தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-126

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஒருவர் விந்து கொட்டியுள்ள அடையாளத்தைக் காண்கிறார். எப்போது ஏற்பட்டது என்பதை அவர் அறியவில்லை. கனவில் கண்டதையும் அவன் நினைவு கொள்ள முடியவில்லை. இவர் விஷயமாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறும் போது, ”அவர் இறுதியில் தூங்கிய தூக்கத்திற்காக அவர் குளிக்கட்டும். அந்தத் தூக்கத்திற்குப் பின் தொழுதிருந்தால், ஒருவன் கனவு காணாமலேயே விந்து வெளியாகி இருக்கும். விந்து வெளியாகாமலேயே கனவு கண்டிருப்பான் என்பதால் அவன் இறுதியாக தூங்கிய பின் தொழுததை மட்டும் மீண்டும் தொழட்டும். தன் ஆடையில் ஈரத்தைக் கண்டால் அவன் மீது குளிப்பது கடமையாகும்.

இவ்வாறே உமர்(ரலி) அவர்கள் தன் தூக்கத்தின் இறுதியில் தொழுததையே மீண்டும் தொழுதுள்ளார்கள். அதற்கு முன்னுள்ளதை மீண்டும் தொழவில்லை என்று மாலிக் (ரஹ்) குறிப்பிட்டார்கள்.

(முஅத்தா மாலிக்: 126)

قَالَ مَالِكٌ فِي رَجُلٍ وَجَدَ فِي ثَوْبِهِ أَثَرَ احْتِلاَمٍ وَلاَ يَدْرِي مَتَى كَانَ؟ وَلاَ يَذْكُرُ شَيْئًا رَأَى فِي مَنَامِهِ، قَالَ: لِيَغْتَسِلْ مِنْ أَحْدَثِ نَوْمٍ نَامَهُ، فَإِنْ كَانَ صَلَّى بَعْدَ ذَلِكَ النَّوْمِ، فَلْيُعِدْ مَا كَانَ صَلَّى بَعْدَ ذَلِكَ النَّوْمِ، مِنْ أَجْلِ أَنَّ الرَّجُلَ رُبَّمَا احْتَلَمَ، وَلاَ يَرَى شَيْئًا، وَيَرَى وَلاَ يَحْتَلِمُ، فَإِذَا وَجَدَ فِي ثَوْبِهِ مَاءً، فَعَلَيْهِ الْغُسْلُ، وَذَلِكَ أَنَّ عُمَرَ أَعَادَ مَا كَانَ صَلَّى، لآخِرِ نَوْمٍ نَامَهُ، وَلَمْ يُعِدْ مَا كَانَ قَبْلَهُ.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-126.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.