அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹ்” (பொருள்: நன்மைகள் செய்யவும், தீமைகள் செய்யாதிருக்கவும் உரிய ஆற்றல் மற்றும் வலிமை அல்லாஹ்வின் மூலமாகவே கிடைக்கின்றது) என்ற (துதிச்) சொல்லை அதிகமாகக் கூறு. திண்ணமாக அது சுவனத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலம் ஆகும் என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்) மக்ஹுல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். “லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி, வலா மன்ஜஅ மினல்லாஹி இல்லா இலைஹி”
(பொருள்; நன்மைகள் செய்யவும் தீமைகள் செய்யாதிருக்கவும் உரிய ஆற்றலும், வலிமையும் அல்லாஹ்வின் மூலமாகவே கிடைக்கின்றன. அல்லாஹ்வின் (கோபம் மற்றும் அவனது தண்டனை)யிலிருந்து தப்பிக்க அவனைத் தவிர வேறு புகலிடம் இல்லை) என்று ஒருவர் கூறினால் அவரை விட்டும் எழுபது வகையான துன்பங்கள் அகலும். அத்துன்பங்களில் மிகத் சிறியது ஏழ்மையாகும்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த நபிமொழியின் அறிவிப்பாளர்தொடர், “முத்தஸில்” எனும் இடைமுறிவு ஏற்படாத அறிவிப்பாளர்தொடர் அல்ல. (ஏனெனில்) மக்ஹுல் அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து எந்த ஹதீஸையும் செவியுறவில்லை.
(திர்மிதி: 3601)حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ هِشَامِ بْنِ الغَازِ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:
قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ” أَكْثِرْ مِنْ قَوْلِ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَإِنَّهَا مِنْ كَنْزِ الْجَنَّةِ ” قَالَ مَكْحُولٌ، فَمَنْ قَالَ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ وَلَا مَنْجَى مِنَ اللَّهِ إِلَّا إِلَيْهِ: كَشَفَ عَنْهُ سَبْعِينَ بَابًا مِنَ الضُّرِّ أَدْنَاهُنَّ الفَقْرُ.
هَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ، مَكْحُولٌ لَمْ يَسْمَعْ مِنْ أَبِي هُرَيْرَةَ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3525.
Tirmidhi-Shamila-3601.
Tirmidhi-Alamiah-3525.
Tirmidhi-JawamiulKalim-3555.
சமீப விமர்சனங்கள்