தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-27542

A- A+


ஹதீஸின் தரம்: More Info

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தின் பத்து வசனங்களை மனனம் செய்தவர் (பெருங்குழப்பவாதியான) தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டு பாதுகாக்கப்படுவார்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)

 

அறிவிப்பாளர் ஹம்மாம் கூறியதாவது:

ஆரம்பத்தில் கதாதா (ரஹ்) அவர்கள், ஸாலிம் பின் அபுல் ஜஃத் வழியாக அறிவிக்கும் போது “அல்கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்ப பத்து வசனங்கள்” என்றே அறிவித்தார். பின்பு , அறிவிப்பாளர் அப்துஸ் ஸமத் போன்று அல்கஹ்ஃப் அத்தியாயத்தின் பத்து வசனங்கள்” என்று அறிவித்தார்.

(முஸ்னது அஹ்மத்: 27542)

حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، وَعَفَّانُ، قَالَا: حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ عَفَّانُ فِي حَدِيثِهِ: حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ:

كَانَ قَتَادَةُ يَقُصُّ بِهِ عَلَيْنَا قَالَ: حَدَّثَنَا سَالِمُ بْنُ أَبِي الْجَعْدِ الْغَطَفَانِيُّ، عَنْ حَدِيثِ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمُرِيِّ، عَنْ حَدِيثِ أَبِي الدَّرْدَاءِ، يَرْوِيهِ عَنْ نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ مِثْلَهُ ثُمَّ رَجَعَ إِلَى حَدِيثِ عَبْدِ الصَّمَدِ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ سَالِمٍ، عَنْ حَدِيثِ مَعْدَانَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، يَرْوِيهِ عَنْ نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ سُورَةِ الْكَهْفِ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-27542.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-26884.




அதிகமானவர்கள், ஆரம்பப் பத்து வசனங்கள் என்று அறிவிப்பதால் அந்த அறிவிப்பே சரியானது…

மேலும் பார்க்க : அஹ்மத்-21712 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.