தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-14510

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்களை (ஒரு திருமணத்தின்) முதல் நாள் விருந்துக்கு அழைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டார்கள். இரண்டாம் நாளும் அழைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டார்கள். மூன்றாம் நாள் அழைக்கப்பட்டபோது அதில் கலந்து கொள்ளவில்லை. மேலும் அவர்கள், இவர்கள் விளம்பரத்திற்காகவும், முகஸ்துதியுடனும் விருந்தளிக்கின்றனர் என்று கூறினார்கள் என எனக்கு ஒரு மனிதர் கூறினார்.

(பைஹகீ-குப்ரா: 14510)

قَالَ قَتَادَةُ: وَحَدَّثَنِي رَجُلٌ، أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ

دُعِيَ أَوَّلَ يَوْمٍ فَأَجَابَ، وَالثَّانِيَ فَأَجَابَ، وَدُعِيَ الْيَوْمَ الثَّالِثَ فَلَمْ يُجِبْ وَقَالَ: ” أَهْلُ سُمْعَةٍ وَرِئَاءٍ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-14510.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-13435.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் ஸயீத் பின் முஸய்யிப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஒரு மனிதர் யாரென அறியப்படாதவர். மேலும் இது மக்தூஃவான செய்தி என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-3745 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.