அபுல்மலீஹ்-அல்ஹுதலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹிம்ஸ் அல்லது ஷாம் (எனும் சிரியா) நாட்டைச் சேர்ந்த சில பெண்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தனர். அப்போது ஆயிஷா (ரலி), “பொதுக் குளிப்பிடங்களுக்கு சென்று பெண்கள் குளிப்பார்களே! அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் தானே நீங்கள்?” என்று கேட்டுவிட்டு கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவ்வாறு கூற செவியுற்றிருக்கிறேன்:
தனது வீட்டைத் தவிர வேறு இடத்தில் தனது ஆடையைக் களையும் எந்தப் பெண்ணும் அவளுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலான திரையைக் கிழித்துவிட்டாள் (அதாவது வெட்கத்தைக் கைவிட்டுவிட்டாள்).
(திர்மிதி: 2803)حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، قَالَ: سَمِعْتُ سَالِمَ بْنَ أَبِي الجَعْدِ، يُحَدِّثُ عَنْ أَبِي المَلِيحِ الهُذَلِيِّ،
أَنَّ نِسَاءً مِنْ أَهْلِ حِمْصٍ، أَوْ مِنْ أَهْلِ الشَّامِ دَخَلْنَ عَلَى عَائِشَةَ، فَقَالَتْ: أَنْتُنَّ اللَّاتِي يَدْخُلْنَ نِسَاؤُكُنَّ الحَمَّامَاتِ؟ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ امْرَأَةٍ تَضَعُ ثِيَابَهَا فِي غَيْرِ بَيْتِ زَوْجِهَا إِلَّا هَتَكَتِ السِّتْرَ بَيْنَهَا وَبَيْنَ رَبِّهَا»
«هَذَا حَدِيثٌ حَسَنٌ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2727.
Tirmidhi-Shamila-2803.
Tirmidhi-Alamiah-2727.
Tirmidhi-JawamiulKalim-2746.
சமீப விமர்சனங்கள்