தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-15156

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், வேதக்காரர்களில் ஒருவரிடமிருந்து பெற்ற ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு, நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர் அதைப் நபி (ஸல்) அவர்களிடம் படித்துக் காண்பித்தபோது, நபி (ஸல்) அவர்கள் கோபமுற்றார்கள்.

பிறகு, “கத்தாபின் மகனே! அதைப் பற்றி நீங்கள் (மார்க்கத்தில் ஆழமாகச் சென்று) குழப்பம் விளைவிக்கிறீர்களா?

என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ, அவன்மீது சத்தியமாக! நான் உங்களுக்கு இதைத் தூய்மையானதாகவும், சுத்தமானதாகவும் கொண்டு வந்துள்ளேன்.

அவர்களிடம் எதைப் பற்றியும் நீங்கள் கேட்காதீர்கள். ஏனெனில், அவர்கள் ஒரு உண்மையை உங்களுக்குச் சொன்னால் நீங்கள் அதைப்பற்றிப் பொய்யுரைக்க வேண்டியிருக்கும்; அல்லது ஒரு பொய்யை உங்களுக்குச் சொன்னால் நீங்கள் அதை உண்மையென நம்பிவிட வேண்டியிருக்கும்.

என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ, அவன்மீது சத்தியமாக! மூஸா (அலை) அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், என்னைப் பின்பற்றுவதைத் தவிர அவருக்கு வேறு வழியே இருந்திருக்காது” என்று கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 15156)

حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا مُجَالِدٌ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ،

أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكِتَابٍ أَصَابَهُ مِنْ بَعْضِ أَهْلِ الْكُتُبِ، فَقَرَأَهُ عَلَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَغَضِبَ وَقَالَ: «أَمُتَهَوِّكُونَ فِيهَا يَا ابْنَ الْخَطَّابِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ جِئْتُكُمْ بِهَا بَيْضَاءَ نَقِيَّةً، لَا تَسْأَلُوهُمْ عَنْ شَيْءٍ فَيُخْبِرُوكُمْ بِحَقٍّ فَتُكَذِّبُوا بِهِ، أَوْ بِبَاطِلٍ فَتُصَدِّقُوا بِهِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ أَنَّ مُوسَى كَانَ حَيًّا، مَا وَسِعَهُ إِلَّا أَنْ يَتَّبِعَنِي»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-15156.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.