938. நாங்கள் அபூஸுஹைர் அன்னுமைரீ (ரலி) அவர்கள் அருகே அமர்ந்திருந்தோம். அவர் நபித்தோழர்களில் ஒருவராவார். ஆதலால் மிக அழகான ஹதீஸ்களை அவர் அறிவிப்பார். எங்களில் ஒருவர் ஒரு பிரார்த்தனையை செய்தால் அதை ஆமீன் கூறி முடித்துக் கொள்க!. ஏனெனில் அது ஒரு ஏட்டின் மீதுள்ள முத்திரையை போன்றதாகும் என்று கூறுவார். மேலும் அபூஸுஹைர் (ரலி) அவர்கள், உங்களுக்கு இது தொடர்பாக ஹதீஸ் அறிவிக்கட்டுமா? என்று கேட்டு பின்வரும் ஹதீஸையும் அறிவிப்பார்.
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஓர் இரவில் புறப்பட்டு ஒருவரிடம் சென்றோம். அவர் துஆ செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். எனவே நபி (ஸல்) அவர்கள் அவரின் பிரார்த்தனையை செவியுற்றவாறு நின்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவர் முத்திரையிட்டு விட்டால் (சுவனத்தை) உறுதி செய்தவராவார் என்று சொன்னார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் எதைக் கொண்டு அவர் முத்திரையிடல் வேண்டும்? என்று கேட்டார். ஆமீன் என்பதைக் கொண்டு முத்திரையிட வேண்டும். ஏனெனில் ஆமீன் என்பதைக் கொண்டு அவர் முத்திரையிட்டு விட்டால் அவர் (தனக்கு) சுவனத்தை உறுதியாக்கிவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களிடம் (எதைக் கொண்டு முத்திரையிடுவது எனக்) கேட்டவர், (துஆவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த) மனிதரிடம்
كُنَّا نَجْلِسُ إِلَى أَبِي زُهَيْرٍ النُّمَيْرِيِّ، وَكَانَ مِنَ الصَّحَابَةِ، فَيَتَحَدَّثُ أَحْسَنَ الْحَدِيثِ، فَإِذَا دَعَا الرَّجُلُ مِنَّا بِدُعَاءٍ قَالَ: اخْتِمْهُ بِآمِينَ، فَإِنَّ آمِينَ مِثْلُ الطَّابَعِ عَلَى الصَّحِيفَةِ، قَالَ أَبُو زُهَيْرٍ: أُخْبِرُكُمْ عَنْ ذَلِكَ؟ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ، فَأَتَيْنَا عَلَى رَجُلٍ قَدْ أَلَحَّ فِي الْمَسْأَلَةِ، فَوَقَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَسْتَمِعُ مِنْهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْجَبَ إِنْ خَتَمَ»، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: بِأَيِّ شَيْءٍ يَخْتِمُ؟ قَالَ: «بِآمِينَ، فَإِنَّهُ إِنْ خَتَمَ بِآمِينَ فَقَدْ أَوْجَبَ»، فَانْصَرَفَ الرَّجُلُ الَّذِي سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَى الرَّجُلَ، فَقَالَ: اخْتِمْ يَا فُلَانُ بِآمِينَ، وَأَبْشِرْ،
وَهَذَا لَفْظٌ مَحْمُودٌ،
சமீப விமர்சனங்கள்