ஹதீஸ் எண்-4510 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் சிறிது மாற்றமாக வந்துள்ளது. இதில்,
கைபரில் ஒரு யூதப் பெண், நபி (ஸல்) அவர்களுக்கு சுடப்பட்ட ஆடு ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார்…என்று ஆரம்பித்து ஜாபிர் (ரலி) அவர்களின் ஹதீஸில் கூறப்பட்டுள்ளதைப் போன்றே வந்துள்ளது.
(இதில் கூடுதலாக:)
(இந்த விஷம் கலந்த ஆட்டை உண்டதாலேயே) பிஷ்ர் பின் பராஉ பின் மஃரூர் அல்அன்ஸாரீ (ரலி) மரணமடைந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த யூதப் பெண்ணிடம் ஆளனுப்பி, “நீ ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கேட்டார்கள். பிறகு உள்ளவை ஜாபிர் (ரலி) அவர்களின் ஹதீஸில் உள்ளதைப் போன்றே வந்துள்ளது.
பிறகு நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். இந்த அறிவிப்பில் இரத்தம் நீக்கும் சிகிச்சை (ஹிஜாமா) பற்றிய தகவல் குறிப்பிடப்படவில்லை.
(அபூதாவூத்: 4511)حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَهْدَتْ لَهُ يَهُودِيَّةٌ بِخَيْبَرَ شَاةً مَصْلِيَّةً نَحْوَ حَدِيثِ جَابِرٍ قَالَ: فَمَاتَ بِشْرُ بْنُ الْبَرَاءِ بْنِ مَعْرُورٍ الْأَنْصَارِيُّ فَأَرْسَلَ إِلَى الْيَهُودِيَّةِ «مَا حَمَلَكِ عَلَى الَّذِي صَنَعْتِ» فَذَكَرَ نَحْوَ حَدِيثِ جَابِرٍ فَأَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُتِلَتْ وَلَمْ يَذْكُرْ أَمْرَ الْحِجَامَةِ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4511.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்