துல் ஹஜ் மாத (முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை எனஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள்.
அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும் தான். ஆனால் “தமது உயிரையும் பொருளையும் அர்ப்பணிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்று எதையும் திரும்பக் கொண்டு வராத மனிதரைத் தவிர” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(அபூதாவூத்: 2438)
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، وَمُجَاهِدٍ، وَمُسْلِمٍ الْبَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهَا أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ» يَعْنِي أَيَّامَ الْعَشْرِ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ؟ قَالَ: «وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ، إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ، فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2082.
Abu-Dawood-Shamila-2438.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2085.
قوله : ( ما من أيام )
من زائدة
( العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر )
أي العشر الأول من ذي الحجة . وفي حديث جابر في صحيحي أبي عوانة وابن حبان : ما من أيام أفضل عند الله من أيام عشر ذي الحجة ،
Add
Abu awana,ibn hibban hadees
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்தச் செய்தியை அபூஅவானா, இப்னு ஹிப்பான் ஆகியோர் ஜாபிர் (ரலி) அவர்கள் வழியாக அறிவித்துள்ளதாக நீங்கள் குறிப்பிட்ட விளக்கத்தில் உள்ளது. அதில் 10 நாட்கள் என்பதற்கு துல்ஹஜ் மாதத்தின் (முதல்) 10 நாட்கள் என்று மாதத்தின் பெயர் கூறப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியையும், இந்தக் கருத்தில் வரும் அனைத்து செய்திகளையும் இன்னும் நாம் பதிவு செய்யவில்லை. இன்ஷா அல்லாஹ் பிறகு பதிவு செய்வோம்.
நீங்கள் குறிப்பிட்ட அபுஸ்ஸுபைர் அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார். அபுஸ்ஸுபைர் தத்லீஸ் செய்பவர் என்று பிற்கால அறிஞர்கள் விமர்சனம் செய்திருப்பதால் ஸிமாஃ இல்லாத செய்திகளை சிலர் பலவீனம் என்று கூறியுள்ளனர்.
வேறு சில அறிஞர்கள் ஆரம்ப கால அறிஞரான ஷுஅபா அவர்கள் இவர் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்த அன்அனா செய்திகளை அறிவித்துள்ளார் என்பதால் இவரை ஆதாரமாக ஏற்கின்றனர். (இன்ஷா அல்லாஹ் அபுஸ்ஸுபைர் பற்றிய விரிவான தகவலை அறிவிப்பாளர்களின் விவரம் பகுதியில் பிறகு நாம் பதிவு செய்கிறோம்.)