தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3427

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 35

உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது, “பிஸ்மில்லாஹி தவக்கல்த்து அலல்லாஹி; அல்லாஹும்ம இன்னா நவூது பிக மின் அன் நஸில்ல, அவ் நழில்ல அவ் நள்லிம அவ் நுள்லம அவ் நஜ்ஹல அவ் யுஜ்ஹல அலைனா” என்று கூறுவார்கள்.

(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (புறப்படுகிறேன்) அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். யாஅல்லாஹ்! நாங்கள் உண்மையிலிருந்து நழுவுதல், அல்லது வழி தவறிப்போதல், அல்லது அநீதம் செய்தல், அல்லது அநீதத்திற்குள்ளாதல் அல்லது அறிவீனமாகச் செயல்படுதல் அல்லது அறிவீனமாக வழி நடத்தப்படுதல் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறோம்)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.

(திர்மிதி: 3427)

بَاب مِنْهُ

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، عَنْ أُمِّ سَلَمَةَ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ قَالَ: «بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ أَنْ نَزِلَّ، أَوْ نَضِلَّ، أَوْ نَظْلِمَ، أَوْ نُظْلَمَ، أَوْ نَجْهَلَ، أَوْ يُجْهَلَ عَلَيْنَا»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»


Tirmidhi-Tamil-3349.
Tirmidhi-TamilMisc-3349.
Tirmidhi-Shamila-3427.
Tirmidhi-Alamiah-3349.
Tirmidhi-JawamiulKalim-3373.




மேலும் பார்க்க: அபூதாவூத்-5094 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.