தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-246

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ருகூஉவில் அல்லது ஸஜ்தாவில் இமாமுக்கு முன்னால் தன் தலையை மறந்து உயர்த்துபவன் விஷயத்தில் (பின்வருமாறு) மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ருகூஉவில் இமாமுக்கு மன் தன் தலையை உயர்த்தியவன் இமாமை எதிர் பார்க்காமல் திரும்பவும் ருகூஉவுக்குச் செல்லட்டும். இதுபோலவே ஸஜ்தாவிலும் செய்யட்டும். இதுவே சுன்னத்.

இமாமை முந்தி அவன் செய்தது தவறாகும். ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள், இமாமை ஏற்படுத்தப்பட்டுள்ளது, அவரைப் பின்பற்றுவதற்காகவே. எனவே, அவருக்கு மாறு செய்யாதீர்கள் என்று கூறி உள்ளார்கள். மேலும் அபூஹுரைரா(ரலி) அவர்கள், ”இமாமுக்கு முன் தன் தலையை உயர்த்துபவன் அல்லது தாழ்த்துபவனின் முன் நெற்றி முடி ஷைத்தானின் கைப்பிடியில் உள்ளது” என்று கூறியுள்ளார்கள்.

(முஅத்தா மாலிக்: 246)

قَالَ مَالِكٌ فِيمَنْ سَهَا فَرَفَعَ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ فِي رُكُوعٍ أَوْ سُجُودٍ: إِنَّ السُّنَّةَ فِي ذَلِكَ، أَنْ يَرْجِعَ رَاكِعًا أَوْ سَاجِدًا، وَلاَ يَنْتَظِرُ الإِمَامَ، وَذَلِكَ خَطَأٌ مِمَّنْ فَعَلَهُ، لأَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَلاَ تَخْتَلِفُوا عَلَيْهِ، وَقَالَ أَبُو هُرَيْرَةَ: الَّذِي يَرْفَعُ رَأْسَهُ وَيَخْفِضُهُ قَبْلَ الإِمَامِ، إِنَّمَا نَاصِيَتُهُ بِيَدِ شَيْطَانٍ.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-246.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.