தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Al-Adabul-Mufrad-1204

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூராஷித் அல்ஹுபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றவற்றிலிருந்து எங்களுக்கு சில செய்திகளைத் தெரிவியுங்கள்’ என்று கூறினேன். அப்போதவர்கள், என்னை நோக்கி கடிதம் ஒன்றைப் போட்டார்கள். மேலும், ‘இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு (மற்றவர்கள் மூலம்) எழுதி(யனுப்பி)ய கடிதமாகும் என்று கூறினார்கள். அப்போது அதை நான் பார்த்தேன். அதில் இடம்பெற்றிருந்து செய்தி பின்வருமாறு இருந்தது:

அபூபக்ர் (ரலி) அவர்கள், (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே!, ‘நான் காலையிலும், மாலையிலும், ஓதுவதற்கேற்ற (பிரார்த்தனை) ஒன்றை எனக்குக் கற்றுத்தாருங்கள்’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்)அவர்கள், “அல்லாஹும்ம ஃபா(த்)திரஸ் ஸமாவாத்தி வல்அர்ழி, ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாத(த்)தி, லாயிலாஹ இல்லா அன்(த்)த, ரப்ப குல்லி ஷையிவ் வமலீ(க்)கஹூ, அவூது பி(க்)க மின் ஷர்ரி நஃப்ஸீ, வமின் ஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹீ, வ அன் அக்தரிஃப அலா நஃப்ஸீ ஸூஅன், அவ் அஜுர்ரஹூ இலா முஸ்லிம் என்று ஓதுங்கள்” என்று கூறினார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அவற்றின் உரிமையாளனே!. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும், ஷைத்தானின் தீங்கு மற்றும் அவனுடைய இணைவைப்பை விட்டும், எனக்கு நானே தீமை செய்வதை விட்டும், அல்லது ஒரு முஸ்லிமுக்கு தீமை செய்வதை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்)

(al-adabul-mufrad-1204: 1204)

حَدَّثَنَا خَطَّابُ بْنُ عُثْمَانَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي رَاشِدٍ الْحُبْرَانِيِّ:

أَتَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو فَقُلْتُ لَهُ: حَدِّثْنَا بِمَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَلْقَى إِلَيَّ صَحِيفَةً فَقَالَ: هَذَا مَا كَتَبَ لِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَظَرْتُ فِيهَا، فَإِذَا فِيهَا: إِنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ رَضِيَ اللَّهُ عَنْهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، عَلِّمْنِي مَا أَقُولُ إِذَا أَصْبَحْتُ وَإِذَا أَمْسَيْتُ، فَقَالَ: ” يَا أَبَا بَكْرٍ، قُلِ: اللَّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَشَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ، وَأَنْ أَقْتَرِفَ عَلَى نَفْسِي سُوءًا أَوْ أَجُرُّهُ إِلَى مُسْلِمٍ


Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-1204.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-1182.




மேலும் பார்க்க: திர்மிதீ-3529 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.