பாடம்:
அன்பளிப்புச் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் தூண்டியது குறித்து வந்துள்ளவை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்யுங்கள். அது நெஞ்சங்களிலுள்ள குரோதத்தை அகற்றும். மேலும் எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டாருக்கு ஆட்டுக்கால் குளம்பின் ஒரு துண்டை (அன்பளிப்பாக) அளித்தாலும், அதை அவள் அற்பமாகக் கருத வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸ் இந்த அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது ‘ஃகரீப்’ எனும் தரத்தில் அமைந்ததாகும்.
(இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான) அபூமஃஷர் என்பவரின் பெயர், நஜீஹ் (பின் அப்துர்ரஹ்மான்) ஆகும்; இவர் பனூ ஹாஷிம் குலத்தாரால் விடுதலை செய்யப்பட்ட அடிமை ஆவார். இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று அறிஞர்களில் சிலர் விமர்சித்துள்ளனர்.
(திர்மிதி: 2130)بَابٌ فِي حَثِّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى التَّهَادِي
حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مَعْشَرٍ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«تَهَادَوْا فَإِنَّ الهَدِيَّةَ تُذْهِبُ وَحَرَ الصَّدْرِ، وَلَا تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ شِقَّ فِرْسِنِ شَاةٍ»
هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ وَأَبُو مَعْشَرٍ اسْمُهُ نَجِيحٌ مَوْلَى بَنِي هَاشِمٍ وَقَدْ تَكَلَّمَ فِيهِ بَعْضُ أَهْلِ العِلْمِ مِنْ قِبَلِ حِفْظِهِ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2130.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்