பாடம்:
சிறு தொடக்கு ஏற்படாதபோது உளூச் செய்யும் முறை.
நஸ்ஸால் பின் ஸப்ரா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் அலீ (ரலி) அவர்கள் லுஹர் தொழுகையை நிறைவேற்றியதைப் பார்த்தேன். பின்னர், மக்களின் தேவைகளுக்காக அமர்ந்தார்கள். அஸர் தொழுகை நேரம் வந்தபோது, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அதிலிருந்து ஒரு கையளவு நீர் எடுத்துத் தமது முகம், இரு கைகள், தலை மற்றும் இரு கால்களில் தடவினார்கள் (மஸஹ் செய்தார்கள்). பின்னர் மீதமுள்ள நீரை நின்று கொண்டே அருந்தினார்கள்.
மேலும் கூறினார்கள்: “நிச்சயமாக சிலர் இதை வெறுக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்கிறேன். இது ஹதஸ் (சிறு தொடக்கு எனும் உடலைத் தூய்மை இழக்கச் செய்யும் நிலை) ஏற்படாதவரின் உளூவாகும்.
(நஸாயி: 130)صِفَةِ الْوُضُوءِ مِنْ غَيْرِ حَدَثٍ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ قَالَ: سَمِعْتُ النَّزَّالَ بْنَ سَبْرَةَ قَالَ:
رَأَيْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ صَلَّى الظُّهْرَ، ثُمَّ قَعَدَ لِحَوَائِجِ النَّاسِ، فَلَمَّا حَضَرَتِ الْعَصْرُ أُتِيَ بِتَوْرٍ مِنْ مَاءٍ، فَأَخَذَ مِنْهُ كَفًّا فَمَسَحَ بِهِ وَجْهَهُ وَذِرَاعَيْهِ وَرَأْسَهُ وَرِجْلَيْهِ، ثُمَّ أَخَذَ فَضْلَهُ فَشَرِبَ قَائِمًا، وَقَالَ: «إِنَّ نَاسًا يَكْرَهُونَ هَذَا، وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ وَهَذَا وُضُوءُ مَنْ لَمْ يُحْدِثْ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-130.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்