தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-15243

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அனைத்து பொருளின் சப்தங்களையும் செவியேற்கும் செவுப்புலன் கொண்ட அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்! நபி (ஸல்) அவர்களிடம் கவ்லா பின்த் ஸஃலபா (ரலி) அவர்கள் வந்து தன் கணவனைப் பற்றி முறையிட்டுக்கொண்டிருந்தார். அவர் கூறிய சிலவை எனக்கு கேட்டது. சிலவை எனக்கு சரியாக கேட்கவில்லை.

கவ்லா பின்த் ஸஃலபா (ரலி) அவர்கள், (நபி ஸல் அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! எனது கணவர் (அவ்ஸ் பின் ஸாமித்-ரலி) எனது இளமையை பயன்படுத்திக்கொண்டார். அவருக்காக வாரிசுகளை பெற்றுக்கொடுத்தேன். இப்போது எனக்கு வயோதிகம் ஏற்பட்டு அவருக்காக வாரிசுகள் பெற்றுக் கொடுப்பது நின்றுவிட்டது. அதனால் அவர் என்னை “ளிஹார்” செய்துவிட்டார் என்று கூறி, “அல்லாஹ்வே! உன்னிடம் இதை முறையிடுகிறேன் என்றும் கூறினார். சிறிது நேரத்திற்குள் ஜிப்ரீல் (அலை) அவர்கள், “தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்” எனும் (அல்குர்ஆன் 58:1) வசனத்தை (நபி-ஸல்-அவர்களுக்கு) கொண்டுவந்தார்.

அறிவிப்பவர்: உர்வா (ரஹ்)

உர்வா (ரஹ்) கூறுகிறார்:

கவ்லா பின்த் ஸஃலபா (ரலி) அவர்களின் கணவர் அவ்ஸ் பின் ஸாமித் (ரலி) என்பவராவார்.

குறிப்பு: ளிஹார் என்பது கணவன் தன் மனைவியைப் பார்த்து, “நீ எனக்கு என் தாயின் முதுகு போல் ஹராம் ஆவாய்” என்று கூறி பிரிந்துவிடுவதாகும்.

 

(பைஹகீ-குப்ரா: 15243)

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، نا الشَّيْخُ أَبُو مُحَمَّدٍ أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ الْمُزَنِيُّ، نا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، نا أَبُو كُرَيْبٍ، نا مُحَمَّدُ بْنُ أَبِي عُبَيْدَةَ بْنِ مَعْنٍ الْمَسْعُودِيُّ، حَدَّثَنِي أَبِي، عَنِ الْأَعْمَشِ، عَنْ تَمِيمِ بْنِ سَلَمَةَ، عَنْ عُرْوَةَ قَالَ: قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا:

تَبَارَكَ اللهُ الَّذِي وَسِعَ سَمْعُهُ كُلَّ شَيْءٍ إِنِّي لَأَسْمَعُ كَلَامَ خَوْلَةَ بِنْتِ ثَعْلَبَةَ وَيَخْفَى عَلَيَّ بَعْضُهُ وَهِيَ تَشْتَكِي إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَوْجَهَا وَهِيَ تَقُولُ: يَا رَسُولَ اللهِ أَكَلَ شَبَابِي وَنَثَرْتُ لَهُ بَطْنِي حَتَّى إِذَا كَبِرَتْ سِنِّي وَانْقَطَعَ لَهُ وَلَدِي ظَاهَرَ مِنِّي , اللهُمَّ إِنِّي أَشْكُو إِلَيْكَ “

قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا: ” فَمَا بَرِحَتْ حَتَّى نَزَلَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ بِهَؤُلَاءِ الْآيَاتِ {قَدْ سَمِعَ اللهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا} [المجادلة: 1] قَالَ: وَزَوْجُهَا أَوْسُ بْنُ الصَّامِتِ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-15243.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-14057.




மேலும் பார்க்க: இப்னு மாஜா-188 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.