உம்முத் தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (பொதுக்) குளிப்பிடத்திலிருந்து (குளித்துவிட்டு) வந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கண்டார்கள். அப்போது அவர்கள், “உம்முத் தர்தாவே! எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார்கள்.
அதற்கு நான், “(பொதுக்) குளிப்பிடத்திலிருந்து” என்று பதிலளித்தேன்.
அதற்கு அவர்கள், “எவன் கைவசம் என் உயிர் உள்ளதோ, அவன் மீது சத்தியமாக! எந்த ஒரு பெண்மணியும் தன் தாயின் வீட்டில் தவிர வேறு எந்த இடத்தில் தன் ஆடைகளைக் கழற்றுகிறாளோ, அந்தப் பெண் தனக்கும் பேரருளாளன் அல்லாஹ்வுக்கும் இடையிலுள்ள அனைத்துத் திரைகளையும் கிழித்தவள் ஆவாள்” என்று கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 27038)حَدِيثُ أُمِّ الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا حَسَنٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، قَالَ: حَدَّثَنَا زَبَّانُ، عَنْ سَهْلٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ أُمَّ الدَّرْدَاءِ، تَقُولُ:
خَرَجْتُ مِنَ الْحَمَّامِ فَلَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مِنْ أَيْنَ يَا أُمَّ الدَّرْدَاءِ؟» قَالَتْ: مِنَ الْحَمَّامِ، فَقَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، مَا مِنَ امْرَأَةٍ تَضَعُ ثِيَابَهَا فِي غَيْرِ بَيْتِ أَحَدٍ مِنْ أُمَّهَاتِهَا، إِلَّا وَهِيَ هَاتِكَةٌ كُلَّ سِتْرٍ بَيْنَهَا وَبَيْنَ الرَّحْمَنِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-27038.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்