பாடம் : 8 அல்லாஹ் கூறுகிறான்:
மரணமடைந்தவர் செய்திருந்த மரண சாசனம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் அவரது கடன் அடைக்கப்பட்ட பின்னரும் தான் (அவரது சொத்து வாரிசுகளிடையே மேலே விவரித்தபடி பங்கிடப்பட வேண்டும்). (4 : 12)
நீதிபதி ஷுரைஹ் (ரஹ்), உமர் பின் அப்தில் அஸீஸ், தாவூஸ் , அதாஉ, இப்னு உதைனா (ரஹ்-அலைஹிம்) ஆகியோர், நோயாளி, தான் பட்ட கடனை ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் தருவது செல்லும் என்று அனுமதித்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.
ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள், ஒரு மனிதன் செய்யும் தருமங்களில் தகுதி மிக்கது அவன் உலக வாழ்வின் கடைசி நாளிலும் மறுமை வாழ்வின் முதல் நாளிலும் செய்யும் (மரண சாசன) தருமமேயாகும் என்று கூறினார்கள்.
இப்ராஹீம் நகஈ (ரஹ்), ஹகம் பின் உயைனா (ரஹ்) ஆகியோர் கூறினார்கள்:
மரணப்படுக்கையில் உள்ள நோயாளி ஒருவர், தன் வாரிசைக் கடனிலிருந்து விடுவித்து விட்டால் அவர் கடன் சுமையிலிருந்து விடுபட்டு விடுவார். ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் ஃபஸாரிய்யா குலத்தைச் சேர்ந்த தமது மனைவியிடம், அவரது வீட்டில் இருப்பவற்றை (அவரே வைத்துக் கொள்ளும்படியும்) மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டாம் என்று(ம்) இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்தார்கள்.
آيَةُ المُنَافِقِ ثَلاَثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ
சமீப விமர்சனங்கள்