தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-188

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அனைத்து சப்தங்களையும் செவியேற்கும் செவுப்புலன் கொண்ட அல்லாஹ்விற்கே புகழனைத்தும்! நான் வீட்டின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்கும் போது ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் தன் கணவனைப் பற்றி முறையிட்டு வாக்குவாதம் செய்தார். அவள் கூறியதை நான் (சரியாக) கேட்கவில்லை. (ஆனால் அந்தப் பெண்ணிற்காக அல்லாஹ் விரைவாக) “தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்” எனும் (அல்குர்ஆன் 58:1) வசனத்தை இறக்கி அருளினான்.

அறிவிப்பவர்: உர்வா (ரஹ்)

(இப்னுமாஜா: 188)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ تَمِيمِ بْنِ سَلَمَةَ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَسِعَ سَمْعُهُ الْأَصْوَاتَ، لَقَدْ جَاءَتِ الْمُجَادِلَةُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا فِي نَاحِيَةِ الْبَيْتِ، تَشْكُو زَوْجَهَا، وَمَا أَسْمَعُ مَا تَقُولُ، فَأَنْزَلَ اللَّهُ: {قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا} [المجادلة: 1]


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-188.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-184.




  • இது நபித்தோழரின் கூற்றாக இருந்தாலும் மர்ஃபூஉ போன்ற செய்தியாகும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-24195 , இப்னு மாஜா-188 , 2063 , நஸாயீ-3460 , குப்ரா நஸாயீ-5625 , 11506 , முஸ்னத் அபீ யஃலா-4780 , ஹாகிம்-3791 , குப்ரா பைஹகீ-15242 , 15243 ,

2 comments on Ibn-Majah-188

  1. இது ஆதாரபூர்வமான செய்தி ஆகும் இதில் எவ்வித விமர்சனமும் இல்லை

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.
      ஜஸாகல்லாஹு கைரா. ஆம் விமர்சனம் இல்லை. இந்த செய்தியின் பணி இன்னும் முடியவில்லை. இன்ஷாஅல்லாஹ் கூடுதல் தகவல் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.