தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-2014

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த உலகில் ஒரு பெண் தனது கணவனுக்கு திட்டுவதின் மூலம் தொல்லைக் கொடுத்தால், ஹூருல் ஈன் எனும் அவருடைய சொர்க்கத்து மனைவியானவர், “அவ்வாறு அவரைத் திட்டாதே! அல்லாஹ் உன்னைக் கொல்வானாக! அவர் உன்னிடம் உள்ள தற்காலிக விருந்தாளி ஆவார். பிறகு உன்னைவிட்டு பிரிந்து எங்களிடம் வரவிருக்கிறார்” என்று கூறுவார்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)

(இப்னுமாஜா: 2014)

حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ الضَّحَّاكِ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

لَا تُؤْذِي امْرَأَةٌ زَوْجَهَا إِلَّا قَالَتْ زَوْجَتُهُ مِنَ الْحُورِ الْعِينِ: لَا تُؤْذِيهِ، قَاتَلَكِ اللَّهُ، فَإِنَّمَا هُوَ عِنْدَكِ دَخِيلٌ، أَوْشَكَ أَنْ يُفَارِقَكِ إِلَيْنَا


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-2014.
Ibn-Majah-Alamiah-2004.
Ibn-Majah-JawamiulKalim-2004.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு மாஜா இமாம்

2 . அப்துல்வஹ்ஹாப் பின் ளஹ்ஹாக்

3 . இஸ்மாயீல் பின் அய்யாஷ்

4 . பஹீர் பின் ஸஃத்

5 . காலித் பின் மஃதான்

6 . கஸீர் பின் முர்ரா

7 . முஆத் பின் ஜபல் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26982-அப்துல்வஹ்ஹாப் பின் ளஹ்ஹாக் என்பவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும், ஹதீஸ்களை திருடுபவர்-அதாவது மற்றவர்களின் ஹதீஸ்களை தன்னுடைய ஹதீஸாக அறிவிப்பவர் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/637)

எனவே இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


சரியான ஹதீஸ் பார்க்க: திர்மிதீ-1174 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.