தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3425

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் ஸஜ்தா வசனங்களை ஓதி ஸஜ்தாச் செய்யும்போது, “ஸஜத வஜ்ஹீ லில்லதீ கலக்கஹூ, வஷக்க ஸம்அஹூ வ பஸரஹூ பி ஹவ்லிஹீ வ குவ்வத்திஹீ” என்று கூறுவார்கள்.

(பொருள்: என் முகத்தைப் படைத்து அதில் தனது அறிவாலும் ஆற்றலாலும் செவிப்புலனையும் பார்வைத் திறனையும் ஏற்படுத்திய (இறை)வனுக்கு என் முகம் பணிகிறது.)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.

(திர்மிதி: 3425)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنْ أَبِي العَالِيَةِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:

كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي سُجُودِ القُرْآنِ بِاللَّيْلِ: «سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3347.
Tirmidhi-Shamila-3425.
Tirmidhi-Alamiah-3347.
Tirmidhi-JawamiulKalim-3371.




மேலும் பார்க்க: திர்மிதீ-580 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.