தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-359

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி(ஸல்) அவர்கள் நோயுற்று இருந்த போது, உட்கார்ந்தவர்களாக தொழ வைத்தார்கள். அவர்களுக்குப் பின்னால் இருந்தோர் (மக்கள்) நின்று தொழுதனர். ”உட்காருங்கள்”” என அவர்களிடம் சமிக்ஞை செய்தார்கள். தொழுகையை முடித்ததும், ”இமாம் என்பவர் அவரைப் பின்பற்றவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். அவர் ருகூஉ செய்தால் நீங்களும் ருகூஉ செய்யுங்கள். அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் உயர்த்துங்கள். உட்கார்ந்து அவர் தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்”” என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 359)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ

صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ شَاكٍ فَصَلَّى جَالِسًا. وَصَلَّى وَرَاءَهُ قَوْمٌ قِيَامًا. فَأَشَارَ إِلَيْهِمْ أَنِ اجْلِسُوا، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-359.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.