பாடம்:
நோயாளிக்குக் கிடைக்கும் நன்மை தொடர்பாக வந்துள்ளவை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் ஒருவரைத் தைக்கும் ஒரு முள்ளாயினும், அதைவிட அற்பமான (துன்பம்) எதுவாயினும் அதற்குப் பதிலாக அல்லாஹ் அவருடைய தகுதிகளில் ஒன்றை உயர்த்தி, அவருடைய பாவங்களில் ஒன்றை மன்னிக்கிறான்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி), அபூஉபைதா பின் ஜர்ராஹ் (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூஉமாமா (ரலி), அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), அனஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அஸத் பின் குர்ஸ் (ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), அப்துர்ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி), அபூமூஸா (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.
(திர்மிதி: 965)8 – أَبْوَابُ الْجَنَائِزِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
بَابُ مَا جَاءَ فِي ثَوَابِ المَرِيضِ
حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا يُصِيبُ المُؤْمِنَ شَوْكَةٌ فَمَا فَوْقَهَا، إِلَّا رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً»
وَفِي البَاب عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، وَأَبِي عُبَيْدَةَ بْنِ الجَرَّاحِ، وَأَبِي هُرَيْرَةَ، وَأَبِي أُمَامَةَ، وَأَبِي سَعِيدٍ، وَأَنَسٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، وَأَسَدِ بْنِ كُرْزٍ، وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ أَزْهَرَ، وَأَبِي مُوسَى.: «حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-888.
Tirmidhi-Shamila-965.
Tirmidhi-Alamiah-888.
Tirmidhi-JawamiulKalim-886.
சமீப விமர்சனங்கள்