தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-25

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 14

நபி (ஸல்) அவர்கள், சிறுநீர் கழிக்கத் தடை செய்த இடங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாபத்திற்குரிய இரண்டு செயல்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அப்போது நபிதோழர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! சாபத்திற்குரிய அவ்விரண்டு செயல்கள் யாவை? என்று கேட்டனர்.

மக்கள் (நடக்கும்) பாதையில் அல்லது அவர்கள் நிழல் பெறும் இடங்களில் ஒருவர் மலம், ஜலம் கழிப்பதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(அபூதாவூத்: 25)

14 – بَابُ الْمَوَاضِعِ الَّتِي نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْبَوْلِ فِيهَا

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«اتَّقُوا اللَّاعِنَيْنِ»، قَالُوا: وَمَا اللَّاعِنَانِ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ أَوْ ظِلِّهِمْ»


Abu-Dawood-Tamil-23.
Abu-Dawood-TamilMisc-23.
Abu-Dawood-Shamila-25.
Abu-Dawood-Alamiah-23.
Abu-Dawood-JawamiulKalim-23.




மேலும் பார்க்க: முஸ்லிம்-448 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.