தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-2130

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஒரு மனிதர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் புவானா என்ற இடத்தில் அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்திருக்கின்றேன்” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், அறியாமைக் காலத்தின்         (மக்கள் செய்யும் இணைவைப்பான) நேர்ச்சை வகையைதான் நாடினீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை என்று கூறினார். அப்படியென்றால் “நீ உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

 

(இப்னுமாஜா: 2130)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَعَبْدُ اللَّهِ بْنُ إِسْحَاقَ الْجَوْهَرِيُّ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ قَالَ: أَنْبَأَنَا الْمَسْعُودِيُّ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ،

أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ بِبُوَانَةَ، فَقَالَ: «فِي نَفْسِكَ شَيْءٌ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ؟» قَالَ: لَا، قَالَ: «أَوْفِ بِنَذْرِكَ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-2130.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-2121.




إسناده حسن رجاله ثقات عدا عبد الرحمن بن عبد الله المسعودي وهو صدوق اختلط قبل موته وضابطه أن من سمع منه ببغداد فبعد الاختلاط

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் அல்மஸ்ஊதீ பிற்காலத்தில் பக்தாதில் இருக்கும் போது மூளை குழம்பியவர் என்றாலும், இவரிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் ரஜா மக்காவை சேர்ந்தவர் என்பதால், இவர் செவியேற்றது அப்துர்ரஹ்மான் மூளை குழம்புவதற்கு முன் என்பதால் இது சரியான செய்தியாகும்.

மேலும் பார்க்க : அபூதாவூத்-3313 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.