தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-2218

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (தமது வீட்டில்) “அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தை ஓதினார்.  அவருக்கு அருகில் அவரின் வாகனப் பிராணி ஒன்று கட்டப்பட்டிருந்தது. உடனே அந்தப் பிராணி மிரள ஆரம்பித்தது.

அந்த மனிதர் (என்னவென்று) பார்த்தார். அப்போது மேகத்திரள் ஒன்று வந்து அவரை மூடிக்கொண்டதை பார்த்து பயந்து விட்டார். இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று சொன்னபோது நபி (ஸல்) அவர்கள், “இன்னாரே, நீர் தொடர்ந்து ஓதிக்கொண்டேயிரு(ந்திருக்க வேண்டு)ம். அந்த மேகம் குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உம்மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்” என்று சொன்னார்கள்.

(shuabul-iman-2218: 2218)

وَأَخْبَرَنَا الْفَقِيهُ أَبُو الْقَاسِمِ عُبَيْدُ اللهِ بْنُ عُمَرَ بْنِ عَلِيٍّ الْفَامِيُّ بِبَغْدَادَ، حدثنا أَحْمَدُ بْنُ سَلْمَانَ النَّجَّادُ، حدثنا جَعْفَرٌ الصَّائِغُ، وَالْحَسَنُ بْنُ سَلَامٍ، قَالَا: حدثنا عَفَّانُ، حدثنا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ الْبَرَاءَ، قَالَ:

قَرَأَ رَجُلٌ سُورَةَ الْكَهْفِ وَلَهُ دَابَّةٌ مَرْبُوطَةٌ، فَجَعَلَتِ الدَّابَّةُ تَنْفِرُ، فَنَظَرَ الرَّجُلُ إِلَى سَحَابَةٍ قَدْ غَشِيَتْهُ أوْ ضَبَابَةٍ، فَفَزِعَ، فَذَهَبَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: بَيْنَمَا ذَاكَ الرَّجُلُ يَقْرَأُ فَذَكَرَ لَهُ، فَقَالَ: ” اقْرَأْ فُلَانُ فَإِنَّ السَّكِينَةَ نَزَلَتْ لِلْقُرْآنِ أَوْ عِنْدَ الْقُرْآنِ

أَخْرَجَاهُ مِنْ حَدِيثِ شُعْبَةَ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-2218.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-2229.




இந்த கருத்தில் வரும் செய்திகளை மேலும் பார்க்க : அஹ்மத்-18474 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.