَخْبَرَنِي عَلِيُّ بْنُ بُنْدَارٍ الزَّاهِدُ، ثنا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ جُبَيْرٍ، ثنا أَبُو بَكْرٍ الْأَثْرَمُ. وَقَالَ: سَمِعْتُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ، وَسُئِلَ عَمَّنْ يَتَوَضَّأُ وَلَا يُسَمِّي فَقَالَ أَحْمَدُ: أَحْسَنُ مَا يُرْوَى فِي هَذَا الْحَدِيثِ كَثِيرُ بْنُ زَيْدٍ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-520.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-473.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ருபைஹ் பின் அப்துர்ரஹ்மான் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

உளூ இல்லாமல் தொழுகை கூடாது என்ற கருத்தில் சரியான ஹதீஸ்கள் உள்ளன. (பார்க்க: புகாரி-135 , 6954 )

மேலும் பார்க்க: அஹ்மத்-11370 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.