தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4531

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3

(அடிமைக்கும் அடிமைப் பெண்ணுக்கும் முறையே) “அப்த்”, “அமத்” ஆகிய சொற்களையும் (அடிமையின் உரிமையாளருக்கு) “மவ்லா”, “சய்யித்” ஆகிய சொற்களையும் ஆள்வது தொடர்பான சட்டம்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யாரும் (தம் அடிமையை அடிமையே, அடிமைப் பெண்ணே எனும் பொருள் கொண்ட) அப்தீ, அமத்தீ எனும் சொல்லால் அழைக்க வேண்டாம். (ஏனெனில்,) உங்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் அடிமை (அப்து)களே;உங்களில் ஒவ்வொரு பெண்ணும் அல்லாஹ்வின் அடிமை (அமத்)களே. மாறாக, ஃகுலாமீ, ஜாரியத்தீ, ஃபத்தாய,ஃபத்தாத்தீ ஆகிய சொற்களால் அழைக்கட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 40

(முஸ்லிம்: 4531)

3 – بَابُ حُكْمِ إِطْلَاقِ لَفْظَةِ الْعَبْدِ، وَالْأَمَةِ، وَالْمَوْلَى، وَالسَّيِّدِ

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ، قَالُوا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«لَا يَقُولَنَّ أَحَدُكُمْ عَبْدِي وَأَمَتِي كُلُّكُمْ عَبِيدُ اللهِ، وَكُلُّ نِسَائِكُمْ إِمَاءُ اللهِ، وَلَكِنْ لِيَقُلْ غُلَامِي وَجَارِيَتِي وَفَتَايَ وَفَتَاتِي»


Tamil-4531
Shamila-2249
JawamiulKalim-4184




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.