தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-871

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்களிடம் வந்த தூதுக்குழுவில் அங்கம்வகித்தவரான அலீ பின் ஷைபான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் புறப்பட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தோம். நாங்கள் அவர்களிடம் உறுதிமொழி ஒப்பந்தம் செய்து, அவர்களுக்குப் பின்னால் தொழுதோம்.

அப்போது ருகூவிலும் ஸஜ்தாவிலும் தனது முதுகைச் சரியாக நிலைநிறுத்தாத ஒரு மனிதரை அவர்கள் கடைக்கண்ணால் பார்த்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தபோது, அவர்கள், “முஸ்லிம்களே, ருகூவிலும் ஸஜ்தாவிலும் தனது முதுகை நேராக வைக்காதவருக்கு தொழுகை இல்லை” என்று கூறினார்கள்.

(இப்னுமாஜா: 871)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا مُلَازِمُ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَدْرٍ قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَلِيِّ بْنِ شَيْبَانَ، عَنْ أَبِيهِ عَلِيِّ بْنِ شَيْبَانَ، وَكَانَ مِنَ الْوَفْدِ، قَالَ:

خَرَجْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَايَعْنَاهُ وَصَلَّيْنَا خَلْفَهُ، فَلَمَحَ بِمُؤْخِرِ عَيْنِهِ رَجُلًا، لَا يُقِيمُ صَلَاتَهُ، – يَعْنِي صُلْبَهُ – فِي الرُّكُوعِ وَالسُّجُودِ، فَلَمَّا قَضَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ، قَالَ: «يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ لَا صَلَاةَ لِمَنْ لَا يُقِيمُ صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-871.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-861.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


மேலும் பார்க்க: அஹ்மத்-16297.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.