ஆமிர் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“முஅத்தின் ‘அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறுவதை ஒருவர் கேட்டு, ‘அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹ், ரளீத்து பில்லாஹி ரப்பன், வபில் இஸ்லாமி தீனன், வபிமுஹம்மதின் நபிய்யன்’
(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று, நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வை என் இறைவனாகவும், இஸ்லாமை என் மார்க்கமாகவும், முஹம்மதை என் தூதராகவும் நான் பொருந்திக் கொண்டேன்) என்று கூறினால், அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அப்போது ஒருவர் அவரிடம், “ஸஃத் அவர்களே! அவரது முந்தைய பாவங்களும், பிந்தைய பாவங்களும் மன்னிக்கப்படுமா?” என்று கேட்டார்.
அதற்கு ஸஃத் (ரலி) அவர்கள், “இல்லை. நபி (ஸல்) அவர்கள் (அவரது பாவங்கள் மன்னிக்கப்படும் என்று) இவ்வாறு கூறியதைத் தான், நான் கேட்டேன்” என்று குறிப்பிட்டார்கள்.
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 29249)حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ الْحُكَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ سَعْدٍ، أَنَّهُ قَالَ:
مَنْ قَالَ إِذَا قَالَ الْمُؤَذِّنُ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، غُفِرَ لَهُ ذُنُوبُهُ “، فَقَالَ لَهُ رَجُلٌ: يَا سَعْدُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ؟، قَالَ: «لَا، هَكَذَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُهُ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-29249.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்