தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-486

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணை தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையை காயப்படுத்திக் கொள்வது சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: மஃகில் பின் யஸார் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 486)

حَدَّثَنَا مُوسَى بْنُ هَارُونَ، ثنا إِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ، أَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، ثنا شَدَّادُ بْنُ سَعِيدٍ الرَّاسِبِيُّ، قَالَ: سَمِعْتُ يَزِيدَ بْنَ عَبْدِ اللهِ بْنِ الشِّخِّيرِ يَقُولُ: سَمِعْتُ مَعْقِلَ بْنَ يَسَارٍ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَأَنْ يُطْعَنَ فِي رَأْسِ أَحَدِكُمْ بِمِخْيَطٍ مِنْ حَدِيدٍ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمَسَّ امْرَأَةً لَا تَحِلُّ لَهُ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-486.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-16910.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் யஸீத் பின் அப்துல்லாஹ்விடமிருந்து அறிவிக்கும் ஷத்தாத் பின் ஸயீத் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்களும், அப்துஸ்ஸமத் பின் அப்துல்வாரிஸ் அவர்கள், இவரைப்பற்றி பலவீனமானவர் என கூறியுள்ளார் என புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் அவர்களும் கூறியுள்ளனர். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1 / 432 , தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2 / 155)
  • மேற்கண்ட செய்தியின் வார்த்தையிலும், நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்தும் ஷத்தாத் பின் ஸயீத் தவறு செய்துள்ளார்.
  • அபுல் அலாஉ-யஸீத் பின் அப்துல்லாஹ் (ரஹ்) விடமிருந்து பஷீர் பின் உக்பா அறிவிக்கும் போது இந்த செய்தியை மஃகில் பின் யஸார் (ரலி) அவர்களின் கூற்றாகவும், வேறு கருத்திலும் அறிவித்துள்ளார். பஷீர் பின் உக்பா பலமானவர் என்பதால் இவரின் அறிவிப்பின்படி இந்த செய்தி  மஃகில் பின் யஸார் (ரலி) அவர்களின் கூற்றுதான் என்று தெரிகிறது. (பார்க்க : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-17316 )

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-486 , 487 , முஸ்னத் ரூயானீ-1283 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-17316 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-7214 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.