பாடம்:
சொர்க்கப் பறவைகளின் தன்மை குறித்து வந்துள்ளவை.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அல்கவ்ஸர் என்பது என்ன? என்று வினவப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அது எனக்கு அல்லாஹ் (மறுமையில் சிறப்புப் பரிசாக) வழங்கியுள்ள சொர்க்க நதியாகும். (அதிலுள்ள நீர்) பாலை விட வெண்மையானதும், தேனைவிட இனிமையானதுமாகும். அந்த நதியில் சில பறவைகள் இருக்கும். அவற்றின் கழுத்துகள் ஒட்டகங்களின் கழுத்தைப் போன்றிருக்கும் என்று கூறினார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், (அப்படியானால்) இப்பறவைகள் மிகவும் கொழுத்து செழிப்பானவையாக இருக்கும் என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்தப் பறவைகளை உண்ணக் கூடியவர்கள், அவற்றைவிட எழில் மிக்கவர்களாக இருப்பார்கள் என்றார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.
(இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும்) முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள், இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின் சகோதரரின் மகன் ஆவார். (அவருடைய தந்தையான) அப்துல்லாஹ் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் இப்னு உமர் (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி) ஆகியோரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(திர்மிதி: 2542)بَابُ مَا جَاءَ فِي صِفَةِ طَيْرِ الجَنَّةِ
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ:
سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا الكَوْثَرُ؟ قَالَ: «ذَاكَ نَهْرٌ أَعْطَانِيهِ اللَّهُ – يَعْنِي فِي الجَنَّةِ – أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ، وَأَحْلَى مِنَ العَسَلِ، فِيهَا طَيْرٌ أَعْنَاقُهَا كَأَعْنَاقِ الجُزُرِ» قَالَ عُمَرُ: إِنَّ هَذِهِ لَنَاعِمَةٌ. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكَلَتُهَا أَنْعَمُ مِنْهَا»
هَذَا حَدِيثٌ حَسَنٌ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ هُوَ: ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ الزُّهْرِيِّ «وَعَبْدُ اللَّهِ بْنُ مُسْلِمٍ، قَدْ رَوَى عَنْ ابْنِ عُمَرَ، وَأَنَسِ بْنِ مَالِكٍ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2465.
Tirmidhi-Shamila-2542.
Tirmidhi-Alamiah-2465.
Tirmidhi-JawamiulKalim-2481.
சமீப விமர்சனங்கள்